Blogroll

Sunday, July 31, 2011

உனக்கும் கீழே உள்ளவர் கோடி

நமக்கு மேல் வசதி இருப்பவர்களைப் பார்த்து, மனம் பொருமுவதை விட நமக்கு கீழான நிலையில் உள்ளவர்களைப் பார்த்து திருப்தியடைவதே சிறந்ததாகும். இதுகுறித்து நாயகம்(ஸல்) அவர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?
""உங்களை விட கீழ் நிலைமையில் உள்ளவர்களைப் பாருங்கள். உங்களுக்கு மேலான நிலையில் உள்ளவர்களைப் பார்க்காதீர்கள். அதுவே, அல்லாஹ்வின் அருட்கொடையை நீங்கள் தாழ்மையாகக் கருதாமல் இருப்பதற்கு துணைபுரியும்,' 'என்று. அதாவது, இறைவன் அவரவருக்கென கொடுத்ததைக் கொண்டு திருப்தியடையாமல், வசதியானவர்களின் வாழ்க்கையோடு ஒப்பிட்டால், அது இறைவன் நமக்கு தந்த வாழ்க்கையை அவமதிப்பது போலாகும் என்று கொள்ள வேண்டும். இருப்பதைக் கொண்டு திருப்தியுடன் வாழ்வோமா!

0 comments:

Post a Comment

Loading...
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More