Blogroll

வயது ஏறினால் அழகும் கூடும்!

குழந்தையாக இருக்கும் போது தொடங்கி பேரிளம் பெண்ணாக மாறும் வரை பெண்கள் ஒவ்வொரு கால கட்டத்திலும் அழகுதான். எந்தப் பெண்ணையுமே அழகில்லை என்று கூற யாருக்குமே மனசு வராது...

சுகப்பிரசவத்தை அளிக்கும் குங்குமப்பூ

எந்தப் பூவிலும் இல்லாத புதுமை குங்குமப்பூவில் உண்டு. உடல் நிறத்தை சிவப்பாக மாற்றக் கூடிய அற்புதக் குணம் இதில் நிறைந்து காணப்படுகிறது. குங்குமப்பூக்களின்..

மனைவியை புரிந்து கொள்ள.!!!

மனைவியை புரிந்து கொள்ள முடியவில்லை என்று புலம்புவர்களுக்காக இது. மனைவியை மயக்க ஐடியாக்கள் இது மனைவியை மயக்க மட்டும்தான்.. கல்யாணம் ஆகாதவர்கள் வேண்டுமானால் இதை யூஸ் பண்ணி பெண்களை மயக்க டிரைப் பண்ணலாம். மயக்குங்க ஆனா நீங்க மயங்கிடாதீங்க.

நீங்காத நினைவுகள்...

தேய்ந்தாலும் வானை விட்டு நீங்காத பிறையை போல... உதிர்ந்தாலும் மலரை விட்டு நீங்காத காம்பை போல...

அம்மா என்பவள் காத்திருப்பவள்

நினைவுகள் எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் அம்மா என்பவள் மெலிந்த தேகமும் கந்தலான உடையும் அணிந்தவள் சமையல் பாத்திரங்களுக்கு முன்பு வியர்வை துடைப்பவள் நெருப்பை சீராக வளரவிடுபவள்

Friday, September 30, 2011

உணவு.. உடை.. இருப்பிடம்.. இன்டெர்நெட்



ஒரு மனிதன் வாழ அத்தியாவசிய தேவை உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இருப்பிடம்.. இது கடந்த காலங்களில்.. தற்போது இதனுடன் ஒன்று புதிதாக இனைந்துள்ளது.. ஆம்.. இன்டெர்நெட்...

இன்றைய இணைய உலகில் ஐம்பதை தாண்டிய பெரிசுகளே காதில் ஐபாடும், கையில் செல்போனுமாக திரிகிறபோது இளைஞர்களை பற்றி கேட்கவா வேண்டும்? காற்று, தண்ணீர், உணவை விட இன்டர்நெட் தேவைதான் இன்றைய இந்திய இளைஞர்களுக்கு மிக அத்தியாவசிய தேவையாகிப்போனதாக தெரிவிக்கிறது ஆய்வு ஒன்று.

முன்பாவது இணையத்தில் உலாவர கம்ப்யூட்டர், அதன் பின்னர் லேப்டாப் என தேவையாக இருந்தது. ஆனால் இப்போது கையில் உள்ள 5 அங்குல மொபைல்போனிலேயே ஒட்டுமொத்த உலகையும் இழுத்துவந்துவிடுகிறது இணையம்.

கல்லூரி செல்லும் மாணவ,மாணவிகள்,பணிக்கு செல்லும் இளைஞர்கள்...அவ்வளவு ஏன் பள்ளிக்கு செல்லும் பையன்கள் கூட இன்டர்நெட் இணைப்புடன் கூடிய மொபைல்போன் சகிதமாகத்தான் உலா வருகின்றனர். ஆனால் அந்த இணைய இணைப்பை பயன்படுத்திக் கொள்வதில்தான் நபருக்கு நபருக்கு மாற்றம்!

இந்நிலையில் இன்றைய இளைஞர்களிடம் இன்டர்நெட் பயன்பாடு எந்த அளவில் உள்ளது என்பது குறித்து ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.

இதில் ஐந்துக்கு நான்கு கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளவயது பணியாளர்கள், இன்டர்நெட் தங்களுக்கு முக்கியமானது என்றும், தங்களது வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியமானது என்றும் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ, பிரேசில்,பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட 14 நாடுகளை சேர்ந்த 1,441 கல்லூரி மாணவர்கள் (18 முதல் 24 வயதுடையவர்கள்) மற்றும் 1,412 இளவயது பணியாளர்களிடம் (21 முதல் 29 வயதுடையவர்கள்) இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

பாங்காக் டேஞ்சரஸ் - விமர்சனம்


முதலில் அந்த போஸ்டர்தான் ஈர்த்தது. தற்கொலை செய்யும் பொருட்டு இடது நெற்றியில் துப்பாக்கியை அழுத்திப் பிடித்திருக்கும் இளைஞனின் புகைப்படம். சுய இரக்கமும், தோல்வியும் ததும்பும் இளவயது முகம். யாரையும் பச்சாதவிக்க வைக்கும் அந்த இளைஞனின் முகம்தான் பாங்காக் டேஞ்சரஸ் படத்தைப் பார்க்க‌த் தூண்டியது.

பாங்காக் டேஞ்சரஸ் தாய்லாந்தில் உருவான படம். இரு தொழில்முறை கொலையாளிகளை பற்றிய கதை. ஹீரோவுக்கு காது கேட்காது. அதனால் பேசவும் வராது. அவனுக்கொரு நண்பன். இருவரும் இணைந்துதான் தங்களது தொழிலை நடத்தி வந்தனர். நண்பனுக்கு ஒரு காதலி. பா‌ரில் ஸ்ட்‌ரிப்பராக வேலை பார்ப்பவள்.

ஹீரோ எதேச்சையாக மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்யும் இளம் பெண்ணுடன் நட்பாகிறான். தனது புதிய நண்பன் ஒரு தொழில்முறை கொலையாளி என்பது தெ‌ரியாமலே அவளும் நட்புடன் பழகுகிறாள். ஒருகட்டத்தில் அவளுக்கு உண்மை தெ‌ரிகிறது. அவனை தவிர்க்க ஆரம்பிக்கிறாள்.

இதனிடையில் நண்பனின் காதலியை ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்கிறான். நண்பன் அவனை கொன்று விடுகிறான். கொலை செய்யப்படுகிறவனின் ஆட்கள் நண்பனை கொல்கிறார்கள். ஒருபுறம் தோழியின் பாராமுகம். இன்னொருபுறம் நண்பனின் படுகொலை. ஹீரோ துப்பாக்கியுடன் புறப்படுகிறான். எதி‌ரிகளுடன் நடக்கும் மோதலில் நண்பனின் காதலி கொல்லப்படுகிறாள். யுத்தம் தொடர்கிறது. வில்லனின் ஆட்கள் அனைவரும் கொல்லப்படுகிறார்கள். வில்லன் ஹீரோவிடம் மாட்டிக் கொள்கிறான்.

சண்டை நடக்கும் இடத்தை போலீஸ் சுற்றி வளைக்கிறது. ஹீரோவின் இறுதி கடிதத்தைப் படிக்கும் தோழி அவன் மீதான ப்‌ரியத்தில் சண்டை நடக்கும் இடத்துக்கு வருகிறாள். ஹீரோ வில்லனுடன் வெளியே வருகிறான். இனி தப்பிக்க வழியில்லை. நண்பனின் இழப்பும், அவனது காதலியின் மரணமும் ஹீரோவுக்கு கடும் துயரை தருகின்றன. இதுவரை செய்த படுகொலைகள் ஒவ்வொன்றாக அவன் நினைவுக்கு வருகின்றன. பெரும் கழிவிரக்கத்துக்கு ஆட்படுகிறவன் தனது இடது நெற்றியில் துப்பாக்கியை வைத்து ட்‌ரிக்கரை அழுத்துகிறான். குண்டு நெற்றியை துளைத்து அவன் பிடித்து வைத்திருக்கும் வில்லனின் தலையையும் சிதறடிக்கிறது.

இந்த‌க் கதையின் இரண்டாவது பாராவை படிக்கும் போதே உங்களுக்கு விஷ்ணுவர்தன் இயக்கிய பட்டியல் நினைவுக்கு வந்திருக்கும். பாங்காக் டேஞ்சரஸ் படத்தைதான் விஷ்ணுவர்தன் பட்டியலாக்கியிருக்கிறார். கதை, கதாபாத்திரங்கள் எல்லாம் அப்படியே. ஹீரோவின் தோழி மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்கிறாள். பட்டியலில் பூஜவேலை பார்ப்பதும் ஒரு மருந்து கடையில்தான். பூஜாவுக்கு வீட்டில் ஒரேயொரு துணை அவளது பாட்டி மட்டுமே. இந்தப் படத்தில் ஹீரோயின் வீட்டிற்கு செல்லும் போது, கடவுளே ஒரு பாட்டி வந்து கதவை திறக்கக் கூடாது என்று பிரார்த்தித்தேன். விஷ்ணுவர்தன் ஏமாற்றிவிட்டார். பாட்டிதான் கதவை திறந்தார்.

ஹீரோயினின் வேலை, உறவு முதற்கொண்டு அனைத்தையும் அப்படியே அடித்திருக்கிறார்கள். என்றாலும் சென்டிமெண்ட் விஷயத்திலும், ஹீரோ மற்றும் அவனது நண்பன் கதாபாத்திரத்தை மெருகேற்றியதிலும் விஷ்ணுவர்தனை பாராட்டியே ஆக வேண்டும். இந்த விஷயத்தில் சர்வத்தைவிட பட்டியலில் அவர் சாதித்திருக்கிறார். சர்வம்... 21 கிராம்ஸ் படத்தின் தழுவல்.

நிற்க. பாங்காக் டேஞ்சரஸ் படத்துக்கு வருவோம். இந்தப் படத்தை இரட்டையர்களானOxide Pang, Danny Pang 1999ல் இணைந்து உருவாக்கினர். இவர்கள் இணைந்து இயக்கிய முதல் படம் இது. 2008ல் நிக்கோலஸ் கேஜை வைத்து இதே பெய‌ரில் ஒரு படத்தை இயக்கினார்கள். என்றாலும்,

முதல் படத்தின் அருமை இரண்டாவதில் இல்லை.

Wednesday, September 28, 2011

மன அழுத்தத்தை வெளியேற்றுங்கள்!


பரபரப்பான இன்றைய கால கட்டத்தில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் முதல் வேலைக்கு செல்பவர்கள் வரை அனைவரும் ஏதோ ஒரு சூழலில் மன அழுத்த நோயினால் பாதிக்கப்படுகின்றனர். பணிச்சூழல், வீட்டில் ஏற்படும் பிரச்சினைகள் போன்றவற்றால் மன அழுத்தம் தாக்குவதால் பலரும் தன்னிரக்கத்தைத் தவிர்க்க முடியாமல் தவிக்கிறார்கள். “எனக்கேன் இது நிகழ்ந்தது மற்றவர்களுக்கு இப்படி இல்லையே” என்கிற எண்ணங்கள் எழும்போது தன்னிரக்கம் அவர்களின் செயல் திறனை மேலும் பாதிக்கிறது. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகளை உளவியல் வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


பொறுமை அவசியம்


அழுத்தம் கொடுக்கும் பதட்டம் காரணமாக சில தவறான முடிவுகளை எடுக்கக் தோன்றும். அந்த நேரப் பதட்டத்தில் எது தவறு எது சரி என்று சிந்திக்காமல் செயல்படுவது பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, மனம் பதட்டமாக இருக்கும்போது முடிவெடுப்பதைத் தள்ளிப்போடுங்கள். பத்துவரை மனதுக் குள்ளேயே எண்ணி விட்டு, சிறிது தூரம் உலவிவிட்டு, பதட்டம் தணியும்வரை பொறுமையாய் இருந்தால் ஆக்கபூர்வமான முடிவுகள் சாத்தியமாகும்.

கூடுதல் பாரங்களை சுமக்கவேண்டாம்

பொதி சுமக்கும் காளையின் மீதுதான் அதிக பாரம் ஏற்றப்படும் இது உலக இயல்பு. எதையும் எளிதாக செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை இருந்தாலும் கூடுதல் பாரங்கள் மன அழுத்தத்தை வளர்த்துவிடும். எனவே எல்லோரையும் திருப்திப்படுத்துவது என்பது இயலாத காரியம் என்பதால், செய்ய முடியாதவற்றையும் செய்ய விரும்பாதவற்றையும் நாசூக்காக மறுத்துச் சொல்வதே நல்லது.

ஆழ்ந்த சுவாசமே தீர்வு

மனதில் உருவாகும் அழுத்தம் வந்து படிகிற இடங்களில் ஒன்று கடைவாய் இணைப்புகள். பற்களை இறுகக்கடித்து, காதுக்குக்கீழ் சுட்டுவிரலால் அழுத்திக் கொண்டு, நீளமாக மூச்சிழுப்பதும், வாயைத் திறந்தபடி காற்றை வெளியே விடுவதும், அழுத்தத்தின் சுவடுகளை உடலில் தங்காமல் வெளியேற்ற மேலைநாட்டு ஆய்வாளர்கள் கண்டு பிடித்திருக்கின்ற வழி.

ஆழ்ந்த சுவாசத்தின் மூலம் இரத்தத்தில் பிராணவாயுவின் அளவு அதிகரிப்பதால் உங்கள் தசைகள் தளர்வுநிலை அடைகின்றன. மனம் இயல்புநிலை அடைகின்றது. அடிவயிற்றில் கையை லேசாக அழுத்திக்கொண்டு ஆழமாக சுவாசிப்பதன் மூலம் அடிவயிற்றின் அசைவுகளையும், உடலும் மனமும் தளர்வு நிலை அடைவதையும் கண்கூடாக உணரலாம்.


கற்பனையே வெற்றிக்கு வழி

அமைதியான இடத்தில் அமர்ந்து கற்பனையாய் சிந்திப்பது பலனளிக்கும் என்கின்றனர் உளவியலாளர்கள். பூப்பூவாய்த் தூவும் வென்னீர் ஷவரின் கீழ் கண்மூடி நிற்பது போலவும், அதில் அழுத்தங்களும் பதட்டங்களும் அடித்துக் கொண்டு போவது போலவும் மனதுக்குள் ஒரு காட்சியை வரைந்து பார்க்கச் சொல்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.

மனதை இலேசாக்கும் இசை

அடைந்துகிடக்கும் உணர்வுகளை விடுவிக்கும் சக்தி திறந்தவெளிக்கு இருக்கிறது. அறைக்குள்ளேயே முடங்கிக் கிடக்காமல் வெளியே வந்து, ஆகாயத்தை, அலையலையாய்ப் போகும் மேகங்களைப் பார்ப்பது பயன்தரும் என்கிறார்கள் மனநல நிபுணர்கள். எத்தகைய பதட்டத்தையும் தணித்து அமைதிப்படுத்தும் சக்தி இசைக்கு உண்டு. இசையை கேளுங்கள் அல்லது வாய்விட்டுப் பாடுங்கள். உங்கள் இதயம் படபடவென்று அடித்துக்கொள்வதை அது கட்டுப்படுத்தும். நறுமணம் தரும் மலர்கள், எண்ணெய்கள் போன்றவற்றை நுகர்வதன் மூலம் மனதை மிக விரைவில் லேசாக்கிக் கொள்ளமுடியும்.

வெது வெதுப்பான வெந்நீர் குளியல்

டேவிட் சோபெல் என்ற மனநல மருத்துவர், மிக எளிதான வழியொன்றைச் சொல்கிறார். இரண்டு கைகளையும் பரபரவென்று தேய்த்து மூடிய கண்களுக்கு மேல் வைத்து, ஆழமாக சுவாசிக்கும்போதே அந்த உஷ்ணத்தையும் உள் வாங்குகிறபோது, புதிய உத்வேகம் உங்களுக்குள்ளேயே உருவாகும் என்கிறார் அவர்.

வெறுப்பாக இருந்தால் வெந்நீர்க் குளியல் போடுங்கள் என்கிறார் டாக்டர் வெஸ்டன். குளிக்கும் அளவு நிலைமையோ நேரமோ இல்லையென்றால் வெந்நீரில் கைகால்களையாவது கழுவுங்கள். இதம் செய்யும் ஆற்றல் வெந்நீருக்கு இருக்கிறது என்கிறார் அவர்.


அழுத்தம் போக்கும் உணவுகள்

வைட்டமின் பி, மற்றும் கால்ஷியம் போன்ற சத்துள்ள உணவுகளை உண்பவர்கள் எளிதாக மன அழுத்தத்திற்கு ஆளாக மாட்டார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். கார்போஹைட்ரேட் கொண்ட நொறுக்குத் தீனியை நொறுக்கினால் அதிலுள்ள செரிடானின் உங்கள் மனதை அமைதிப்படுத்தும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கவலைகளை ஆராயுங்கள்

நெஞ்சில் ஏதோ எண்ணங்கள் கனக்கத் தொடங்கிவிட்டால் கொஞ்சதூரம் நடந்துவருவது பயன்தரும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். வெளியே உலவுவதற்கு நேரம் ஒத்துழைக்காத நிலையில் அலுவலகத்துக்குள் அங்குமிங்கும் உலவுவது இடைக்கால நிவாரணம் போன்றது.

மனதில் தோன்றும் கவலைகள் எல்லா நேரமும் உங்களை அரித்தெடுப்பதை அனுமதிக்காதிருக்க வழி உண்டு. கவலைகள் என்னவென்று பார்க்க சில மணி நேரம் ஒதுக்க வேண்டும். அந்த நேரத்தில் கவலைகளை ஆராய்ந்து அவற்றை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்
.

செடி கொடிகளுடன் சில நேரம்

செல்லப் பிராணிகள் வளர்ப்பவர்களுக்கு, இரத்த அழுத்தம் ஏற்படுவதில்லை என்று நியூயார்க்கில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், தெரிய வந்துள்ளது. பேச முடியாத, பார்க்க முடியாத தாவரங்களிடம் ஜீவசக்தி நிரம்பி வழிகிறது. ஒரு செடியுடனோ மரத்துடனோ நெருக்கமாக சிறிது நேரத்தை செலவிடுங்கள். அழுத்தம் அகல்வதை உணர்வீர்கள்.

அழுத்தம் போக்கும் பிரார்த்தனை

பதற்றமான சூழலில் நுணுக்கமான விஷயங்களை நோக்கிக் குவியாமல் மனம் அலைபாயத் தொடங்கும். அப்போதெல்லாம், ஒரு சின்ன விஷயத்தை எடுத்துக்கொண்டு அதில் முழு கவனத்தை செலுத்துங்கள். உங்கள் மனம் இயல்பு நிலை அடைவதை உணர்வீர்கள்.

சோர்வு வரும்போது சுருண்டு படுக்கத்தான் மனது சொல்லும். முதுகுத்தண்டை நிமிர்த்தி நேராக, உட்காரும்போது இரத்த ஓட்டம் நன்கு நிகழ்ந்து உங்கள் சக்தியைப் பெருக்கும்.

மன அழுத்தம் மாறுவதற்கு வஜ்ராசனத்தில் அமருங்கள் என்று சொல்பவர்கள் நம் ஊர் யோகக்கலை வல்லுநர்கள் மட்டுமல்ல. வெளிநாட்டினரும் இதனை உறுதி படுத்துகின்றனர். குழந்தைபோல் மண்டியிட்டு கண்மூடி குதிகாலின் மீது சிறிது நேரம் அமருங்கள். அதுதான் வஜ்ராசனம். மெல்லக் குனிந்து முன் நெற்றியை நிலத்தில் பதியுங்கள். இதையே சில தடவைகள் செய்யுங்கள். இஸ்லாமியர்கள் தங்களின் ஒவ்வொரு தொழுகைகளிலும் க‌டைப்பிடிக்கிறார்கள்

மனமுருகும் பிரார்த்தனை, மன ஒருமை கொண்டு செய்யும் தியானம் இவையெல்லாம் மன அழுத்தத்தை விரட்டியடிக்கிற வல்லமை கொண்டவை என்கின்றனர் மனநல மருத்துவர்கள்.



கனவு காண்பதால் மூளை சுறுசுறுப்படையும்!


ஏதாவது தவறு செய்துவிட்டாலோ, அல்லது நினைவில்லாமல் மறந்துவிட்டாலோ பிறரிடம் இருந்து முதலில் வரும் கேள்வி என்ன புத்தி மழுங்கிப் போச்சா என்பதுதான். அந்தளவிற்கு மனிதர்களுக்கு தலைமைச் செயலகமான மூளையின் பங்கு முக்கியமானது.

மனிதர்களுக்கு வயசாக வயசாக, ஞாபக மறதி, தோல் சுருக்கம், நடை தளர்ச்சி, மூட்டுவலி இப்படி எத்தனையோ பிரச்சினைகள் வரத்தொடங்கும். அவற்றை தவிர்க்க முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் முதுமையினால் ஏற்படும் நோய்களை ஏற்றுக்கொள்ளும் மனமானது வயசு ஏற ஏற அறிவும் கூட வளறவேண்டும் என்றுதான் நினைக்கிறது.

எனவே வயது முதிர்ச்சியுடன் சேர்த்து, அறிவு முதிர்ச்சியும் இருக்க வேண்டும் என்பதற்காக விஞ்ஞானப்பூர்வமான ஆதாரங்களோட, பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில முத்தான 10 வழிகளை சமீபத்துல ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அவைகளை உங்களுக்காகக் கொடுத்துள்ளோம்.


ஒரு நாளைக்கு 4 காஃபி

காலையில் எழுந்த உடன் ஆற அமர ருசித்து காஃபி குடியுங்கள். ஏனெனில் காஃபியில் உள்ள கெஃபீன் என்னும் வேதிப்பொருள், மூளையை பாதுகாக்கிறது. நாளொன்றுக்கு நான்கு கப் காஃபி குடித்தால் அல்ஷெய்மர்ஸ் என்ற நினைவாற்றலை பாதிக்கும் நோய் வராமல் தடுக்கப்படுகிறதாம். இந்த மருத்துவத்தன்மையானது, காஃபியில இருக்குற கெஃபீன் லேர்ந்து கிடைக்கிறதா ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் என்னும் வேதிப்பொருள்லேர்ந்து கிடைக்கிறதா என்பது பற்றியும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.


மூளையைத் தூண்டுங்கள்

எவ்வளவுக்கு எவ்வளவு உங்க மூளையை கசக்கி ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்ள முயற்சி செய்கிறீர்களோ, அவ்வளவும் உங்க முதுமைக் காலத்துல அறிவு முதிர்ச்சிக்கு வித்திடுமாம்!. ஒரு புது கணக்குக்கு விடை கண்டுபிடிக்கிறதுல மூளைக்கு கிடைக்குற பலனைவிட, சிக்கல் விளையாட்டுல எல்லா பகுதியையும் ஒன்னா சேர்க்குறதுல கிடைக்குற பலன் ரொம்பக் குறைவாம். குறுக்கெழுத்துப் போட்டியோ அல்லது அதற்கு இணையான மூளைப் பயிற்ச்சி விளையாட்டுகளோ, இவை எல்லாம் மூளையை பெரிதாக மேம்படுத்துகின்றன என்பதை திட்டவட்டமான ஆதாரங்களுடன் வரையறுக்கும் ஆய்வுகள் இதுவரை இல்லை!.

மன உளைச்சலை குறைங்க

மன உளைச்சலினால் நினைவாற்றல் சக்திக்கு அடிப்படையான மூளையின் ஹிப்போகேம்பஸ் மற்றும் இன்னும் சில பகுதிகளில் விஷத்தன்மையுள்ள பல ரசாயனப் பொருள்கள் கொட்டப்படுகிறதாம். யோகா, நண்பர்களுடன் பேசுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டால், மன உளைச்சல் குறைந்து, நினைவாற்றல் அதிகரிக்கிறது என்கிறது ஆய்வு

கனவு காணுங்கள்!

கனவு காண்பதால் மூளை வளர்ச்சியடையும் என்ற அதிசயிக்கத்தக்க உண்மை கண்டறியப்பட்டுள்ளது. கண்களை திறந்து கொண்டே பகல் கனவு காண்பதால் எந்த பிரயோசனமும் இல்லை. சரியான நேரத்தை ஒதுக்கி, உறங்கும்போது, வரும் கனவுகள் ஒருவரின் நினைவாற்றல் மீதான மேற்பார்வை செய்யும் மூளை, தேவையில்லாதவற்றை அழித்து, முக்கியமானவற்றை செப்பனிட்டு பாதுகாக்கிறதாம். ஆனால் சரியான தூக்கமின்மையால் நம் நரம்புத் தொடர்புகளின் (synapses) மீது, ஒரு வித புரதங்கள் தேங்கி, சிந்திக்கும் மற்றும் கல்வி கற்கும் திறன் குறைந்து போகிறதாம். முக்கியமா, வருடக்கணக்கில் சரியான தூக்கமில்லாதவர்களுக்கு, அவர்களின் முதுமையில் அறிவுத்திறன் பெரிதும் குறைந்துவிட வாய்ப்புகள் இருக்கிறதாம்!


சுறுசுறுப்பான செயல்பாடு

நாளொன்றுக்கு 30 நிமிடங்கள் சுறுசுறுப்பாக ஏதாவது வேலை செய்யவேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள். இது மூளை ஆரோக்கியத்தை மிகவும் மேம்படுத்துகிறதாம். நடப்பது, தோட்ட வேலை செய்வது, ஓடுவது இப்படி எதுவாக இருந்தாலும் அரைமணி நேரம் தொடர்ந்து செய்தால் மூளை வளர்ச்சி அதிகரிக்குமாம்.

நோயின்றி வாழ்வோம்

வருமுன் காத்துக்கொள்ளக் கூடிய நோய்களான, நீரிழிவு நோய் (Type II diabetes), உடல்பருமன், ரத்தக் கொதிப்பு போன்றவை கூட ஒருவரின் மூளையை பாதிக்கின்றனவாம்! உடலளவிலான எல்லா உபாதைகளுமே, மூளையின் கற்கும் திறனையும், நினைவுத்திறனையும் பெரிதும் பாதிக்கின்றனவாம். எனவே உடலை பேணுவதன் மூலம் மூளை வளர்ச்சியை அதிகரிக்கலாம்.

உணவுக் கட்டுப்பாடு

அதிகமாக உண்ணுவதன் மூலம் மூளை சோர்வடைந்து நினைவாற்றல் பாதிக்கிறதாம். அதேசமயம், உணவுக் கட்டுப்பாடு என்ற பெயரில் மிகவும் குறைவாக உட்கொண்டாலும் மூளை பாதிக்கப்படுகிறதாம். அவர்கள் கவனச்சிதறல், குழப்பம் மற்றும் நியாபகச் சக்தி குறைவு போன்ற உபாதைகளால் பாதிக்கப்படுகிறார்களாம். எனவே அதிக நார்ச்சத்துள்ள மிதமான அளவில் கொழுப்பும் புரதமும் உள்ள உணவை உட்கொள்வதன் மூலம் செரிமானச் செயல்பாடானது சீராக நடைபெற்று உடல் பாகங்களின் ஆரோக்கியத்தை நீண்டகாலம் பாதுகாத்து சரியான நிலையில் வைத்திருக்க உதவுகிறது.


மீன் சாப்பிடுங்க

மூளைவளர்ச்சியை அதிகரிப்பதில் ஒமேகா 3 எனப்படும் கொழுப்பிற்கு முக்கிய பங்குண்டு. இது மீன்களில் அதிகம் காணப்படுகிறது. ஒமேகா 3 கொழுப்பு நிறைந்த விதைகளையும் அதிகம் உண்ணலாம். மீன் எண்ணெய் மாத்திரைகள் தேவையில்லை.

மாத்திரைகளை தவிருங்கள்

வைட்டமின், தாது மாத்திரைகள் அப்புறம் சில நினைவாற்றல் மாத்திரைகள் எல்லாம் மூளைவளர்ச்சியை மேம்படுத்துவதாக சொல்லப்படுகிறது. இவற்றை உட்கொள்வதன் மூலம் ரத்தக் கொதிப்பு, செரிமானக் கோளாறு, மலட்டுத்தன்மை பிரச்சினைகள், மன உளைச்சல் போன்ற நோய்களும் தோன்றுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

என்ன 'கத்திக் கத்தி' டென்ஷனாவைத விட்டு விட்டு 'புத்தியை' தீட்ட சுறுசுறுப்பாக கிளம்பிவிட்டீர்களா?

Tuesday, September 27, 2011

நகைச்சுவை

Sunday, September 25, 2011

உறவுகளை மதித்தால் பிரிவுகள் இல்லை



அன்பு என்ற வார்த்தைக்கு நிகரேது. அதனால்தான் அன்பின் பெருமையை எடுத்துக்கூறும் விதமாக திருவள்ளுவர் அன்புடைமை பற்றி தனி அதிகாரமே எழுதியுள்ளார். அன்பில் இடைவெளி விழுவதால்தான் கணவன் மனைவி இடையே பிரிவினை ஏற்படுகிறது. பந்தங்கள் பலவீனமடைகின்றன. அதனை அன்பின் மூலமாக மட்டுமே சரி செய்ய முடியும். பிறருக்காக இரக்கப்படுவது மட்டும் அன்பாகி விடாது. தன்னை நேசிக்கத் தெரிந்தவர்களால் மட்டுமே மற்றவரை நேசிக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர் அறிஞர்கள்.

தூய அன்புடன் உணர்வுப்பூர்வமான உறவை உருவாக்க அன்புகாட்டுதல், அக்கறை கொள்ளல், புரிந்து கொள்ளல், மதித்தல், பாராட்டுதல், ஏற்றுக்கொள்ளல், நம்பிக்கை வைத்தல் போன்ற 7 பண்புகள் வேண்டும் என்கிறார் ஜான்கிரே.

அன்பிலும் பல வகை இருக்கிறது. நட்பு, காதல் சார்ந்த அன்பு இருக்கிறது. என்னுடையது விட்டுத்தரமாட்டேன் என்பது வெறித்தனமான அன்பு. அதனை பொஸசிவ்னஸ் என்றும் கூறலாம். ஒரே பின்னணி பார்த்து வருவது செயல்பூர்வமான அன்பு. தியாகம் செய்வது தன்னலமற்ற அன்பாகும். அன்பு என்பது ஒன்றிணைக்கும் மனோபாவம். இரண்டு தனித்தீவுகளை இணைக்கும் உறவுப்பாலம். பயமுறுத்தினாலும் பணியாது அன்பு. சிறைப்படுத்தினாலும் இணங்காது, துக்கத்தை வெல்லும் தன்மையுடையது அன்பு.

அன்பின் சிகரம்

அக்கறை செலுத்துவது என்பது அன்பின் மற்றொரு படிநிலை. சின்னச் சின்னத் தேவைகளிலும் ஆழமான கவனம் செலுத்தி அவற்றை நிறைவேற்ற உதவுவதே அக்கறையாகும். மற்றவர்களின் முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்தி, சோகத்திலும் உடனிருப்பது அவர்களுக்கு உங்கள் ஆதரவை எப்போதும் தருவது அக்கறை மிகுந்த அன்பாகும். எவர் ஒருவர் நேசிப்பவருக்காக மட்டுமல்லாது வெறுப்பவர் மீதும் அக்கறையை செலுத்துகின்றனரோ அவரே அன்பின் சிகரமாவார்.

மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்

புரிதல் இல்லாதவர்கள் சேர்ந்து வாழவே முடியாது. துணைவர் மற்றும் மற்றவர்களின் உரிமைகள், ஆசைகள், தேவைகளை அறிந்து நடப்பதும், அவற்றை மதித்து அவருக்கு உதவுவதுமே புரிந்து கொள்ளல் ஆகும். புரிந்து கொள்ளுதல் இல்லாததால் எத்தனையோ குடும்ப உறவுகள் சிதைந்திருக்கின்றன. மற்றவர் உங்களை புரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணுவதற்குப் பதிலாக முதலில் நீங்கள் மற்றவரை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். மனைவி கணவரை மதிப்பதுபோலவே கணவரும் மனைவியை மதித்தால் குடும்பத்தில் பிரச்சினையே இல்லை.

அன்பெனும் ஆயுள் காப்பீடு

பாராட்டு தொடரும்போது அன்பு இன்னும் ஆழமாகிறது. புகழ்வதெல்லாம் பாராட்டாகிவிட முடியாது. இயல்பை விளக்கி, முழுமையை அங்கீகரிப்பதே பாராட்டாகும் என்பதை மறந்துவிடாதீர்கள். பாராட்டுவதால் மனித மனம் மகிழ்வுறுகிறது. ஒருவரின் முயற்சிகள் அல்லது நடத்தையை அங்கீகரித்து பாராட்டுவது அவருக்கு ஊக்கத்தைத் தருகிறது. ஒருவரை ஊக்குவிப்பது இணக்கம் அதிகமாகும். பாராட்டுகளை ஆயுள் காப்பீடுபோல அவ்வப்போது புதுப்பித்து வாருங்கள். உறவு பலப்படும்.

நம்பிக்கையே வாழ்க்கை

நம்பிக்கை என்பது அன்பின் பரிசாகும். நம்புதல் ஏற்படும்போது அன்பு தானாக மலர்ந்துவிடும். நேர்மை, ஒழுக்கம், உண்மையாயிருத்தல் போன்றவை மற்றவர்க்கு நம்மீது நம்பிக்கை ஏற்படுத்தும் பண்புகளாகும். கணவரின் நடத்தையை நம்பி ஏற்றுக்கொள்ளும்போது சந்தேகப் பேய் ஒழிந்து குடும்பத்தில் சந்தோஷம் கூடுகிறது.

ஒருவரை புரிந்து கொண்டு அப்படியே ஏற்றுக் கொள்வது உண்மையான அன்பாகும். ஏற்றுக் கொள்ளல் என்பது தவறுகள் உள்ளிட்ட எல்லாவற்றையும் அனுமதித்தலை குறிப்பதல்ல. குறைகளை மன்னிப்பதாகும். குறைகூறுவதை கைவிடுங்கள், கோபத்தோடு படுக்கச் செல்ல வேண்டாம். மன்னியுங்கள். மன்னிப்புக் கேளுங்கள். மகிழ்ச்சி பெருகும்.

உறவின் முதலீடு

கணவன் மனைவி அன்புறவு நீடிக்கவேண்டு மெனில் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் `நான் உன்னை நேசிக்கிறேன்’ என்று கூறுங்கள். வரவேற்கவும், விடைபெறவும், நன்றி கூறவும் அன்புத் தழுவலை கொடுங்கள். அன்புடன் அணைத்தல் என்பது உறவின் முதலீடு, பிரிவின் தடுப்புக்கோடு.

நல்ல துணைவரைத் தேடுவதைப்போலவே நல்ல துணைவராக இருப்பது மிகவும் நல்லது. கருத்து வேறுபாடு ஒருவர் மற்றவரை சாதாரணமாக எடைபோட வைக்கும். இந்த முரண்பாட்டை முரட்டு வார்த்தைகளால் வெளிப்படுத்தாதீர்கள்.

அகந்தையும், மற்றவரின் உதவாத அறிவுரைகளும் தம்பதிகளுக்குள் குழப்பத்தை உண்டு பண்ணும். உயர்விலும், தாழ்விலும், சுகத்திலும், துக்கத்திலும் காதலில் மகிழ்ந்திருந்தால் இல்லறம் நல்லறமாகும்.

மனம் மகிழும் மணவாழ்க்கைக்கான தாரக மந்திரங்கள்!




திருமணம் என்பது இருமணம் இணைவது மட்டுமல்ல. இருவேறு குடும்பங்களின் சங்கமம். தலைமுறை தலைமுறையாக சொந்த பந்தங்கள் தழைத்தோங்கும் என்பதால்தான் திருமணத்தை ஆயிரம் காலத்து பயிருக்கு சமமாக ஒப்பிடுகின்றனர். பெற்றோர் பார்த்து நிச்சயம் செய்யப்படுவதுதான் என்றாலும் திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயம் செய்யப்படுவதாக பழமொழி தெரிவிக்கின்றன.

திருமணத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பது போன்ற பழமொழியும் வழக்கத்தில் உள்ளன.

பெற்றோர்கள் பார்த்து நிச்சயம் செய்வதோடு மட்டுமல்லாது காதல் திருமணங்களும் பெருகிவரும் இன்றைய கால கட்டத்தில் திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கையின் அவசியத்தை இன்றைய தலைமுறையினர் எந்த அளவிற்கு உணர்ந்து வைத்துள்ளனர் என்பது புரியாத புதிராக உள்ளது.

அதனால்தான் ‌‌சி‌‌ன்ன ‌சி‌ன்ன கரு‌த்து மோத‌ல்களு‌க்கு எ‌ல்லா‌ம் ‌விவாகர‌த்து கே‌ட்டு நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ன் படிகளை ஏறு‌வோரின் எ‌ண்‌ணி‌க்கை அ‌திக‌ரி‌த்து வரு‌கிறது. காதல் திருமணமோ, நிச்சயம் செய்யப்பட்ட திருமணமோ எதுவாக இருந்தாலும் தம்பதிகள் ஒத்துப்போனால் மட்டுமே அவர்களுடைய வாழ்க்கையில் நிம்மதி இருக்கும்.

குடு‌ம்ப ‌பிர‌ச்‌சினைக‌ளி‌ல் பெரு‌ம்பாலு‌ம் கணவனது குடி‌ப்பழ‌க்க‌ம், வேலை‌யி‌ல்லாத கணவ‌ன், குடு‌ம்ப‌த்தை நட‌த்துவத‌ற்கான வருமான‌ம் இ‌ன்‌மை, கணவரது தா‌ய் ம‌ற்று‌ம் தம‌க்கைய‌ரி‌ன் கொடுமை, அ‌ல்லது பா‌லிய‌ல் ‌பிர‌ச்‌சினை‌க‌ள் போ‌ன்றவை ஒரு பெ‌ண்‌ணி‌ற்கு எ‌திராக ‌நி‌ற்‌கி‌ன்றன. பெரு‌ம்பாலு‌ம் ‌திருமண‌த்‌தி‌ற்கு மு‌ன்பு, கணவரது ‌வீ‌ட்டா‌ர் கூறு‌ம் பொ‌‌ய்களே, பல ‌விவாகர‌த்துகளு‌க்கு அடி‌ப்படையாக உ‌ள்ளது.

இதே‌போல, குடு‌ம்ப‌த்‌தி‌ற்கு ஒ‌த்து வராத பெ‌ண், குடு‌ம்ப சூ‌ழ்‌நிலை‌க்கு ஏ‌ற்ப மா‌ற்‌றி அமை‌த்து‌க் கொ‌ள்ளாத பெ‌ண், ஊதா‌‌ரி‌த் தன‌ம், பல ஆ‌ண்க‌ளி‌ன் சகவாச‌ம், குடு‌ம்ப‌த்‌தி‌ற்கு அட‌ங்காத பெ‌ண் போ‌ன்றவை ஆ‌ணி‌ன் மு‌ன் ‌நி‌ற்கு‌ம் ‌பிர‌ச்‌சினைகளாகு‌ம்.

சவால்களை சமாளியுங்கள்

கணவனோ, மனை‌வியோ எ‌ந்த ‌வித‌த்‌தி‌ல் ‌பிர‌ச்‌சினை வ‌ந்தாலு‌ம், இருவரு‌ம் ஒரு அ‌ணி‌‌யி‌‌ல் ‌நி‌ன்று ‌பிர‌ச்‌சினையை சமா‌ளி‌க்கு‌ம் போது குடு‌ம்ப‌‌ம் வலு‌ப்பெறு‌ம். ஆனா‌ல், அவ‌ர்களு‌க்கு‌ள்ளாகவே ‌பிர‌ச்‌சினையை உருவா‌க்‌கி‌க் கொ‌ண்டு இரு அ‌ணிகளாக ‌நி‌ன்று போராடு‌ம் போது குடு‌ம்ப உறவு‌க்கு‌ள் பல து‌ர்தேவதைக‌ளி‌ன் ஆ‌தி‌க்க‌ம் மேலோ‌ங்கு‌ம். அது பெ‌ண்‌ணி‌ன் தா‌யாகவு‌ம் இரு‌க்கலா‌ம், ஆ‌ணி‌ன் தா‌ய் ம‌ற்று‌ம் தம‌க்கைக‌ளி‌ன் ஆ‌தி‌க்கமாகவு‌ம் இரு‌க்கலா‌ம்.

எதுவாக இரு‌ந்தாலு‌ம், நமது அ‌ன்பாலு‌ம், பொறுமையாலு‌ம் ஒருவரை அனுச‌ரி‌த்து‌ச் செ‌ன்று வா‌ழ்‌க்கையை இ‌னிதா‌க்‌கி‌க் கொ‌ள்வது எவராலு‌ம் முடியு‌ம் ‌விஷய‌ம்தா‌ன். எனவே, ‌பிர‌ச்‌சினை துவ‌ங்கு‌ம் போதே அதை‌ப் ப‌ற்‌றி இருவரு‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பே‌சி ‌பிர‌ச்‌சினையை ‌தீ‌ர்‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம். எதையு‌ம் அ‌றிவு‌ப்‌பூ‌ர்வமாக ஆராயாம‌ல், மன‌ப்பூ‌ர்வமாக ஆரா‌ய்‌ந்தா‌ல் ந‌ல்ல வ‌ழி ‌கி‌ட்டு‌ம்.

விட்டுக்கொடுத்தல் அவசியம்

இந்தக் கால இளம் தலைமுறையினருக்கு விட்டுக் கொடுத்தல், சகிப்புத்தன்மை போன்ற நற்குணங்கள் இல்லாத காரணத்தால்தான் விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே போகிறது. விவாகரத்து கேட்டு நீதிமன்றப்படியேரும் தம்பதிகளுக்கு உ‌டனடியாக வழ‌க்கு‌ப் ப‌திவு செ‌ய்து ‌விவாகர‌த்து வழ‌ங்க‌ப்படுவ‌தி‌ல்லை. முதலில் உளவியல் ரீதியாக ஆலோசனை வழ‌ங்க‌ப்படு‌கிறது. தேவைப்பட்டால் பல தடவைகூட ஆலோசனை நடத்துகிறார்கள்.

முடிந்தவரை தம்பதிகளை சேர்த்து வைக்கவே இ‌ந்த ‌நீ‌திம‌ன்ற‌‌ங்க‌ள் முயற்சி செய்கின்றன. இறு‌தி வரை விவாகரத்து பெற்றே தீருவது என்று இருவரில் ஒருவர் பிடிவாதமாக இருந்தாலோ அல்லது இருவரும் பிடிவாதமாக இருந்தாலோ வழக்கு நடத்தி விவாகரத்து வழங்கப்படுகிறது.

விவகாரத்திற்கு அடிகோலும் விவாதம்

வீட்டிற்கு வீடு வாசற்படி இருப்பது போல சண்டை ஏற்படாத வீடு என்று எங்கேயும் இல்லை. ஆனானப்பட்ட சிவனுக்கும் பார்வதிக்குமே சண்டை ஏற்பட்டதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அப்படியிருக்கையில் நாம் சாதாரண மனிதர்கள் தானே.

வீட்டில் பிரச்சினைகள் உருவாகி சண்டை ஏற்படும் போது இருவரும் ஒரேசமயத்தில் கோபப்படாதீர்கள். வாக்குவாதம் ஏற்படுகின்ற பிரச்சினைகளில் ஒருவர் மற்றவரை ஜெ‌யி‌க்க‌வி‌ட்டு மகிழ்ச்சி அடையுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை எப்பொழுதுமே! விவாதம் தவிர்க்க முடியாதது என்றால், கூடியவரைக்கும் அதை ஒத்திப் போடுங்கள்.

தேவை அன்பான வார்த்தை

ஒரு நாளைக்கு ஒரு முறையாவது ஒரு அன்பான வார்த்தையோ அல்லது வாழ்த்தோ உங்கள் துணையிடம் உபயோகப்படுத்திப் பாருங்கள். செய்த தவறை உணரும்போது அதை ஒத்துக் கொள்ளவும் அல்லது அதற்காக மன்னிப்புக் கேட்கவும் தயங்காதீர்கள். கடந்தகால தவறுகளைச் சுட்டிக் காட்டாதீர்கள். விமர்சனத்தையே வாஞ்சையுடனும், அன்புடனும் செய்து பாருங்கள். மேலு‌ம், உலகத்திற்காக போலியாக வாழ்வதைக் காட்டிலும், உங்களுக்காகவே வாழ்ந்து பாருங்களேன்.

மூன்று தாரக மந்திரங்கள்

இல்லற வாழ்க்கை இனித்திட, மூன்று தாரக மந்திரங்கள். (இவ‌ற்றை எ‌ப்போது‌ம் மன‌தி‌ல் கொ‌ள்ளு‌ங்க‌ள்) சூழ்நிலைக்கேற்ப நடந்து கொள்ளுதல். அனுசரித்துப் போகுதல்.மற்றவர்களை மதித்து நடத்தல். ந‌ம் வா‌ழ்‌க்கை ந‌ம் கை‌யி‌ல்தா‌ன் உ‌ள்ளது. இதனை அனை‌த்து த‌ம்ப‌திகளு‌ம் ‌பி‌ன்ப‌ற்‌றி வ‌ந்தாலே பெரு‌ம்பாலான குடு‌ம்ப ‌பிர‌ச்‌சினைக‌ள் வராது. அ‌ப்படியே தலைதூ‌க்‌கினாலு‌ம் அவை பெ‌ரிய அள‌வி‌ல் உருவாகாது. ‌நீ‌ங்களு‌ம் ‌திருமணமானவராக இரு‌ப்‌பி‌ன் இதனை பி‌ன்ப‌ற்‌றி‌ப் பாரு‌ங்க‌ள். உ‌ங்க‌ள் இ‌ல்லற‌ம் ந‌ல்லறமாகு‌ம்.

Friday, September 23, 2011

Super Singer 3 23-09-2011 Grand Finale

Wednesday, September 21, 2011

தமிழர்களிடமும் ஒரு கேள்வி


கேள்வியை நான் நேரடியாகவே கேட்டுவிடுகிறேன்! வருஷத்தில் 365 நாட்களில், எத்தனை நாட்கள் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்?

இதுதான் எனது கேள்வி! இப்படி நான் கேட்டதும், ஏதோ, “ மகிழ்ச்சியாக இருக்க 30 வழிகள்” “ சந்தோசமாக பொழுதைக் கழிப்பது எப்படி?” போன்ற புத்தகங்களில் இருந்து, எதையோ சுட்டுக்கொண்டுவந்து இங்கு ஒப்புவிக்கப் போவதாக நீங்கள் நினைத்தால், அது தவறு!

எனது கருத்து என்னவென்றால், தமிழர்களாகிய நாங்கள் மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பதாகும்! இது எப்படி என்று விளக்குகிறேன்! மகிழ்ச்சியாக இருப்பது ஒருவகை குற்றம் என்று எம்மையறியாமலேயே எமக்குள் ஒரு கருத்து விதைக்கப்பட்டிருப்பதை நீங்கள் உணருகிறீர்களா?

நாம் சத்தமிட்டு, வயிறு வலிக்க சிரிக்கும் போது, எமது பெற்றோர்கள் சொல்வார்கள் “ அதிகமாக சிரிக்காதே! பின்னர் அழ நேரிடும்” என்று! இப்படி சிறிய வயதில் சொல்லிச் சொல்லியே, நன்றாக வாய்விட்டு சிரிக்கும் போது கொஞ்சம் பயமும் வந்துவிடுகிறது!

தமிழனின் மகிழ்ச்சி தொலைந்து போனதுக்கு, தமிழனை ஆழ்பவனும் ஒரு காரணம்! இது பற்றி பின்னர் சொல்கிறேன்! அதுமட்டுமல்ல, தமிழன் ஆயிரத்தி எட்டு பிரச்சனைகளை வலிந்து, அழைத்து தனது தலையில் தூக்கிப் போடுவதால்தான் அவனது மகிழ்ச்சி காணாமல் போய்விட்டது!

வெள்ளைக்காரனைப் பாருங்கள்! வெள்ளிக்கிழமை இரவு ஆரம்பித்துவிடும் அவனது சொர்க்கலோக வாழ்க்கை ஞாயிறு முன்னிரவு வரை தொடரும்! பின்னர் திங்கட்கிழமையில் இருந்து வெள்ளிக்கிழமை வரை கடும் உழைப்பு! மறுபடியும் வெள்ளிமாலை கூத்து, கும்மாளம், ஜாலி, என்ஜாய்..... அனைத்துமே!

இப்படியெல்லாம் மகிழ்ச்சியாக இருக்க தமிழனுக்கு உரிமை இல்லையா? அல்லது அப்படி மகிழ்ச்சியாக இருப்பது குற்றமா? வெள்ளைக்காரன் தன்னைச் சுற்றி எந்தவிதமான வட்டங்களும் போடுவதில்லை! ஆனால் ஒவ்வொரு தமிழனையும் சுற்றி எத்தனை வட்டங்கள்!

இப்படியெல்லாம் வட்டங்கள் போட்டு, கட்டுப்பாட்டோடு வாழ்ந்து நாம் என்ன சாதித்து வைத்திருக்கிறோம்? டெலிஃபோனைக் கண்டுபிடித்தோமா? அணுகுண்டைக் கண்டுபிடித்தோமா? எமக்கான சுய கண்டுபிடிப்பு என்ன? இந்த உலகிற்கு நாம், கண்டறிந்து வழங்கியிருப்பது என்ன?

சரி, உலகிற்கு எதனையும் நாம் வழங்க வேண்டாம்! நாமாவது நமது பிரச்சனைகளைத் தீர்த்துக்கொண்டு மகிழ்ச்சியாக இருக்கலாம் இல்லையா? ஒவ்வொரு தமிழனும், தனக்குத் தனக்கென்று வாழாமல், எப்பவுமே அடுத்தவர்களுக்கும் சேர்த்து வாழ்வதால், அடுத்தவர்களுக்கும் சேர்த்து பாரம் சுமப்பதால்தான், யாருமே நிம்மதி இல்லாமல் இருக்கிறார்கள்!

இதற்கு, எமது குழந்தை வளர்ப்பு முறையில் இருந்து கோளாறு தொடங்கிவிடுவதாக, நான் நினைக்கிறேன்! குழந்தைகள் சொந்தக் காலில் நிற்கும்படியாக, அவர்களுக்கு தன்னம்பிக்கையையும், உழைப்பின் அவசியத்தையும் ஊட்டி வளர்க்கிறோமா? இல்லையே!

பாசம் என்ற பேரில் நாம் குழந்தைகளுக்குப் போடும் கட்டுப்பாடுகள்தான் எத்தனை? நான் பலரைப் பார்த்திருக்கிறேன்! அவர்கள் வாழ்வதே இல்லை! கேட்டால் தியாகி மாதிரி கதைப்பர்கள்!

எனது நண்பன் ஒருவனுக்கு 28 வயது! கல்யாணமாகி 3 குழந்தைகள்! அவனது உழைப்பெல்லாம் அவனது குழந்தைகளுக்கே போய்விடுகிறது! வாழ்க்கையில் ஒருநாள் கூட, விமானத்தில் ஏறியதில்லையாம்!, டிஸ்கோ, கிளப்புகளுக்குப் போனதில்லையாம், வெளிநாடுகள் சுற்றிப் பார்த்ததில்லையாம்! தனது மனைவியுடன் வெறும் 2 முறை மட்டுமே, பீச்சுக்குப் போனானம்! சினிமாவுக்கு அதுவும் வெறும் 9 முறை மட்டும் தானாம்!

கல்யாணமாகி எண்ணி சரியாக 10 ம் மாதம் குழந்தை பெறும், மடமையை தமிழன் ஒழிக்க வேண்டும்! ஒரு 5 வருஷம் தள்ளி குழந்தை பெத்தால் என்ன குடியா முழுகிவிடும்? இங்குதான், தமிழனுக்குப் பிரச்சனையே! கல்யாணமாகி 5 வருஷங்கள் குழந்தை பெறாவிட்டால், ஏனைய தமிழனுக்குப் பொறுக்காது! அந்தப் பெண்ணை மலடி என்று திட்டுவார்கள்!

இந்தக் கொடுமை தாங்காமல்தான் பலபேர் பிள்ளை பெத்து தங்களை நிரூபிக்கிறார்கள்! முதலில் இந்தக் கன்றாவியான சமூகத்துக்குப் பயப்படுவதை தமிழன் நிறுத்த வேண்டும்! கல்யாணமாகி ஒரு 5 வருஷம், எல்ல இடங்களுக்கும் சென்று சுற்றிப்பார்த்து, ஆசைதீர மகிழ்ச்சியாக இருந்துவிட்டு, அதன் பின்னர் குழந்தை பெறலாம்! தமிழன் துணிய வேண்டும்!

நான் முன்னர் சொன்ன, நண்பன் தோற்றத்தில் 35 வயதுக்காரன் போல இருக்கிறான்! பேச்சில் தன்னம்பிக்கையோ, இளமையோ ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை! இப்படியெல்லாம் வாழ்வைத் தொலைக்கச்சொல்லி அவனுக்கு யார் சொல்லிக்கொடுத்தது?

மனித வாழ்க்கை ஒருமுறைதான்! இம்மை, மறுமை, மேலோகம், கீழோகம், சொர்க்கம் , நரகம் இதெல்லாம் சுத்த பித்தலாட்டம்! முக்கியமாக சொர்க்கம் பற்றி நான் சொல்லியே ஆகவேண்டும்!

நாம் செத்ததுக்குப் பின்னாடி, சொர்க்கத்துக்குப் போகலாம்! அங்கு மாட மாளிகைகளும், கூட கோபுரங்களும் உள்ளன என்று தமிழனுக்கு மிகவும் மோசமான நஞ்சு குழந்தைப் பருவத்திலேயே ஊட்டப்படுகிறது!

சொர்க்கமாவது, மண்ணாவது! நாம் வாழும் இந்த பூமிதான் சொர்க்கம்! அதில் இப்போது நாம் வாழும் வாழ்க்கைதான் நிஜமானது! செத்த பின்னாடி, எமது உடலை புழுக்கள்தான் தின்னும்! - இந்த உண்மையை தமிழன் நெஞ்சில் பதிக்க வேண்டும்!

நாம் வாழும் ஊரை, நகரத்தை, வீட்டை சொர்க்கமாக வைத்திருந்தாலே போதும்! வாழ்வே சொர்க்கமாகிவிடும்! ஒவ்வொரு தமிழனும், இந்த சொந்தம் பந்தம், பாசம், நேசம், செண்டிமெண்ட் எல்லாத்தையும் தூக்கி வீசிவிட்டு, தனித்தனியாக வாழ பழக வேண்டும்! அப்போதுதான் மகிழ்ச்சியாக இருக்க முடியும்!




Sunday, September 18, 2011

ஷாரூக்கானைக் 'காப்பாற்றும்' ரஜினி!








ஷாரூக்கின் இந்த ரா-ஒன் படம் ரஜினியின் எந்திரன் படத்தின் அப்பட்டமான காப்பி என்றெல்லாம் செய்திகள் உலா வந்த நிலையில், எந்திரன் வேறு, ரா ஒன் வேறு. நாங்கள் ரஜினி மீது பெரும் மரியாதை வைத்துள்ளோம்.அவரை கவுரவிக்கும் விதத்தில் காட்சியும் வைத்துள்ளோம் என்று ஷாருக்கான் கூறியிருந்தார்.






இந்த நிலையில் ரா-ஒன் படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் தோன்றப் போவதாக மும்பை பத்திரிகைகள் பரபரப்பு செய்தி வெளியிட்டு உள்ளன.



இதுபற்றி கூறப்படுவதாவது:

ரா ஒன்னில் ஷாரூக்கானை பெரும் ஆபத்திலிருந்து காக்கும் ஒரு சூப்பர் மேன் வேடத்தில் நடிக்க ரஜினி ஒப்புக் கொண்டுள்ளார்.



இதற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அடுத்த மாதம் (அக்டோபர்) 4-ந்தேதி நடக்கிறது. ஷாருக்கான் வில்லன்களிடம் சண்டை போடும் போது ஒரு கட்டத்தில் நிராயுதபாணியாக நிற்பார். அவர் உயிரை வில்லன்கள் பறிக்க ஆயத்தமாகும் தருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி ஒரு சூப்பர் காரில் தனக்கே உரிய ஸ்டைலில் சர்ரென்று வந்து நிற்பார்.



அவரது கார் வில்லன்களின் ஆயுதங்களை தன்னுடன் ஈர்த்து ஷாருக்கானை காப்பாற்றும். அப்போது ஷாரூக்கின் உடனிருக்கும் கதாநாயகி கரீனா கபூர் யார் இவர் என்று ரஜினியை பார்த்து கேட்பார். உடனே ரஜினி தனக்கே உரிய பஞ்ச் வசனம் பேசியடி காரிலிருந்து இறங்குவாராம். அவரை ஷாரூக்கான் மிகுந்த மரியாதையுடன் அறிமுகப்படுத்துவது போன்று இக்காட்சி எடுக்கப்படுகிறதாம்.

Saturday, September 17, 2011

தொப்பையைக்குறைக்க என்னதான் வழி?

தொப்பையையும் போலீஸையும் தொடர்புபடுத்திதான் நிறைய ஜோக்ஸ் உண்டு.உண்மையில் தொப்பை போலீஸுக்கு மட்டுமா இருக்கிறது? திருடனைப்பிடிக்க காவலர்கள் அப்படி வயிற்றைத்தள்ளிக்கொண்டு இருக்க்க்கூடாது என்பதால் அப்படி கிண்டல்.மற்றபடி பெரும்பாலானவர்களுக்கு உள்ள ஒரு பிரச்சினைதான்.

இடுப்பில் சதை போடுபவர்கள் கொஞ்சம் அதிகம்தான்.இன்றைய உணவு முறையும்,உடல் உழைப்பில்லாத வாழ்க்கை முறையும் ஒரு காரணம்.சிலருக்கு குழந்தைகள் சறுக்கி விளையாடும் அளவுக்கு முன்னால் துருத்திக் கொண்டு இருக்கும்.பலரும் இதை சங்கடமாகவே உணர்கிறார்கள்.



என் நண்பர் ஒருவருக்கு இன்னொரு நண்பர் தொப்பையை செல்போனில் படம் எடுத்துக்காட்டி கேலி செய்வது வழக்கம்.அவருடைய பையனும் தொப்பை மாமா என்று கூப்பிட பழகிவிட்டான்.பத்து பேர் கூடியிருக்கும்போதும் உற்சாகமாக இப்படி அழைப்பான்.நண்பர் நெளிவார் பாவம்.

அவருக்கு நான் சொல்வது..முதல் வேலையாக கவலைப்படுவதை நிறுத்துங்கள்.அதுவே பின்னர் பிரச்சினை ஆகிவிடும்.அப்புறம் மன அழுத்தமாக மாறி சாப்பிடுவதில் அதிகமாகவோ,குறைவாகவோ போய் உடலுக்குக் கேடு.அவனுக்கு சமாதானமாகவில்லை.எனக்கு தெரிந்த மருத்துவரிடம் கேட்டோம்.



உங்களுக்கு தெரிந்தால் எனக்கு சொல்லுங்கள் ஏன்று கிண்டலடித்தவர்,உடலில் கொழுப்பு அதிகமானால் ஏதோ ஒரு இட்த்தில் ஒதுங்கவே செய்யும்.உங்கள் வயிறு அதற்கு பிடித்துப்போய் விட்ட்து என்றார்.முதலில் அரிசி உணவையும்,அதிக கொழுப்புள்ள உணவையும்,இனிப்பு பண்டங்களையும் குறைத்துகொள்ளவேண்டும் என்றார்.துரித உணவுகள் தொப்பையின் நண்பன்.

பெரும்பாலானவர்களுக்கு பரிந்துரைப்பது உடற்பயிற்சிதான்.தினம் அரை மணி நேரமாவது வேகமாக நட்த்தல்,சைக்கிளிங் உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொள்வது அதிக பலன் அளிக்கும் புதியதாக தொடங்குபவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக முயற்சி செய்வது நல்லது.குறைவான கலோரி கொண்ட உணவுகளை தேர்ந்தெடுப்பது நல்லது.முடிந்தால் உணவியல் நிபுணரை ஆலோசித்து உங்களுக்கேற்ற உணவுகளை தீர்மானிக்கலாம்.



மேலும் சில குறிப்புகள்.

· பழங்கள்,காய்கறிகள் அதிகம் சேர்க்கவும்.
· கொழுப்பு நிறைந்த,துரித உணவுகள்,இனிப்புகள் தவிர்க்கவும்.
· குளிர்பான்ங்களை விலக்கி எலுமிச்சை போன்ற சாதாரண பழரசங்களுக்கு மாறவும்.
· உரிய நேரத்தில் உணவு உட்கொள்ளவும்.
· வயிற்றில் மூன்றில் ஒருபகுதி காலியாக இருக்கட்டும்
· ஒருபகுதி நீரும்,இன்னொரு பகுதியில் உணவும்.
· கூடுமானவரை வெளியில் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

மேற்கண்ட தகவல்கள் உங்களுக்கு ஓரளவு உதவும்.முயன்றால் நிச்சயம் முடியும்.

Thursday, September 15, 2011

நோக்கியாவின் மெகா பரிசு போட்டி!! ரூபாய் 4,500,000 வெல்ல அறிய வாய்ப்பு



பிரபல மொபைல் நிறுவனமான நோக்கியாவி பற்றி அனைவரும் அறிந்து இருப்போம். உலகம் முழுவதும் மொபைல் வர்த்தகத்தில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நிறுவனம். இந்த நோக்கியா நிறுவனத்தின் ரிங்டோன் அனைவரும் கேட்டு இருப்போம் உலகளவில் மிகவும் பிரபலமான ரிங்க்டோன் கேட்பதற்கே மிகவும் இதமாக இருக்கும். இப்பொழுது நோக்கியா நிறுவனம் புதிதாக 2012 ஆண்டிற்கான விண்டோஸ் மொபைல்களை அறிமுக படுத்த இருக்கிறது இந்த மொபைல்களில் உபயோகப்படுத்த புதுவைகையான நோக்கியா ரிங்க்டோனை உபயோகப்படுத்த உள்ளது.

இந்த நோக்கியாவின் புதிய ரீமிக்ஸ் ரிங்க்டோனை வடிவமைக்கும் பொறுப்பை வாசகர்களுக்கு போட்டியாக அறிவித்துள்ளது நோக்கியா நிறுவனம். உலகில் எந்த மூலையில் இருந்தாலும் நீங்கள் இந்த போட்டியில் பங்கு பெறலாம் இதற்கான எந்த வரம்புகளும் இல்லை. இது போன்று வாசகர்களிடம் கொடுப்பது இதுவே முதல் முறை. போட்டியின் பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா $10,000( இந்திய மதிப்பில் ரூபாய் 4500000 மேல்)

போட்டிக்கான விதிமுறைகள்:
  • நீங்கள் புதுவிதமான அனைவரையும் கவரக்கூடிய வகையில் ரிங்டோன் இருக்க வேண்டும்.
  • முதலில் ஐந்து நபர்களை இறுதி போட்டிக்கு தேர்வு செய்வார்கள். இதிலிருந்து ஒருவரை வெற்றியாளராக அறிவிப்பார்கள்.
  • இறுதியில் வெற்றி பெறுபவருக்கு $10,000 டாலரும்(ரூபாய் 4,500,000 மேல்) மற்ற நான்கு பேருக்கு தலா $1,000டாலரும் (ரூபாய் 45,000 மேல்) பரிசளிப்பார்கள்.
  • கடைசி தேதி அக்டோபர் 2 ஆம் தேதிக்குள் உங்களுடைய ரிங்டோன் அனுப்பி விட வேண்டும்.
உதவிக்கு கீழே உள்ள வீடியோவை பாருங்கள்


போட்டியில் கலந்து கொள்ள Nokia Audio Draft தளத்திற்கு செல்லுங்கள். அங்கு Submit a New Entryஎன்ற பட்டனை அழுத்தி உங்களுடைய ரிங்க்டோனை அனுப்புங்கள் பரிசை தட்டி செல்லுங்கள்.

போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து நண்பர்களுக்கும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Monday, September 12, 2011

மரணம்


அன்புள்ள இணைய உறவுகள் அனைவருக்க்கும் ப்ரியமுடனின் வணக்கங்கள்!

“வாழ்வு எவ்வளவு அற்பமானது என்பதனை சாவு போதிக்கிறது

அதைப்போல்

சாவு எவ்வளவு அற்பமானது என்பதனை அவனது வாழ்வு போதிக்கிறது”

இவ்வாறான வாழ்வும் சாவும் மனிதனின் தவிற்கமுடியாத சடங்காகிவிட்டது. கருனை மனு போட்டாலும் அவன் (இறைவன்) விதிக்கும் மரண தண்டனையிலிருந்து விடுபடுபவர்கள் எவரும் இல்லை. இன்றைய பதிவு மரணம் சம்பந்தபட்டதாகும். எழுத்தாளர் இரா. செல்வராசு அவர்கள் வாழ்வும் சாவும் என்ற தலைப்பில் எழுதிய அருமையான சிந்திக்க வைக்கும் இந்த சிறுகதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

“அப்பா”, குரல் கேட்டுத் திரும்பினேன். “திடீர்னு ஒருநாள் நான் செத்துப் போயிட்டா, என்னோட பொருள்லாம் என்னப்பா பண்ணுவீங்க?”, எப்போதும் போன்ற சாதாரண நாளொன்றின் மாலைப்பொழுதில் நிவேதிதாவிடம் இருந்து வந்த கேள்வி கேட்டுத் துணுக்குற்றுப் போனேன்.

“என்னம்மா, என்ன சொல்றே?”

“சும்மா ஒரு பேச்சுக்குப்பா. ஒரு உதாரணத்துக்கு நம்ம கார் ஒரு மரத்து மேல மோதி விபத்து நடந்துடுச்சுனா அதுல நான் செத்துப் போயிட்டா, என் கிட்ட இருக்குற பொருள் எல்லாம் என்ன பண்ணுவீங்க?”

மரணத்தை இவர்களிடம் இருந்து மறைத்து வைக்க வேண்டும் என்று எண்ணியிராமல் சாதாரண ஒரு நிகழ்வாய்ப் பேசியிருக்கிறோம். மனித வாழ்வும், வயதானால் சாவும் இயற்கை நிகழ்வு தான் என்பதை முழுதும் புரிந்தோ புரியாமலோ இவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். ‘நாங்கெல்லாம் வளந்து பெருசாகுறப்போ உங்களுக்கு வயசாயிடும். அப்புறம் செத்துப் போயிடுவீங்க’ என்று ஒரு நாள் வர இருக்கும் எங்கள் சாவு பற்றியும் இவர்கள் எங்களிடமே பேசியதும் உண்டு! மரணத்தை ஒரு புனிதமாகவோ, பயங்கரமானதாகவோ அறிமுகப்படுத்தாதிருந்தாலும், திடீரென்று மாலைத்தீனி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஒரு எட்டு வயதினள் தன் மரணத்திற்குப் பிறகு என்று பேசுகையில் சற்று திடுக்குற்றுத் தான் போனேன். ஒரு நுணுத்தத்தில் சுதாரித்துக் கொண்டவன், இந்தச் சிந்தனை செல்லும் திசையில் பயணிக்க எண்ணிப் பேச்சைத் தொடர்ந்தேன்.

“ம்ம்ம் விபத்துல எங்களுக்கு ஒண்ணும் ஆகலயா? நாங்க எல்லாம் இன்னும் இருக்கிறோமா?”

“ம். நான் மட்டும் தான் செத்துப் போயிட்டேன்னு வச்சுக்கலாம்”

“அப்படின்னா என்ன பண்ணுவோம்? நாங்க இருக்கோம்ல? உன் பொருள் பத்தியெல்லாம் நாங்க கவனிச்சுக்குவோம். நந்துவுக்குக் (சின்னவளுக்குக்) கொடுத்துருவோமா இருக்கும். இல்லன்னா எதாவது நன்கொடையா யாருக்காச்சும் கொடுத்துருவோம்”

அக்காவின் பொருட்கள் எல்லாம் தனக்கு வரும் என்று கேட்ட சின்னவள் பெருமகிழ்வுற்றுத் தன் முகத்திலே முறுவலாய்க் காட்டினாள்.

“என்ன நந்து? இப்படிச் சந்தோஷப் படுற? அக்கா இல்லையேன்னு உனக்கு வருத்தம் இருக்காதா?”

“நோ அப்பா. நிவேதிதாவின் பொருட்கள் எல்லாம் எனக்குக் கிடைக்கும்னா எனக்கு நல்லா இருக்கும். ஆனா ‘ஐ வில் மிஸ் ஹெர் வெரி மச்’. அதுனால எனக்கு அவ சாகவெல்லாம் வேண்டாம்”

தெளிவான பதில். இந்தத் தலைமுறையினர் பல விஷயங்களில் தெளிவாகத் தான் இருக்கின்றனர். வெறும் பொருள் மீதன்றி உறவுக்கும் உணர்வுக்கும் அன்புக்கும் முக்கியத்துவம் தருவதாய் அமைந்திருந்த அந்தப் பதிலில் நிச்சய திருப்தி அடைந்தவனாய்ப் பெரியவளிடம் திரும்பினேன்.

“ஏம்ப்பா? உனக்கு என்ன பண்ணனும்?”

“நந்துவுக்கு என் பொருள் எல்லாம் ரொம்பப் பிடிக்கும்ப்பா அதனால, என்னுடையதெல்லாம் அவளுக்கே கொடுக்கணும்னு தான் எனக்கு ஆசை”

அதைக் கேட்டு இன்னும் முறுவலிக்கும் சின்னவளை இப்போது புரிந்து கொள்கிறேன்.

“அவ்வளவு தானே அப்படியே செஞ்சுடலாம். கவலைப் படாதே”, எனது சம்மதத்தில் ஓரளவிற்கு நிம்மதியை முகத்தில் காட்டியவள் மேலும் தொடர்ந்தாள்.

“இல்லை அப்பா. இறந்து போனவங்களோட பொருள் எல்லாம் அவங்களையே எப்பவும் ஞாபகப் படுத்தும்னு சிலர் அவற்றை எல்லாம் எடுத்து கண்மறைவா யார்க்கிட்டயாவது கொடுத்துடுவாங்கன்னு படிச்சிருக்கேன். அதுனால தான் கேட்டேன். என்னுடையதெல்லாம் உங்களுக்கு என் ஞாபகத்தையே கொடுத்து சோகமா ஆக்கிரும்னு நீங்க யாருக்காவது கொடுத்துடலாம்னு நினைச்சீங்கன்னா அதனால தான்”

“ஓ யார் அப்படிக் கொடுத்தாங்க?”

“நான் சில புத்தகங்கள்ள படிச்சேன். ஆபிரகாம் லிங்கன் அவரோட மகன் இறந்தப்போ அப்படித்தான் பண்ணினாராம். மகனோட பொருட்கள் எல்லாத்தையும் தானமாக் கொடுத்திட்டாராம்”

அப்படியா? இந்தக் கதையெல்லாம் எனக்குத் தெரியாதே என்று பிறகொரு நாள் இணையத்தில் தேடி அறிந்து கொண்டேன். லிங்கனின் இரண்டாவது மகன் நான்கு வயதிலும், மூன்றாவது மகன் பதினொரு வயதிலும் இறந்து போயிருக்கின்றனர். அதனால் லிங்கன் தம்பதியினர் மனமுடைந்து இருந்த காலம் உண்டு.

ஆபிரகாம் லிங்கனை இவளுக்கு மிகவும் பிடிக்கும். பள்ளியிலே லிங்கன் பற்றிப் படித்ததுவும் வேறு புத்தகங்கள் வழியாக அறிந்ததில் இருந்தும் எப்படியோ பிடித்திருக்க வேண்டும். அடிமைப்பிடியில் சிக்கியிருந்த ஒரு இனத்தின் சுதந்திரத்திற்காகச் சிந்தித்துச் செயலாற்றிச் சட்டமியற்றறிய ஒரு தலைவனைப் பற்றி இவளோடு சேர்ந்து நானும் அதிகம் தெரிந்து கொள்ளலாம். அருகில் தானே இருக்கிறது - ஒரு நாள் லிங்கன் நினைவகத்துக்குக் கூடக் கூட்டிப் போக வேண்டும். எல்லையில்லாது விரிந்து கொண்டிருக்கிறது இவளின் / இவர்களின் உலகம். அதன் விரிதலுக்கு உதவியும் அதன் உள்ளேயே எப்போதும் இருந்து வரவும் எனக்கும் சின்ன ஆசை.

“சரிம்மா. உன் ஆசைப்படியே நந்துவுக்கே எல்லாப் பொருளும் கொடுத்துடலாம். நாங்க வேற யாருக்கும் கொடுக்கல்லே. அதோடு, உன்னை நினைவுபடுத்தவென்று அவை இருக்கின்றன என்று நான் மகிழவே செய்வேன்”. அவளை/அவர்களைப் பற்றிய நினைவுகளைச் சேகரித்து வைத்துக் கொள்ள முயன்றும் முழுதாய் முடியாமல் படைப்புக்களால் நிறைந்து வழியும் கோப்புக்களும் உணர்வுகளால் நிறைகின்ற உள்ளமும், அனுபவங்களாய் நிறையும் நேரங்களும்… எதை இழக்க மனம் வரும்?

“அது சரி அப்பா… ஆனால், இந்த என் விருப்பத்தை எங்காவது ஆவணப்படுத்த வேண்டுமா? சட்டபூர்வமாய் (லீகலாக) எதையேனும் செய்யவேண்டுமா?” என்று வந்த அடுத்த கேள்விக்கு நிச்சயமாய் நான் தயாராய் இல்லை.

“இல்லம்மா… அது வந்து… அதெல்லாம் வேண்டியதில்லே. எங்க கிட்டச் சொல்லீட்டல்லியா? அது போதும். நாங்க அத ஞாபகம் வச்சுக்குவோம்”, என்று வெறும் மொண்ணையாக மட்டுமே என்னால் சொல்ல முடிந்தது.

ஒரு தலையசைப்போடும் தீனிச்சுவையில் திளைத்தும் வேறு நிலைக்கு மாறி அவள் ஓடிவிட்டாள். பல நாட்கள் ஆகியும் எனது குளத்தில் அவள் எறிந்த கல் எழுப்பிய அலைகள் மட்டும் ஓய்ந்தபாடில்லை.

தான் இறந்த பின் என்ன செய்ய வேண்டும் என்று ஒரு குழந்தை யோசிக்கிறது. அந்தக் குழந்தைக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது என்று என் இறப்புப் பற்றி நான் பெரிதும் யோசித்திருக்கின்றேனா? இத்தனைக்கும் இது பற்றிய யோசனையை மனைவி என்னிடம் சொல்லிப் பல்லாண்டு பல்லாண்டு ஆகிவிட்டது.

என் வரட்டுப் பிடிவாதமும், என்றும் இழக்காத குருட்டுப் பொதிவுணர்ச்சியும் காரணமா என்று தெரியவில்லை, “நூறு வயசாகற வரைக்கும் எனக்குச் சாவில்லை”, என்று சொல்லித் திரிந்தேனே தவிர சுயமரணம் பற்றிப் பேசவும் திட்டமிடவும் எனக்கு விருப்பம் இருந்ததில்லை. இப்போதும் பெரிதாய் இல்லை என்பது ஒருவகை முட்டாள்த்தனம் தானோ?

மரணத்தின் பின் பணியிடத்து ஆயுள் காப்பீடு, விபத்தானால் ஈட்டுத் தொகை, ஓய்வூதியம், அரசின் சமூகக்காப்பீடு (சோசியல் செக்யூரிட்டி) இன்ன பிறவும் பொருளாதார உறுதியைத் தர முடியும் என்று சில கணக்குப் போட்டு நிம்மதியை வாங்கிக் கொள்ள முயன்றாலும் பின்னணியில் மனைவியின் குரல் அசரீரியாய் அதனை நீண்ட காலம் நிலைக்க விடுவதாயில்லை.

“அது எல்லாம் சரிங்க. அதே மரத்து மேல மோதுன காரில் நம்ம ரெண்டு பேருக்கும் ஆபத்தாகிப் பொண்ணுங்க மட்டும் பொழச்சாங்கன்னா அவங்களுக்கு என்ன நிலைன்னு யோசிச்சுப் பாத்தீங்களா?” என்ற கேள்வி சற்று பயமுறுத்துவதானது.

பெற்றோரில் ஒருவர் இறந்து ஒருவர் பிழைத்தால் கூடப் பெரும் பாதகம் இல்லை. ஆனால் இருவருக்கும் ஏதாவது ஆனால்? அதிலும் சொந்த ஊரும் மண்ணும் அருகில்லாத புலம் பெயர் வாழ்வில் அப்படியான ஒரு நிலையில் என்னவாகும் என்பது குழப்பமான ஒன்று. இந்த அரசாங்கம் குழந்தைகளின் வளர்ச்சிக்குப் போதுமான உதவிகளைச் செய்யும் என்றாலும், தொலைக்காட்சியில் பார்க்கிற தொடர்களில் இருந்து கிடைக்கும் தகவல்களை வைத்து அது அவ்வளவு ஆறுதலான ஒன்றா என்று முடிவு செய்ய இயலவில்லை. அரசால் தத்துக்கு விடப்படும் குழந்தைகளின் வளர்சூழல், அதனைச் சார்ந்த பிரச்சினைகள் என்று பல அம்சங்கள் யோசிக்க இருக்கின்றன.

“ஏன்? நமது நண்பர்களோ, உறவினர்களோ பாத்துக்குவாங்க. இல்லாட்டி தாத்தா பாட்டி அப்பச்சி அம்மாயி கிட்ட ஊருக்கு அனுப்பிடச் சொல்லிடுவாங்க” என்று முனகலாய்ச் சொல்ல முடிந்தாலும், உறுதியாக என்ன நடக்கும் என்பது தெரியவில்லை. பெற்றோரின் விருப்பம் என்ன என்று தெரியாவிட்டால், அரசே அவர்களைத் தத்தெடுத்து வளர்க்கும் வழிவகைகளை முடிவு செய்யும் வாய்ப்பிருக்கிறது. அதனால் தான் சட்டபூர்வமாய் நாம் ஏதேனும் ஆவணம் செய்து வைக்க வேண்டும்” என்று மனனவி பல காலமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

குறைந்த பட்சம் அது பற்றிய விவரங்களை அறிந்து வைத்துக் கொள்ளவாது செய்ய வேண்டும். சொந்தக் காப்பாளர் (பெர்சனல் கார்டியன்) யார் என்று மட்டுமாவது பிடித்த நண்பர், உறவினர், நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் யாராவது பெயரைக் குறிப்பிட்டு ஒரு ‘பத்திரம்’ (”வில்”) எழுதி வைப்பது அப்படி ஒன்றும் சிரமமான காரியம் அல்ல தான். மக்களுக்குச் சொத்து விட்டுப் போனாலும், அவர்களுக்குப் பதினெட்டு வயதாகும் வரையாவது அதனை நிர்வகிக்கவென்று ஒருவரையும் நியமித்து விடுவதும் எளிமையான ஒன்று தான். சுய இறப்பு பற்றிய சிந்தனை குறித்த பெரும் மனத்தடையைத் துடைத்துவிட்டு இது பற்றி யோசிக்க வேண்டும் என்று எண்ணிக்கொள்கிறேன்.

இரண்டு நாட்கள் கடந்த இன்னொரு நாள் மாலையில் வீட்டில் அடிதடிச் சண்டைச் சத்தம் கேட்டது. என்னவென்று எட்டிப் பார்த்தபோது ஒரு சிறு கருப்பு நாற்காலிக்காகப் பெண்கள் இருவரும் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். உயிரைக் கொடுக்கவும், உயிரான பொருட்கள் அனைத்தையும் கொடுக்கவும் தயாராக இருப்பவர்கள் ஒரு சின்ன நாற்காலிக்காக அடிதடியில் இறங்கி இருப்பதை என்னவென்பது? வாழ்க்கை தான்.

சாவைத் தாண்டி வாழ்வை நினைந்து மனதுள் மெல்லவொரு புன்னகை அரும்புகிறது.

மரணத்தின் ருசி அறியாதவர்களுக்கு
உறக்கத்தைப்பற்றித் தெரியாது
துயில்வது விடுதலைக்கான பயணம்
மரணம் என்பது நீள்துயில்.

ப்ரியமானவர்களே என்றாவது ஒருநாள் நமக்கும் அந்த விடுதலை கிடைக்கத்தான் போகிறது.

Sunday, September 11, 2011

கல்யாணம் செய்யப்போறீங்களா



திருமணம் செய்வதற்காக பத்து பொருத்தங்கள் பார்க்கிறோம்.ஜாதகம் பார்க்கிறோம்.குடும்ப நிலை,பையன்,பெண் படிப்பு எல்லாவற்றிலும் கவனம் செலுத்துகிறோம்.உடல் தகுதிகளைப் பற்றி போதுமான விழிப்புணர்வு நம்மிடம் இல்லை.திருமணத்திற்கு முன்பு மணமக்கள் ரத்தப்பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது.


ரத்த வகை அறிவதில் பலருக்கும் ஆர்வம் இருப்பதை பார்த்திருக்கிறேன்.இதில் ஆர்.எச் வகை என்று உண்டு.பாசிட்டிவ்,நெகடிவ் என்பது இதுதான்.பலரும் கர்ப்பத்துக்குப்பின் பரிசோதனையில் இதை கண்டு பிடிப்பார்கள்.தாயும்,தந்தையும் வேறுவேறு வகை ஆர்.எச்.அம்சங்களை கொண்டிருந்தால் இரண்டாவது குழந்தை மரணமடையும் வாய்ப்புண்டு.


பெற்றோருக்கு இப்போது ரத்தப்பரிசோதனை மூலம் கர்ப்பத்தின் போது கண்டுபிடிக்கப்படுவதால் சிகிச்சை மூலம் இதை சரி செய்கிறார்கள்.திருமணத்திற்கு முன்பே இப்பரிசோதனைகள் அவசியம் என்பதே சரியானது.நெகட்டிவ் அம்சம் இருப்பவர்களுக்கு செவ்வாய் தோஷம் இருக்கும் என்ற கருத்தும் உண்டு.

முக்கியமானது.ஹெபட்டிஸ் பி,சி வகை.
ஒருவருக்கு ரத்தம் செலுத்துவதற்கு முன்பு இவ்வகை வைரஸ் உள்ளதா எனவும் பரிசோதனையும் செய்வார்கள்.கிட்ட்த்தட்ட எய்ட்ஸ் வைரஸை போன்றே பரவும் தன்மை கொண்ட்து.பலருக்கு அறிகுறி இருக்காது.பரிசோதனை மூலம்தான் தெரியும்.மணமக்கள் யாருக்கேனும் இருந்தால் தவிர்த்து விடுவதே சரி.தவிர கொஞ்சம் அப்படி இப்படி பழக்கம் உள்ளவர்களாக இருக்கவும் வாய்ப்புண்டு.(பாலுறவு மூலம் பரவும்).


ஹெபடைடிஸ் பி வகைக்கு தடுப்பூசி இருக்கிறது.கேள்விப்பட்டிருப்பீர்கள்.ஊசி போட்டு வரும் முன் காக்கலாமே தவிர வந்த பின்னால் இந்த வகை நாட்டு மருந்தால் குணமாவதாக நான் கேள்விப்படவில்லை.ஆங்கில மருத்துவத்திலும் இல்லை.வைரஸ் நோய்களை முழுமையாக குணமாக்க மருத்துவம் இல்லை.


அடுத்து எய்ட்ஸ் பரிசோதனை.செய்யச்சொன்னால் யாரும் விரும்ப மாட்டார்கள்.பல ஆண்டுகளுக்கு அறிகுறி வெளியே தெரியாது என்பதால் அவசியம் செய்து விடுவதே நல்லது.வேறு சில குணமாக்க முடியாத பால்வினை நோய்களும் உண்டு.உரிய மருத்துவர் மூலம் திறன் உள்ளிட்ட முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது பல பிரச்சினைகளைத் தவிர்க்கும்.


திருமணத்திற்கு முன்பு உடல் பரிசோதனை இன்றைய சூழலில் பொருத்தம் பார்ப்பது போன்று அவசியம் மேற்கொள்ள வேண்டிய ஒன்று.மெத்தப்படித்த ஆண்கள்தான் இதை முன்னெடுத்துச்செல்ல முடியும்.ஆரோக்கியமான குடும்ப வாழ்க்கையையும்,குழந்தைகளையும் இதனால் நாம் பெற முடியும்.

ஸ்ரிக்ஹாந்து

காதலிச்சே சாவுங்கடா....


கிளாஸ் முடிஞ்சு வெளிய வர்றப்போ...சில்லுனு குளிர்ந்த காற்று முகத்தில்

அடித்தது. ஹ்ம்ம் மழை வரும் போல இருக்கு. நினைத்து போல ஒரு துளி

கன்னத்தில் விழுந்தது. ஸ்ஸ்ஸ்ஸ்..அப்பா மழை எப்போதுமே அழகுதான்.

பிறக்கும் போதும் இறக்கும் போதும் அழகா இருக்கும் மழை எப்போதுமே எனக்கு

புடிக்கும்.



ஓட்டமும் நடையுமாக பஸ் ஸ்டாண்ட் வந்தேன். கண்களை அலைய விட்டேன்.

எல்லாரும் மழைக்கு பயந்து அவசரம் அவசரமாக ஓடி ஒளிந்துகொண்டு

இருந்தார்கள். எனக்கும் கையிலிருக்கும் புக்ஸ் எல்லாம் நனைந்துவிடுமோ னு

கொஞ்சம் கவலையா தான் இருந்தது. ஆனாலும் மழையை சபிக்க நான்

தயாரில்லை. தூரத்தில் நான் போக வேண்டிய பஸ் வரமாதிரி தெரிந்தது. பஸ்

ஸ்டாண்ட்-இல் பஸ் நின்றதும் ஹோ என்ற ஆர்ப்பரிப்புடன் பரபரப்பாக பஸ்-இல்

ஏற தொடங்கினார்கள். எனக்கு எப்போதுமே பஸ்ல படிகட்டில தொங்கிட்டு

போறது புடிக்கும். உள்ள பொய் நெரிசலில் சிக்க வேண்டாம் என்கிற ஒரு

சுதாரிப்பும் கூட. சிலநேரம் தவிர்க்க முடியாமல் உள்ளே போக நேரிடும்.

அன்னைக்கும் அப்பிடி தான். படிக்கட்டை தாண்டி உள்ளே போகவேண்டிய ஒரு

சூழ்நிலை. ஆனாலும் நான் நிற்கிற இடத்திலிருந்து பஸ் உள்ளால முழுவதும்

பார்க்க முடிந்தது.


திடீர் என்று ஒரு மின்னல் கீற்று என்னை கடந்து சென்றது போல ஒரு உணர்வு.


நிஜமா மின்னல் தானா இல்லை எதாச்சும் பிரம்மையா ஒரு கணம் யோசித்து

கொண்டிருக்கும் வேளையில் மறுபடியும் அதே மின்னல். நான் நிற்ப்பது பஸ்-ன்

பின்னால் உள்ள படிக்கட்டு பக்கத்தில். மின்னல் வந்தது பஸ்-ன் முன்னால் உள்ள

படிக்கட்டு பக்கத்தில் இருந்து. அவள் பேரழகி ஒன்றும் இல்லை. எதோ

பார்கிறதுக்கு சுமாரா இருந்தாள். ஆனாலும் என்னவோ அவள் வீசிவிட்ட அந்த

பார்வையில் எதோ இருந்தது. தலையில் வைத்திருந்த மல்லிகை பூ

வாடியிருந்தது. அது கூட சில நேரம் பெண்களுக்கு கூடுதல் மாலை நேர அழகு

கூட்டுகிறது. புக்ஸ் எல்லாம் மார்புடன் சேர்த்து அனைத்து பிடித்திருந்தாள்.

ஹ்ம்ம் ...குடுத்து வைத்த புக்ஸ். அடிக்கடி அவள் பார்வை என் பக்கம் படுவதை

என்னால் தவிர்க்க முடியவில்லை. சரி என்னதான் நடக்கிறது என்று

பார்க்கலாமே என்று நானும் அவளை கவனிக்க தொடங்கினேன்...சைட் அடிக்க

ஆரம்பித்தேன்.

அடுத்த நாள் முதல் அவளின் வருகைக்கு காத்திருக்க தொடங்கினேன். அவள்

போகும் பஸ்-இல் தான் போகணும் என்று எனக்குள்ளே டைம் டேபிள் போட்டு

வைத்துக்கொண்டேன். நான் இறங்கும் ஸ்டாப்பிற்கு ஒரு ஸ்டாப் முன்னால அவ

எறங்கி போகிறதை டெய்லி புன்னகையுடன் பார்த்து மனதுக்குள் பை பை

சொல்லிகொண்டிருந்தேன். ஹ்ம்ம் கல்நெஞ்சகாரி பஸ்-இல் இருக்கும்போது

அடிக்கடி பார்க்கிறாள், பஸ் விட்டு இறங்கி போகும்போது ஒரு புன்னகை கூட

செய்யாமல் திரும்பி பார்க்காமல் போய் விடுவாள்.

இதுக்குமேல நம்மால் தாங்க முடியாது. எப்படியாவது அவளை சந்தித்து இரண்டு

வார்த்தை பேசி காதலை வளர்த்துக்க வேண்டியது தான். ஆனால் உள்ளுக்குள்

ஒரு பயம். ஏதாவது பிரச்சினை ஆகிவிட்டால். அதுவும் முதல் காதல். அதுவே

நமக்கு முடிவுரை ஆகி விட கூடாது. ஹ்ம்ம் என்ன செய்யலாம் என்று

யோசிக்கும்போது..மனதுக்கும் வந்தான் மீனவ நண்பன் மரிய சூசை.


மரிய சூசை வாரம் முழுவதும் கடலில் தொழிலுக்கு போவான். வார கடைசியில்

சம்பாதிச்ச மொத்தமும் செலவு பண்ணுவான். ஆள் பார்க்கிறதுக்கு கொஞ்சம்

கரடு மொரடா இருப்பான். அவன் தொழில் அப்படி. கடலில் மீன் பிடிக்க போய்

போய் ஆள் கொஞ்சம் கருப்பா ஒரு மார்க்கமா இருப்பான். ஊர்ல மாரியாத்தா

கோயில் விசேஷம், சூசையப்பர் கோயில் விசேஷம் எதுவானாலும் அதுல

இவனோட ஒரு சண்டை காட்சி கண்டிப்பா ப்ரீ. எதாவது ஒரு காரணத்துக்கு ஒரு

சண்டை இழுத்துகிட்டு வந்துடுவான். ஆனாலும் நண்பர்கள் என்று

வந்துவிட்டால் உயிரையும் குடுப்பான். கணக்கு பார்க்கம செலவும் பண்ணுவான்.

அதனால இவங்க எங்க பிரெண்ட்ஸ் எல்லாருக்கும் புடிக்கும். எங்கியாச்சும் வீண்

சண்டைக்கு போறதா இருந்தாலும் இவன் துணையோட தான் போவோம். மரிய

சூசைக்கு புடிக்காத ஒன்னு காதல். ஒரேடியா புடிக்காதுன்னு சொல்ல முடியாது.

ஆனாலும் அவ்வளவா நம்பிக்கை இல்லாதவன். இருந்தாலும் ரொம்ப கெஞ்சி

கூத்தாடி கேட்டுகிட்டா காதல் சம்பந்தமான பிரச்சினைக்கு கூட வருவான்.

அதனால தான் இவனை துணைக்கு கூப்பிட்டு போய் நம்ம ஆளு (இதுவரைக்கும்

அவ பெயர் கூட தெரியாது) கிட்ட காதலை சொல்லிடலாம் னு ஐடியா பண்ணேன்.


சூசை கிட்ட சொன்னதும் மொதல்ல ...ங்கோத்தா ...அப்படி இப்படின்னு

ஆரம்பிச்சான். உனக்கெல்லாம் புத்தியே இல்லையாடா னு அட்வைஸ் எல்லாம்

சொன்னான். கூடவே காது கூசும் அளவுக்கு கெட்டவார்த்தை எல்லாம்

சொன்னான். இருந்தாலும் கெஞ்சி கூத்தாடி அவனை சம்மதிக்க வச்சேன். ஜஸ்ட்

கூட வந்தா போதும். நான் லவ் சொல்லிருவேன் னு சொல்லி அவனை சம்மதிக்க

வச்சேன். அதாவது எங்க ப்ளான் எப்படின்னா....அவ இறங்குற பஸ் ஸ்டாப் - ல

இருந்து அவ வீட்டுக்கு ஒரு அரை கிலோமீட்டர் நடக்கணும். அங்க தான்

நெசவாளர் காலனி இருக்கு. அதுவரைக்கும் எந்த வீடும் கிடையாது. நான் அடுத்த

ஸ்டாப்- ல இறங்கி சூசைய கூப்பிட்டுகிட்டு சைக்கிள் எடுத்துகிட்டு இவளை ஆள்

இல்லாத இடத்துல வச்சு மடக்கனும் (அவ இறங்குற ஸ்டாப்-க்கும் நான்

எறங்குற ஸ்டாப்-க்கும் ஐந்து நிமிஷம் தான் இடைவெளி) எப்படி பார்த்தாலும்

அவ அரை கிலோமீட்டர் நடந்து போறதுகுள்ளே அவளை புடிச்சிடலாம்.


இரவெல்லாம் கனவுகளுடன் காதலாகி போனேன். அவளுடன் இனிவரும்

நாட்கள் எப்படி காதலுடன் கழிக்க போகிறேன் என்று பிளான் பண்ணி பண்ணி

தூங்கிபோனேன். மனசுக்குள்ளே ஒருமாதிரி ஒரு பயம்கலந்த சந்தோசம். எல்லா

நாள் போலவே அந்த நாளும் சென்றது. வழக்கம் போலவே பஸ்-இல் பல

பார்வை மின்னல்களை அவ வீசினாள். பதிவு போலவே எல்லாதுக்கும் நானும்

புன்னகை பூத்தேன். இதோ என் தேவதை பஸ் விட்டு இறங்கி போகிறாள். என்

இதய துடிப்பு நிமிடத்துக்கு நிமிடம் ஏறிக்கொண்டே போகிறது. அடுத்த ஸ்டாப்-

இல் பரபரப்பா இறங்கினேன். சூசை சைக்கிளுடன் நின்றிருந்தான். வாடா மச்சி.

அவ இப்ப தான் இறங்கி போகிறாள். சீக்கிரம் போனா புடிச்சிடலாம் னு அவனை

அவசர படுத்தினேன். என்னை கேவலமா ஒரு பார்வை பார்த்தான். சூசை என்னை பின்னால வைத்து சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தான்.

அதோ மச்சி ...அந்த பொண்ணு தாண்டா...நீ பக்கதுல போய் சைக்கிள் நிப்பாட்டு.
]
நான் அவ கூட பேசுறேன்..



சூசை நான் சொன்னது போல் அவ பக்கத்தில போய் சடன் பிரேக் போட்டு

சைக்கிள் நிப்பாட்டுனான்.. நான் சைக்கிள் விட்டு இறங்கி அவளிடம் பேச

முற்படுகையில்...அவன் கண்டும் காணாதது போல் போய்கொண்டே இருந்தாள்.

சூசை என்னை பார்க்க ஆரம்பித்தான்..எனக்கோ அவளிடம் பேச தைரியம்

வரவில்லை...அனால் பேசியே ஆகணும் இன்னைக்கு...தவித்தேன்..ஒன்னும்

புரியாம மக்கு மாதிரி நின்னேன.

ஹலோ மேடம்......சூசை அவளை கூப்பிட்டான்.

எஸ்...என்று அவள் திரும்பி பார்த்து நின்றாள்

என் பிரெண்டு உன்கூட எதோ பேசனுமாம்...என்று சூசை சொல்லும்போதே நான்

அவள் பக்கத்தில் சென்றேன்.


எஸ்...நீங்க யாரு? என்ன பேசணும்...

நானா...நான்...நான்...(அயோ வார்த்தை வர மாடேங்குதே)...இவளோ நாளும் பஸ்

ல பார்த்துட்டு இப்போ நீங்க யாருன்னு கேட்கிறாளே..

எனக்கு போகணும்...ப்ளீஸ் சொல்லுங்க என்ன பேசணும்..

நான்...பஸ்-ல....டெய்லி....பார்த்து...(சூசை என்னை மொறைக்க ஆரம்பிச்சான்,

எனக்கு மணிரத்னம் பட டயலாக் மாதிரி பாதி பாதி தான் பேச்சு வருது)


ஓ...இப்போ எனக்கு ஞாபகம் வருது...

ஸ்ஸ்ஸ் அப்படா இப்பவாச்சும் ஞாபகம் வந்துசே...னு மனசுக்குள்ளே சந்தோஷ

பட ஆரம்பித்தேன்...



ஹேய்...மிஸ்டர் உங்க கிட்ட கேட்கணும் னு நினைச்சேன்...பஸ்-ல என்னை

அடிக்கடி பார்த்து ஏன் சிரிகிறீங்க. ..ஒரு நாள் சிரிச்சப்போ நான் சீரியஸா

எடுத்துக்கல....இப்படி அடிக்கடி பார்த்து லூசு மாதிரி சிரிச்சா என்ன அர்த்தம்...


என்னது லூசா....(எனக்கு கை எல்லாம் வியர்க்க ஆரம்பிச்சுது...மயக்கம் வர

மாதிரி)....ஹேய் நீ தானே பஸ்-ல டெய்லி என்னை அடிக்கடி பார்க்கிறே...அது

தான் நானும் உன்னை பார்த்து சிரிச்சேன்..


நிஜமா..நீ லூசு தான்...நான் பின்னால நிக்கிற கண்டக்டர் எப்போ டிக்கெட் கேட்டு

முன்னால வருவாரு-னு அடிக்கடி பார்ப்பேன். இறங்குற இடம் வரதுக்குள்ளே

கண்டக்டர் வருவாரா மாட்டாரான்னு நான் அவரை அடிக்கடி பார்ப்பேன். அந்த

டைம் ல நீ அங்க நின்னு சிரிக்கிறே. இது உனக்கே கேவலமா இல்ல. இதை

கேட்கிறதுக்கா கூட துணைக்கு ஒரு ஆளையும் கூட்டிகிட்டு வந்தே,.


அவள் சொல்ல சொல்ல ....அவள் கழுத்தில் கிடந்த சிலுவையில் என் காதல்

அறையபடுவது போல தோணியது..


இதை சொல்லிவிட்டு திரும்பி கூட பார்க்காமல்.....அவள் நடக்க ஆரம்பித்தாள்.

நான் திரும்பி சூசையை பார்தேன்....அவன் கண்களில் தெரிந்த

கோபத்தில்.....அவன் மனதில் ஓடிய வார்த்தைகளை என்னால் படிக்க முடிந்தது...


ங்கோத்தா....காதலிச்சே சாவுங்கடா...

Loading...
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More