
உன் உயிர் தந்து
என் உயிர்
வளர்த்த தாயே !!
தரணியில் நானும்
அவதாரம் எடுத்திட
துணையாய்
இருந்தவளே !!
ஈரைந்து மாதங்கள்
எனை கருவாய்
வயிற்றில்
சுமந்தவளே !!
பசியால் நீ
வாடிடும் போதும்
நான் பசியறியாது
செய்தவளே !!
நோயினால் நீ
வாடிய போதும்
என் மனம்
நோகாமல்
பார்த்தவளே !!
உன்னை
என்னவென்று
நான் சொல்வேன்...
நீ தெய்வம் என்று
சொன்னால் கூட
உனக்கு அது
இழுக்கு தான்...!!
நீ தெய்வத்துக்கு
மேலே தான்
என் மனதில்...!!
Tuesday, July 26, 2011
தாயே !!
Loading... | ||



0 comments:
Post a Comment