Blogroll

வயது ஏறினால் அழகும் கூடும்!

குழந்தையாக இருக்கும் போது தொடங்கி பேரிளம் பெண்ணாக மாறும் வரை பெண்கள் ஒவ்வொரு கால கட்டத்திலும் அழகுதான். எந்தப் பெண்ணையுமே அழகில்லை என்று கூற யாருக்குமே மனசு வராது...

சுகப்பிரசவத்தை அளிக்கும் குங்குமப்பூ

எந்தப் பூவிலும் இல்லாத புதுமை குங்குமப்பூவில் உண்டு. உடல் நிறத்தை சிவப்பாக மாற்றக் கூடிய அற்புதக் குணம் இதில் நிறைந்து காணப்படுகிறது. குங்குமப்பூக்களின்..

மனைவியை புரிந்து கொள்ள.!!!

மனைவியை புரிந்து கொள்ள முடியவில்லை என்று புலம்புவர்களுக்காக இது. மனைவியை மயக்க ஐடியாக்கள் இது மனைவியை மயக்க மட்டும்தான்.. கல்யாணம் ஆகாதவர்கள் வேண்டுமானால் இதை யூஸ் பண்ணி பெண்களை மயக்க டிரைப் பண்ணலாம். மயக்குங்க ஆனா நீங்க மயங்கிடாதீங்க.

நீங்காத நினைவுகள்...

தேய்ந்தாலும் வானை விட்டு நீங்காத பிறையை போல... உதிர்ந்தாலும் மலரை விட்டு நீங்காத காம்பை போல...

அம்மா என்பவள் காத்திருப்பவள்

நினைவுகள் எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் அம்மா என்பவள் மெலிந்த தேகமும் கந்தலான உடையும் அணிந்தவள் சமையல் பாத்திரங்களுக்கு முன்பு வியர்வை துடைப்பவள் நெருப்பை சீராக வளரவிடுபவள்

Wednesday, November 30, 2011

இணையத்தில் அதிக வருவாய் ஈட்டும் தளங்கள்!

இணையத்தில் அதிக வருவாய் ஈட்டும் தளம் எது என்ற கேள்வி எழுந்தால், நம்மில் பலர் அளிக்கும் பதில் கூகுள் அல்லது பேஸ்புக் என்றே இருக்கும்.

எனினும் உண்மை அதுவல்ல. இணையத்தில் அதிக வருவாய் ஈட்டும் தளம் அமேசன்.கொம் ஆகும்.


1. Amazon

இணையத்தில் பொருட்களை வாங்க உதவும் தளம் இது. பொருட்களை வாங்குவதற்கான ஒன்லைன் சந்தையாக விளங்கும் இது, விநாடிக்கு $776.66 படி. இதன் மொத்த வருடாந்த வருவாய் $24,509,000,000 ஆகும்.

2. Google

இணைய உலகில் கூகுள் தொடர்பில் அறியாதவர் எவருமிலர் எனலாம். இதன் வருட வருமானம் $23,650,560,000. ஒரு வினாடிக்கு $749.46 ஆகும்.

3. Comcast

அதிகம் சம்பாதிக்கும் பட்டியலில் இந்த தளம் மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்தத் தளத்தின் ஆண்டு வருமானம் $8,727,360,000 ஆகும். சராசரியாக ஒரு வினாடிக்கு 276.56$ சம்பாதிக்கிறது.

4. ebay

Amazon தளத்தை போன்று இதுவும் ஒன்லைனில் பொருட்களை வாங்கவும், விற்பனை செய்யவும் உதவும் இணையதளம். வினாடிக்கு 276.56$ ஐயும் ஆண்டுக்கு $8,727,360,000 ஐயும் இது சம்பாதிக்கின்றது.

5. Yahoo

இணையத்தில் மிகப்பிரபலமான தளம் இது. இதனுடைய ஆண்டு வருமானம் $6,460,000,000 ஆகும். சராசரியாக ஒரு வினாடிக்கு $204.71 ஆகும்.

6.Reuters

செய்தித்தளமான இது வினாடிக்கு 107$ வருமானமும் ஆண்டுக்கு $ 3,400,000,000 வருமானமும் பெற்றுக்கொள்கின்றது.

7. AOL

இந்தத் தளம் வினாடிக்கு 99.41$ம், ஆண்டுக்கு $3,137,100,000ம் வருமானமாகப் பெற்றுக்கொள்கின்றது.

8. Expedia

பயணம் செய்பவர்களுக்கு இது பயனுள்ள தளமாகும். டிக்கெட்டுகள் வாங்குவதில் இருந்து விமானங்களின் நேரங்கள் மற்றும் பல தகவல்களை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். இந்தத் தளம் வருடத்திற்கு $2,937,010,000 வருமானம் பெற்றுத் தருகிறது. இதன் ஒரு வினாடிக்கான வருமானம் $93.07 ஆகும்.

9. Paypal

ஒன்லைனில் பணம் பரிமாற்றம் செய்யும் அனைவருக்கும் இந்த தளம் பற்றி தெரிந்திருக்கும். உலகம் முழுவதும் பணப் பரிமாற்றம் செய்ய மிகப் பிரபலமான பயனுள்ள இணைய தளம் இது. இந்தத் தளம் வினாடிக்கு 91.90$ படி ஆண்டுக்கு $2,900,000,000 சம்பாதிக்கிறது.

10. iTunes

பட்டியலில் பத்தாவது இடத்தில் இருப்பது அப்பிள் நிறுவனத்தின் iTunes இணைய தளமாகும். இந்தத் தளத்தின் ஒரு வினாடிக்கான வருமானம் 60.21$. ஆண்டுக்கு $1,900,000,000 வருமானம் இந்த தளம் மூலம் பெற்றுக் கொள்கின்றது அப்பிள்.

பலரது விருப்பத்திற்குரிய பேஸ்புக், இப்பட்டியலில் பெற்றுக் கொண்டுள்ள இடம் 16. இதன் ஆண்டு வருமானம் $1,000,000,000 .வினாடிக்கு $31.69.

Monday, November 28, 2011

பெண்ணின் மனசு அவ்வளவு ஆழமா?





கடலின் ஆழத்தில் உள்ளதைக் கூட கண்டுவிடலாம், பெண்ணின் மன ஆழத்தில் புதைந்து கிடப்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்று கவிஞர்களும், உளவியல் நிபுணர்களும் தெரிவித்துள்ளனர். ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மனோதத்துவ ஆய்வாளர் பேகோ ஆய்வு செய்துள்ளார். எண்ணற்ற பெண்களிடம் பேசியதன் அடிப்படையில் அவர்களின் மனதிற்குள் புதைத்து வைத்திருந்த ரகசியங்களை வெளிக்கொண்டுவந்துள்ளார்.

பெண்கள் எதைத்தான் விரும்புகிறார்கள்? அதற்கான காரணங்கள் என்ன என்பதைப்பற்றி பேகோ மிகப்பெரிய பட்டியலிட்டுள்ளார். அவை உங்களுக்கு:

தனித்திறன் அவசியம்

மிகச்சிறந்த ஆண்மகனைத்தான் அனைத்து பெண்களும் பிடிக்கும் என்று கூறியுள்ளனர். தனித்திறன் மிக்கவனாகவும், அனைவராலும் பாரட்டு பெற்ற ஆண்மகனையே தங்கள் துணையாக தேர்ந்தெடுப்போம் என்று 80 சதவிகித பெண்கள் தெரிவித்துள்ளனர். மிக முக்கியமாக படுக்கையறையில் புதுமையாக செயல்படும் கணவனாக அமையவேண்டும் என்பது அனைத்து பெண்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. போர் அடிக்கும் விதமாக இல்லாமல், எதையும் வித்தியாசமாக சொல்லவோ, செய்யவோ வேண்டும் என்று அநேகம் பெண்கள் கூறியுள்ளனர்.

வருமானத்தின் பகிர்வு

கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசை எல்லாப் பெண்களிடமும் உள்ளது. அந்த வேலையை கணவன் தேடித் தந்தால் அவர்கள் மிகவும் மகிழ்வார்கள். ஒரு குடும்பத்தில் கணவனிடம் மட்டுமே குடும்ப வருமானம் இருக்கக் கூடாது. மனைவியிடமும் கொஞ்சம் பணம் இருக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் தன்னை மதிப்பார்கள் என்று ஒவ்வொரு பெண்ணும் நினைக்கிறாள்.

ஓய்வுக்கு அனுமதிக்கவேண்டும்

அலுவலக நாளில் அதிகாலையில் எழுந்து வேலைகள் செய்துவிட்டு அரக்க, பரக்க ஓடவேண்டியுள்ளது. எனவே விடுமுறை நாட்களிலாவது தங்கள் இஷ்டம் போல தூங்கி ஓய்வெடுக்க வேண்டும் என்பது 70 சதவிகிதம் பெண்களின் விருப்பமாக இருக்கிறது. ஏதாவது விசேசமாக செய்யலாமே என்று கணவன் தொந்தரவு செய்யக்கூடாதாம்.

வெளியூர் டூர் அவசியம்

வேலைக்கு போகாமல் வீட்டில் இருக்கும் பெண்கள் பலரும் வாரம் ஒருமுறையாவது தங்கள் கணவர் தங்களை தியேட்டர், ஹோட்டல் என்று அழைத்து செல்ல வேண்டும் என்று விரும்புகின்றனர். வருடத்திற்கு ஒருமுறை நான்கைந்து நாட்கள் வெளியூர் சுற்றுலாவிற்கு அழைத்து செல்ல வேண்டுமாம்.

திருமணத்தின் போது ஒல்லியா இருந்தவர்கள் குழந்தை பேற்றினால் குண்டாகிவிட்டால் அதைக்கூறி மனதை புண்படுத்தக்கூடாது என்பது நூறு சதவிகித பெண்களின் கருத்தாக உள்ளது.

கட்டுப்பாடு கூடாது

ஆபிசிற்கு போகிறேன் பேர்வழி என்று வீட்டில் இருக்கும் பெண்களை அநேக ஆண்கள் படுத்தி எடுப்பதாக ஏராளமான பெண்கள் நினைக்கின்றனர். எனவே காலை நேரத்தில் அலுவலகம் புறப்படும் ஆண், அது எடு, இதை எடு என்று தொந்தரவு செய்யக்கூடாதாம். அதேசமயத்தில் பொறுமையாக கேட்டால் அதனை செய்து தர ரெடியாகவே இருப்பதாக பெண்கள் தெரிவித்துள்ளனர்.

சாவி கொடுத்த பொம்மை போல பெண்களை பயன்படுத்தக்கூடாது என்பது ஒட்டுமொத்த பெண்களின் எண்ணமாக இருக்கிறது. அதிகம் பேசாதே, சிரிக்காதே என்று கட்டுப்படுத்தக்கூடாதாம். தங்களுக்கான சுதந்திரத்தில் யாரும் தலையிடக்கூடாது என்பது அநேகம் பேரின் விருப்பமாக உள்ளது.

செல்போனில் நீண்ட நேரம் அரட்டை அடித்தாலும் கண்டு கொள்ளக்கூடாது. `அய்யோ… பில் அதிகமாகி விடும்’ என்று சொன்னால் எரிச்சல் ஆகிவிடும் என்று பெண்கள் தெரிவித்துள்ளனர். அதனால், தங்களின் மனம்போல் பேச விட்டுவிட வேண்டும் என்று பெண்கள் தெரிவித்துள்ளனர்.

சம பங்கு வேண்டும்

எந்தவொரு முடிவை கணவன் எடுத் தாலும், அதில் மனைவியின் பங்களிப்பும் இருக்க வேண்டும். முடிவு எடுக்கும் விஷயத்தில் மனைவியை புறக்கணிக்கக்கூடாது. குழந்தைகளை கவனிப்பதில் இருவரும் சமமாக இருக்கவேண்டும் என்பது பெண்களின் விருப்பம். எதற்கெடுத்தாலும் குற்றம் குறை கூறிக்கொண்டிருக்கும் ஆண்களை அறவே பிடிக்காதாம் பெண்களுக்கு.

என்ன பெண்ணின் மனதில் உள்ள ரகசியங்களைப் படித்து மயக்கமே வருகிறதா? இது சாம்பிள்தான். புதிதாக திருமணம் செய்து கொண்ட ஆண் புது மனைவியின் ஆசையை நிறைவேற்ற படும் பாடு இருக்கிறதே பக்கத்தில் இருந்து பார்ப்பவர்கள் செம சிரிப்பை வரவழைக்கும். அவர்கள் பேசாமல் பேகோ கூறியவற்றை படித்து அதன்படி பெண்களின் சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றினாலே குடும்பம் குதூகலமாக மாறிவிடும்.

கணவரை 'கைக்குள்' வைப்பது எப்படி?




உங்கள் கணவரை உங்கள் கைக்குள் வைத்துக் கொள்ள விரும்புகிறீர்களா? 'ஆமாம், ஆமாம்' என்று நீங்கள் அதி வேகமாக பதி்ல் சொல்வது தெரிகிறது.

கணவரின் அன்பை நிரந்தரமாகப் பெறுவதற்கு நிறைய வழிகள் உள்ளன. என்னென்ன செய்யலாம் என்று கொஞ்சம் பார்ப்போமா..

காதலர்கள் மட்டும் தான் ஐ லவ் யூ சொல்ல வேண்டும் என்றில்லை. கணவனும், மனைவியும் கூட சொல்லலாமே. தினமும் உங்கள் கணவரிடம் ஐ லவ் யூ சொல்லுங்கள். அவர் மகிழ்ந்து போய் ஐ லவ் யூ டூ டா செல்லம் என்று சொல்வார்.

கணவர் காலை அலுவலகத்திற்கு கிளம்பும் முன்பு அன்பாக ஒரு முத்தம் கொடுத்து அனுப்பி வையுங்கள். திரும்பி வந்ததும் உங்களுக்கு அவர் இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிப்பார். அன்றைய நாள் இருவருக்குமே இனிய நாளாக இருக்கும்.

கணவருக்கு மரியாதை கொடுங்கள். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். அதனால் பல பிரச்சனைகள் தீரும். மீறியும் வாக்குவாதம் ஏற்பட்டால் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். நீங்கள் ஒரு முறை விட்டுக் கொடுத்து தான் பாருங்களேன். அடுத்த முறை அவர் விட்டுக்கொடுப்பார்.

என் கணவர் ஒரு முடிவு எடுத்தால் அது சரியாக இருக்கும். அவர் ஏதாவது சொன்னால் அதில் ஒரு காரணம் இருக்கும் என்று நம்புங்கள்.

கணவரை நல்ல நண்பராக்கிக் கொள்ளுங்கள். நண்பர்கள் போன்று மனம் விட்டுப் பேசுங்கள்.

கணவன், மனைவிக்கு இடையே யாரையும் நுழைய விடாதீர்கள். உங்கள் பிரச்சனைகளை நீங்களே பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் சிறிய பிரச்சனை கூட பூதாகரமாக வெடிக்க வாய்ப்புண்டு.

எதற்கெடுத்தாலும் என் அம்மா வீட்ல எப்படி இருந்தேன் தெரியுமா என்று மூக்கைச் சிந்த ஆரம்பிக்காதீர்கள். அது கணவருக்கு எரிச்சலூட்டும். முடிந்தால் அம்மா வீட்டில் போய், எங்க வீட்டுக்காரர் வீட்ல எப்படி கவனிச்சுக்குறாங்க தெரியுமா என்று கணவர் புகழ் பாடுங்கள். உங்களவருக்கு உங்கள் மீது கிரேஸ் கூடும்.

கணவர் மீது முழு நம்பிக்கை வையுங்கள். கணவருடன் குழந்தைத் தனமாக பேசுங்கள், விளையாடுங்கள். இது மன இறுக்கத்தைப் போக்கும்.

உங்க அம்மா இருக்காங்களே, உங்க அக்கா, தங்கச்சி இருக்காங்களே மனுஷிங்களா ராட்சசிங்க என்று மட்டும் மாமியார், நாத்தனார்களைப் போட்டுக் கொடுக்காதீர்கள். குறை இருந்தால் சொல்லலாம், ஆனால் பட்டென உடைத்து படாரென பேசி கெடுத்து விடக் கூடாது. எதையும் நேரம் காலம் பார்த்து சொல்ல வேண்டும். இல்லை என்றால் உங்கள் வாழ்க்கையில் நீங்களே மண்ணை அள்ளிப்போட்டது போன்றாகிவிடும். எதையும் நாசுக்காக எடு்ததுச் சொல்லுங்கள். அவர் புரிந்து கொள்வார்.

உங்கள் மாமியார், நாத்தனார் பிரச்சனை செய்தாலும் கூட என் பொண்டாட்டி சும்மா தான் இருக்கா நீங்க தான் அவ கூட சண்டைக்கு வரிஞ்சு கட்டிக்கிட்டு வருகிறீர்கள் என்று உங்களுக்கு ஆதரவாகப் பேசுவார்.

சண்டை போடாத கணவன், மனைவி இருக்க முடியாது. அப்படி சண்டை போட்டால் அதை மனதில் வைத்துக் கொண்டே இருக்கக் கூடாது. அவ்வப்போது மறந்துவிட வேண்டும். கட்டிப்பிடி வைத்தியத்திற்கு இதில் நிறையப் பங்கு உண்டு. அதையும் விடாதீர்கள். அடிக்கடி கணவரை அன்புடன், ஆசையுடன் கட்டிப்பிடியுங்கள்.

கணவரை அடக்கி ஒடுக்கித்தான் உங்கள் வசப்படுத்த வேண்டும் என்பதில்லை. அன்பாலும் உங்கள் பக்கம் சாய வைக்கலாம். இதையெல்லாம் செய்து பாருங்கள், பிறகு உணர்வீர்கள் அருமையான மாற்றங்களை...!

கல்யாணமாயிட்டா 'உண்டாகலாம்', குண்டாகக் கூடாது!





திருமணத்திற்குப் பிறகு பெரும்பாலான ஆண்களும், பெண்களும் தங்கள் உடலைப் பராமரிப்பதில்லை. கேட்டால் அதான் கல்யாணம் ஆயிடுச்சே, இனி நான் எப்படி இருந்தால் என்ன என்று அலட்சியமாக பதில் சொல்வார்கள்.

திருமணத்திற்கு முன்பு ஆண்களும், பெண்களும் உடல் பருமன் அதிகரிக்காமல் இருக்கத் தேவையான அனைத்தையும் செய்வார்கள். ஆனால் திருமணம் முடிந்துவிட்டது என்றால் அதை அப்படியே மறந்துவிடுவார்கள். இதில் ஆண்களை விட பெண்கள்தான் ரொம்ப மோசம். கட்டுடலை அப்படியே தளர விட்டு விடுவதில் அவர்கள்தான் நம்பர் ஒன்.

என்னம்மா, இவ்வளவு குண்டாகிட்டே என்று கேட்டால். கல்யாணம் ஆயிடுச்சு அதான் உடம்பு வச்சிருச்சு என்பார்கள். ஆண்களைக் கேட்டாலும் அதே பதில் தான். ஒரு குழந்தை பிறந்துவிட்டால் போதும் பெண்கள் தங்களை கவனித்துக் கொள்வதே இல்லை. அது தவறு.

கணவனின் கண்ணுக்கு நீங்கள் என்றைக்குமே அழகாக இருக்க வேண்டாமா? எப்பொழுதும் உடலைக் கட்டுகோப்பாக வைத்துக் கொள்ளுங்கள். உடற்பயிற்சி செய்யுங்கள். அதுக்கெல்லாம் நேரம் எங்கே இருக்கு என்ற நொண்டிச் சாக்கை சொல்லாதீர்கள். நீங்கள் தான் நேரத்தை ஒதுக்கி உங்களை கவனித்துக் கொள்ள வேண்டும்.

நீங்கள் உங்கள் உடலைப் பராமரிப்பதைப் பார்த்துவிட்டு என்ன பெரிய கத்ரீனா கைப், என் பொண்டாட்டி மாதிரி வருமா என்று உங்கள் கணவர் பெருமையாக சொல்ல வேண்டும்.

ஆண்கள் திருமணம் முடிந்தால் போதும் நன்றாக சாப்பிட்டு தொப்பை போட்டுவிடும். நாளுக்கு நாள் தொப்பை பெரிதாகிக் கொண்டு தான் போகும். நீங்கள் எப்படி உங்கள் மனைவி சிக்கென்று இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களோ அதேபோன்று தானே அவரும் உங்களிடம் எதிர்பார்ப்பார்.

ரித்திக் ரோஷன் மாதிரி 'சிக்ஸ்' பேக் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. 'ரைஸ் பேக்' மாதிரி ஆகி விடாமல், உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள் குறையுங்கள் என்று தான் சொல்கிறார்கள்.

ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, உடல் பருமனை கட்டுக்குள் வைத்திருப்பதாலும், உடல் பருமன் அதிகரித்து விடாமல் பார்த்துக் கொண்டாலும் அழகுடன் திகழ முடியும். தேவையில்லாத நோய்களை அண்ட விடாமல் தடுக்கவும் முடியும்.

எனவே, சிக் உடம்போடு திகழ்வது அழகுக்கு மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்கும் அவசியம். கல்யாணமாகி விட்டதே என்று அலட்சியமாக இருந்து விடாமல் அழகாகவும், ஆரோக்கியமாகவும் திகழ முயற்சியுங்கள்.

Sunday, November 13, 2011

How to use STEREO MIX in WIN-7

STEP - 1

STEP - 2


STEP - 3

STEP - 4

STEP - 5

STEP - 6.0

STEP - 6.1


Tuesday, November 8, 2011

மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்!




கணவன் மனைவி என்று இருந்தால் அங்கு பிரச்சனை இல்லாமலா இருக்கும். ஆனால் அவ்வப்போது எழும் பிரச்சனைகளை அப்பொழுதே மறந்துவிட்டால் இல்லறம் நல்லறமாக இருக்கும். இல்லை என்றால் திருமண வாழ்க்கை கசந்துவிடும்.

மனைவிகளிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்,

1. எப்பொழுது பார்த்தாலும் நை, நை என்று நச்சரிப்பது. என்னங்க வீட்டுக்கு ஒரு புது டிவி வாங்கலாம், புது டிசைன் நகை வாங்கலாம் என்று பெரிய பட்டியல் போடுவது. கணவன் வரவுக்கேற்ப செலவழித்தால் நல்லது.

2. கேள்வி கேட்டே கொல்வது. அலுவலக்ததில் இருந்து வீ்ட்டுக்கு வர நேரமாகிவிட்டது என்றால் அவ்வளவு தான். ஏன் லேட், எங்கே போனீங்க, யாரைப் பார்த்தீங்கன்னு பல கேள்விகள். ஏற்கனவே எரிச்சலில் வந்திருக்கும் கணவனை இந்த கேள்விகள் மேலும் எரிச்சலூட்டும்.

3. நான் செய்வது தான் சரி என்கிற எண்ணம் கணவன்மார்களை கடுப்பாக்கும்.

4. என்னை ஸ்போர்ட்ஸ் சேனல் பார்க்க விட மாட்டேன் என்கிறாள். ஆனால் அவள் மட்டும் எப்பொழுது பார்த்தாலும் சீரியல் பார்த்து என்னை வதைக்கிறாள் என்று கணவன்மார்கள் புலம்புகிறார்கள்.

5. நிம்மதியா கார் ஓட்ட விட மாட்டேன் என்கிறாள். அப்பொழுது கூட ஏதாவது பிரச்சனையைப் பற்றி பேசி இம்சிக்கிறாள்.

6. அவளுக்கு உதவலாமே என்று சமையல் அறைக்குள் சென்றால், நீங்க வேலைப் பார்த்து கிழிச்சீங்க. எனக்கு ஒன்னுக்கு இரண்டு வேலை வைக்காம போங்க என்று விரட்டுகிறாள்.

7. நான் அவளுக்கு மட்டுமே சொந்தம் என்று நினைக்கிறாள். என் பெற்றோரைக் கூட அண்டவிட மாட்டேன் என்கிறாள். என்னையே என் பெற்றோருக்கு எதிராகத் திருப்ப முயற்சி செய்கிறாள்.

8. உடன் பிறப்புகளுடன் பேசவிட மாட்டேங்கிறா. பேசினால் இட்டுகட்டி ஏதாவது குற்றம்குறை கூறுகிறாள்.

9. நண்பர்களுடன் வெளியே செல்ல முடியவில்லை. நான் முக்கியமா, இல்லை உங்களுக்கு நண்பர்கள் முக்கியமா என்கிறாள்.

10. திடீர், திடீர் என்று கோபப்படுகிறாள். காரணம் கேட்டால் திட்டித் தீர்த்து விடுகிறாள்.

என்ன பெண்களே, இந்த தவறுகளைத் திருத்திக் கொண்டு கணவன் மெச்சும் மனைவியாக நடக்க முயற்சி செய்வீர்களா?

வயசான காலத்தில பெத்தவங்கள அலைக்கழிக்காதீங்க




ஆடி, ஓடி முடிந்து அமைதியாக வாழ்க்கையை வாழ வேண்டிய நேரத்தில் வயதானவர்கள் என்று கூட பார்க்காமல் பிள்ளைகள் பெற்றவர்களை கஷ்டப்படுத்துகின்றனர். வ.தான காலத்தில் பெற்றோர்கள் இருவரும் சேர்ந்து இருக்கத் தான் ஆசைப்படுவார்கள். ஆனால் தற்போதுள்ள தலைமுறை அவர்களை பிரித்து வைத்துவிடுகிறது.

அம்மா தலைமகன் வீட்டில் ஒரு மாதம் இருந்தால், அப்பா இளையவன் வீட்டில் இருப்பார். அடுத்த மாதம் இருவரும் இடமாறிவிடுகிறார்கள். அதிலும் அம்மாவுக்கு தான் அதிக மவுசு. காரணம் அம்மா வீட்டு வேலகளைப் பார்த்து கொள்வாரல்லவா. கடைசி காலத்தில் தந்தைகளின் பாடு தான் கஷ்டமாகிவிடுகிறது.

இருவரையும் ஒரே வீட்டில் வைத்துப் பார்த்துக் கொள்ள பிள்ளைகள் சம்மதிப்பதில்லை. வயதான காலத்தில் பழைய அனுபவங்கள் பற்றி பேசி மகிழ்வது தான் அவர்களுக்கு இன்பம். அந்த இன்பத்தைக் கூட பிள்ளைகள் பெற்றோருக்கு கொடுக்க மறுக்கின்றனர்.

ஒன்று தந்தையையும், தாயையும் பிரித்துவிடுகின்றனர். இல்லை என்றால் எங்களால் உங்களைப் பார்த்துக் கொள்ள முடியாது என்று முகத்தில் அடித்தது போல் கூறி அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடுகின்றனர்.

பெற்ற பிள்ளை டாக்டராக, வழக்கறிஞராக, 1000 பேருக்கு வேலை தருபவராக இருக்கையில் பெற்றோர் முதியோர் இல்லத்தில் வசிக்க வேண்டிய அவல நிலை. அதை நினைத்து நினைத்து அவர்கள் தினமும் கண்ணீர் வடிக்கின்றனர். எம்புள்ளைய எப்படியெல்லாம் ஆசை, ஆசையா வளர்த்தேன் இப்படி என்னை கடைசிக் காலத்தில் வீட்டை விட்டு விரட்டினானே என்று நொந்தே சாகின்றனர்.

வந்தவரை வாழவைக்கும் தமிழகம் என்று பெருமையாக சொல்கிறோம். ஆனால் அதே தமிழகத்தில் முதியோர் இல்லங்கள் அதிகரித்து வரும் அவல நிலையை எங்கே போய் சொல்வது. வந்தவர்களை வாழவைத்துவிட்டுவிட்டு பெத்தவங்கள வெளியே தள்ளுவது தான் நம் பண்பாடா? தனக்கும் வயதாகும் என்பதை பிள்ளைகள் என்று தான் உணர்வார்களோ?

Loading...
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More