Blogroll

வயது ஏறினால் அழகும் கூடும்!

குழந்தையாக இருக்கும் போது தொடங்கி பேரிளம் பெண்ணாக மாறும் வரை பெண்கள் ஒவ்வொரு கால கட்டத்திலும் அழகுதான். எந்தப் பெண்ணையுமே அழகில்லை என்று கூற யாருக்குமே மனசு வராது...

சுகப்பிரசவத்தை அளிக்கும் குங்குமப்பூ

எந்தப் பூவிலும் இல்லாத புதுமை குங்குமப்பூவில் உண்டு. உடல் நிறத்தை சிவப்பாக மாற்றக் கூடிய அற்புதக் குணம் இதில் நிறைந்து காணப்படுகிறது. குங்குமப்பூக்களின்..

மனைவியை புரிந்து கொள்ள.!!!

மனைவியை புரிந்து கொள்ள முடியவில்லை என்று புலம்புவர்களுக்காக இது. மனைவியை மயக்க ஐடியாக்கள் இது மனைவியை மயக்க மட்டும்தான்.. கல்யாணம் ஆகாதவர்கள் வேண்டுமானால் இதை யூஸ் பண்ணி பெண்களை மயக்க டிரைப் பண்ணலாம். மயக்குங்க ஆனா நீங்க மயங்கிடாதீங்க.

நீங்காத நினைவுகள்...

தேய்ந்தாலும் வானை விட்டு நீங்காத பிறையை போல... உதிர்ந்தாலும் மலரை விட்டு நீங்காத காம்பை போல...

அம்மா என்பவள் காத்திருப்பவள்

நினைவுகள் எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் அம்மா என்பவள் மெலிந்த தேகமும் கந்தலான உடையும் அணிந்தவள் சமையல் பாத்திரங்களுக்கு முன்பு வியர்வை துடைப்பவள் நெருப்பை சீராக வளரவிடுபவள்

Wednesday, August 31, 2011

உறவு இனிக்க பேசுங்க, பேசுங்க, பேசிக்கிட்டே இருங்க!




ஒருசிலர் பேசுவதை கேட்டுகொண்டே இருக்கலாம் போல தோன்றும். அதே சமயம் ஒருசிலர் எப்போது பேசி முடிப்பார் என்று இருக்கும். மனிதர்களிடையே உறவை வளர்ப்பதிலும், பிரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது பேச்சு. குறிப்பாக ஆண் - பெண் காதல் உறவில் அன்பை பெருக்குவது மட்டுமல்ல... வெறுப்பை அடர்த்தியாக்குவதும் அதே பேச்சுதான்.

ஒருவரை 'விமர்சனம் செய்யும்போது அதை அவரது மனம் புண்படாதவாறு இனிமையுடன் கூறவேண்டும் என்பதையே வள்ளுவர் 'கடிதோச்சி மெல்ல எறிக’ என்று கூறியுள்ளார். இனிய உறவுகளுக்கான தாரக மந்திரமாகவும் இதைச் சொல்லலாம். கனி போல இருக்கும் இனிய சொற்களை விடுத்து காய்போல பேச்சுக்களை பேசுவதாலே திசைக்கொருவராக சிதைந்து கடைசியில் யாருமற்றவர்களாக நிற்க நேரிடுகிறது.

அன்பை விதைக்கலாம்

பேச்சு என்பது உறவுகளுக்குள் அன்பை விதைக்க வேண்டும். ஆனால் ஒருசில குடும்பங்களில் உறவை சிதைக்கிறது. எதற்கெடுத்தாலும் எரிந்து விழுவது, குதர்க்கமாகப் பேசுவது, குத்திக்காட்டுவது, எரிச்சல் வரவழைக்கும்படி பேசுவது என்பது பல தம்பதிகளுக்கு இயல்பான குணமாக இருக்கிறது. அதுவும் ஆணாதிக்க சிந்தனை கொண்ட பல ஆண்களுக்கு, 'பெண்கள் நம் அடிமைகள்' என்கிற நினைப்பு இருப்பதால்... பெண்களிடம் கனிவுடனோ, அன்புடனோ பேசுவதே இல்லை. இத்தகையோரிடம் பெண்களுக்கு பயம் ஏற்படுமே தவிர... உன்னதமான அன்பு இருக்கவே முடியாது!

பெண்களும் இதற்கு விதி விலக்கு இல்லை முள் குத்துவது போல் பேசும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் அன்பின் ரகசியம் அறியாதவர்கள். காதலின் மகத்துவம் தெரியாதவர்கள். இயந்திரம் போல் வாழ்க்கை நடத்தும் ஜீவன்கள் இவர்கள்.

இதயங்கள் பேசவேண்டும்

இதயங்கள் பேசிக் கொள்ளாமல் வெறும் உதடுகள் மட்டும் பேசிக் கொண்டால்... விளைவுகள் மோசமாகத்தானே இருக்கும்! பொதுவாகவே கணவன்-மனைவி இருவரிடையேயான உரையாடல்கள், ஆண்டுகள் செல்லச் செல்லக் குறைகின்றன என்றுதான் ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன.

பேச வேண்டிய எல்லாவற்றையுமே முதல் சில ஆண்டுகளிலேயே பேசி முடித்து விடுகிறார் களாம். அதற்குப் பின் பேசுவதற்கு பொதுவாக ஏதுமில்லாமல் போகிறது. குடும்பப் பொறுப்புகள், குழந்தைகள் கடமை, சொத்து வாங்குவது, உறவினர்களுடன் பழகுவது, விழாக்களில் கலந்து கொள்வது, முதலீடுகளில் ஈடுபடுவது என்று நடுத்தரப் பருவத்தில் வாழ்க்கை இயந்திரமயமாகிப் போகிறது. அதற்குப் பின் வெறும் பாதுகாப்புக்காகவே இணைந்து வாழ்வதாகச் சொல்கிறது அந்த ஆராய்ச்சி முடிவு.

சுவாரஸ்யமான உரையாடல்கள்தான் தம்பதியர்களுக்கிடையே நாளுக்கு நாள் உறவை செம்மைப்படுத்துகின்றன. வீடு, குடும்பம் இவற்றைத் தவிர பிற உலக நடப்புகளிலும் ஈடுபாடு கொண்டிருந்தால் பேசுவதற்கு எத்தனையோ விஷயங்கள் கிடைக்கும். இசை, இலக்கியம், சினிமா, அரசியல், விளையாட்டு, சமூகம் என்று ஆயிரம் விஷயங்கள் பேசுவதற்கு இருக்கின்றன. ஆனால், அதைப் பற்றி எல்லாம் பேச பெரும்பாலானோருக்கு விருப்பம் இல்லை. இன்கிரிமென்ட் பற்றியும், நகை வாங்குவது பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டு, பேசிக் கொண்டிருப்பவர்களுக்கு பேச்சுவார்த்தை என்பதே நாளடைவில் போரடித்துப் போகிறது.

அன்பை புரியவைக்கும் பேச்சு

அளவுக்கு மீறின அன்பு தான் எப்போதும் சந்தேகங்களை உருவாக்கும். எனவே சந்தேக விதை உருவாகாமல் தடுப்பது இருவரின் கடமை. அலுவலகத்தில் இருக்கும் நட்பு வட்டாரத்தை ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொள்வது சிறந்தது. இல்லையென்றால் சாதாரண தொலைபேசி உரையாடல் கூட இருவரின் பிரிவுக்கு காரணமாக அமைந்துவிடும்.

புரிதலின்மையால் தோன்றும் சிக்கல்

புரிதல் என்பது தம்பதியருக்கிடையே இருக்கக் கூடிய மிக முக்கியமான ஒன்று. ஒருவருக்கொருவர் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளும்போது பேச்சின் விபரங்களை சரியாக புரிந்து கொண்டாலே பாதி பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிடலாம். இன்றைய சூழலில் எதையுமே அரைகுறையாக புரிந்து கொண்டு விடுவதே பிரிவினைக்கு காரணமாகிறது.

வாழ்க்கை இப்படித்தான் செல்ல வேண்டுமா? கணவன் - மனைவி உறவு என்பது வெறும் கடமை போல் ஏன் குறுகி ஒரு கட்டத்தில் அது முறிந்து விடுகிறது.

எனவே மனம் விட்டு பேசுவோம். வீண் மன உளைச்சல்களையும், கண்ணீரையும் தவிர்ப்போம்.

Saturday, August 27, 2011

நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்.


இறையே இறையே அருள் இறையே!
உன் புகழ் பாடுது திருமறையே!
மறையே மறையே அருள் மறையே!
மாநபி கொண்டுவந்த திருமறையே!

ஆகுக என்னும் ஒரு சொல்லால்
அகிலத்தை படைத்த அருள் நீயே!
ஆதியும் அந்தமும் உண்டாக்கி
அதிலுன் கருணையைத் தேக்கி

பார்த்துக்கொள்ளும் பண்பாளனும் நீயே!
பாதங்கஞ் செய்வோர்களின் பாவங்களை
மன்னிதருள்பவனும் நீயே!-அதேசமயம்
பாவத்தின் நிலைபொறுத்து
தண்டிப்பவனும் நீயே!

மாநபிகள் பலரையுமே
மண்ணில் படைத்தவனும் நீயே!
மாபெரும் அருள்களும்
மனமுவந்து கொடுத்தவனும் நீயே!

மகத்தான பலசெயல்கள்
செய்ய வைத்தவனும் நீயே!
மன்னிப்பு தருவதையே
மாண்பாக்கித் தந்தவனும் நீயே!

ஒருதுளி நீரில் மனிதயினம்
உருவாக்கிய உன்னத அருள் நீயே!
உயிர்களின் தேவைகள் தான்அறிந்து -இந்த
உலகையே தந்த உயர் நீயே!

கடல்தாண்டி மலைதாண்டி
கானத்தின் நிலம்தாண்டி
காக்கும் காவலனும் நீயே
கவலையைத் தீர்க்கும்
மருந்தும் தருவாயே!

வானத்தில் சுற்றி வரும்
சூரியனும் சந்திரனும்-அதில்
வலம்வரும் நட்சத்திரமும்கூட – உன்னை
வணங்காமல் இருந்ததேயில்லை -நீயிடும்
கட்டளையை கேட்காமல் விட்டதுமில்லை

பிறப்பையும் இறப்பையும் வைத்து-இப்
பூமியை புனிதமாக்கியவனும் நீயே!
படைப்பினங்களை சிறப்பாக்க -இந்த
பூலோகத்தை
பூரிப்படைய வைத்தவனும் நீயே!

அகிலத்தை ஆட்சி செய்பவனும் நீயே
அண்ட சராசரத்தின் அதிபதியும் நீயே!
உலகிலுள்ள அனைத்தின் மீதும்
அதீதசக்தி பெற்றவனும் நீயே!

உனதருள் வேண்டியே!
மரணம்வரும் வேளைவரை
மண்டியிட்டுக் கிடக்கவேண்டுமே
மனிதயினம்

நித்தம் நித்தம் தொழுதபடி
நோன்புகள் முப்பதும் பிடித்தபடி
ஜக்காத் நிறைய கொடுத்தபடி-முடிந்தால்
ஹஜ்ஜின் கடமையும் முடித்தபடி

உன்னை நினைக்க வேண்டுமே
இவ்வுலகம்
உன்நினைவிலேயே கரையவேண்டுமே
நொடியும் பொழுதும்
இம்மானிடம் முழுவதுவும்

ஈகை பெருநாளை இனிதாக
இன்பமாய் மகிழ்வோடு கொண்டாட
எல்லாம் வல்ல அருள்கொடையே
எங்களுக்கு நீ அருள்புரிவாய்

பாவங்கள் அனைத்தையும்
மன்னித்து
புனித சொர்க்கத்தை
எங்களுக்குத் தந்திடுவாய்..

அனைவருக்கும் எனது இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்களுடன்.. ப்ரியமுடன்

Wednesday, August 24, 2011

அன்னா ஹசாரேவும் அரசியல் நாடகங்களும் .....


ஊழலுக்கு எதிராக ஒரு மாபெரும் போராட்டம் ஒன்று நடந்து கொண்டிருக்கிறது வடக்கில் ... ஊழல் என்ற அரக்கனை ஒழிக்க வேண்டும் என்ற ஒற்றை புள்ளியில் இந்திய மக்கள் அனைவரும் கண்டிப்பாக அணிதிரள்வார்கள் , இது இன்றையமோசமான நிலையில் நம் நாட்டுக்கு கண்டிப்பாக தேவையான ஒன்றுதான், ஆனால் அந்த புள்ளி கரும்புள்ளியாக அமைந்து விடக்கூடாதல்லவா? அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் பற்றி எனக்கு இருக்கும் சில சந்தேகங்கள் என்னை அவரை முழுமையாக ஆதரிக்கவிடாமல் தடுக்கின்றன....அவரின் சில நடவடிக்கைகள் ஹசாரே ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்துகிறாரா இல்லை காங்கிரசுக்கு எதிராக போராட்டம் நடத்துகிறாரா என்று சந்தேகப்படவைக்கின்றன? அவர் காங்கிரஸை மட்டும் குறிவைத்து தாக்குவது ஏன்? நம் நாட்டில் காங்கிரஸ் மட்டும்தான் ஊழல் செய்து கொண்டு இருக்கிறதா? ஏன் கர்நாடகாவில் மாற்றி மாற்றி ஊழல் புகாரில் சிக்கி சுப்ரீம் கோர்ட்டால் கண்டிக்கபட்ட ஒருவரை முதல்வர் பதவியில் இருந்து இறக்க ரொம்பவும் யோசித்த ஒரு கட்சியை பற்றி அவர் வாயே திறப்பதில்லை, மாறாக அந்த கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதை போல அவர் நடந்து கொள்வது ஏன்? நரேந்திர மோடியை ஊழல் இல்லாத அரசியல்வாதிஎன்று தன் வாயால் உளறிவிட்டு மீடியாக்கள் கண்டனம் தெரிவித்தவுடன் நான் சொல்லவந்ததே வேற என்று கைப்புள்ள வடிவேலு போல அசடு வழிந்தது ஏன்?


இவர் ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும் என்று உண்மையிலேயேநினைத்தால் காங்கிரசுக்கு ஊழலில் கொஞ்சமும் சளைக்காத BJP கட்சியின் ஆதரவை வேண்டாம் என்று தைரியமாக உதறிவிட்டு மக்களின் ஆதரவை மட்டுமே நம்பி இறங்கி இருக்கலாமே... BJP , ஆர்‌எஸ்‌எஸ் என்று யோக்கிய சிகாமணிகளின் ஆதரவை அவர் ஏன் தேடி போகவேண்டும்... ஊழல் எதிர்ப்பு உணர்வுக்கு அரசியல் சாயம் பூசி வேறு ஒரு கட்சியை ஆட்சியில் உக்காரவைக்க வேண்டும் என்பதுதான் அண்ணாவின் உள்நோக்கமாக இருக்குமோ என்ற சந்தேகம் இதனால் ஏற்படுகிறதே...


அதேபோல அவர் காங்கிரஸ் கட்சியையும் அதன் அமைச்சர்களையும் மட்டுமேஊழல்வாதிகள் என்று எதிர்த்துக்கொண்டு இருக்கிறார் , ஆனால் அவர்களுக்கு பின்னால் இருந்து கொண்டு அவர்களை இயக்கும் இந்திய பணமுதலைகளை அவர் கண்டுகொள்வதே இல்லை... ஊழலின் ஆணிவேறே அவர்கள்தானே , அவர்களை ஏன் இவர் தன்னுடைய போராட்டங்களில் விமர்சிப்பதே இல்லை... அடுத்து பி‌ஜெ‌பி ஆட்சிக்கு வந்தால் இவர்களின் தயவு தேவைப்படும் என்பதால் அவர்களை பற்றி வாயே திறப்பதில்லையோ என்ற சந்தேகமும் இதனால் வலுக்கிறது...

சரி ஊழலுக்கு எதிராக போராடும் இவர் என்ன யோக்கியனா என்று காங்கிரஸ் இவர் மீது ஒரு ஊழல் குற்றசாட்டை வைத்தது , "இந்து ஸ்வராஜ் ட்ரஸ்ட்"க்கு மகாராஷ்ட்ரா அரசு கொடுத்த பணத்தில் 10 லட்சம் ரூபாய் பணத்தை இவர்கள் கையாடல் செய்து இருக்கிறார்கள் என்று ஒரு அறிக்கை பல வருடங்களுக்கு முன்னாள் வெளிவந்தது .... அவர் இந்த புகாரை சட்டப்படி சந்தித்து தான் ஊழல்வாதி இல்லை என்று நிரூபித்து இருந்தால் இவர்மேல் நம்பிக்கை வந்திருக்கும் , ஆனால்இன்று காங்கிரஸ் அந்த அறிக்கையை தூசி தட்டி வெளியிட்டதும் என் மேல் சேறு வாரி இறைக்கிறார்கள் , அவர்கள் இந்த அறிக்கையை திரும்ப பெரும் வரைக்கும் உண்ணாவிரதம் இருக்க போகிறேன் என்று ஸ்டண்ட் அடித்தார் இந்த இரண்டாவது இந்திய சுதந்திர போராட்டத்தின் தலைவர் இரண்டாம் மோகன்லால் காந்தி...

இவர் ஊழலுக்கு எதிராக போராடும் முன்னால் தன் மீது இருக்கும் இந்த ஊழல் கரையை துடைத்து விட்டல்லவா இறங்கி இருக்க வேண்டும்...

அதே போல லோக்பால் சட்டத்தின் வரம்புக்குள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கொண்டு வரப்படுவதை இவர் ஏன் கடுமையாக எதிர்க்கிறார்? ஏன் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஊழலலே செய்வதில்லையா? சில சொற்ப எண்ணிக்கையில் இருக்கும் உண்மையிலேயே சேவை மனப்பான்மையோடு தொடக்கபட்ட தொண்டு நிறுவனங்களை தவிர மற்ற அனைத்து நிறுவனங்களும் கருப்பு பணத்தை காப்பாற்ற பணமுதலைகளாலும் , அரசியல்வியாதிகளாலும் மறைமுகமாக நடத்தபடுபவைதானே, அங்கு மட்டும் ஊழல் இருக்காது என்று எப்படி கண்டிப்பாக சொல்ல முடியும்....

இவற்றை எல்லாம் பார்க்கும் பொழுது ஊழல் ஒழிந்து உலக நாடுகளின் மத்தியில்இந்தியா ஒளிர்ந்துவிடாதா என்ற நம் மக்களின் ஏக்கத்தை பயன்படுத்தி ஹசாரேவும்அவர் பின்னால் இருப்பவர்களும் நடத்தும் அரசியல் நாடகம் போல ஒரு சந்தேகம் வருவதை தவிர்க்க முடியவில்லை... ஆனால் ஹசாரேவின் இந்த போராட்டம் மூலம்விழைந்திருக்கும் ஒரே நன்மை , ஊழல் ஒழிய வேண்டும் , நாடு முன்னேற வேண்டும் என்ற வேட்கை நம் நாடு முழுவதும் மக்கள் மனதில் காட்டு தீயாய் பரவி கிடக்கிறது என்ற உண்மையை நம் அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள ஒரு சந்தர்ப்பம் உருவாகி இருக்கிறது... அதற்காக மட்டும் ஹசாரேவுக்கு ஒரு இந்தியனாக நன்றிசொல்லியே ஆகவேண்டும்...

டிஸ்கி 1 : அண்ணா என்ற பெயருக்கும் காங்கிரசுக்கும் ஜென்ம பகை போல , அன்று ஒரு அண்ணா தென்னிந்தியாவில் காங்கிரசுக்கு ஆப்பு வைத்தார் , இன்று வடக்கில் ஒரு அன்னா ஆப்பு வைக்க துடித்து கொண்டிருக்கிறார்...

டிஸ்கி 2 : இந்த பதிவில் நான் என்னுடைய சந்தேகங்களை மட்டுமே எழுதியிருக்கிறேன் , மேலும் நான் ஹசாரேவை சந்தேகபடுவதால் காங்கிரஸை ஆதரிப்பவன் என்று அர்த்தம் கிடையாது.. ஊழல் முற்றும் ஒழிய வேண்டும் என்று ஆசைப்படும் சாதாரண குடிமகன்களில் நானும் ஒருவன் ...

Tuesday, August 23, 2011

உலகமு‌ம் உடலு‌ம் ஒ‌ன்றுதா‌ன்

உல‌க‌ம் எ‌ன்பது பெ‌ரு‌ம் ப‌ங்கு ‌நீராலு‌ம், குறை‌ந்த பர‌ப்பளவு ‌நில‌த்தாலு‌ம் சூழ‌ப்ப‌ட்டதாகு‌ம். இதை‌ப் போலவே உடலு‌ம் பெரு‌ம்ப‌ங்கு ‌நீரா‌ல் ‌நிறை‌ந்து உ‌ள்ளது. உடலு‌க்கு ர‌த்தமு‌ம், கா‌ற்று‌ம் எ‌வ்வளவு‌த் தேவையானதோ அதை ‌விட அ‌திகமாக ‌நீ‌ர் அவ‌சியமா‌கிறது.

சாதாரணமாக ஒருவரு‌‌க்கு உட‌ல்‌நிலை ‌ச‌ரி‌யி‌ல்லாம‌ல் போனா‌ல் உடனடியாக ர‌த்த‌ம் ஏ‌ற்றுவ‌தி‌ல்லை, கா‌ற்றை செலு‌த்துவ‌தி‌ல்லை. ஆனா‌ல் குளு‌க்கோ‌‌ஸ் ஏ‌ற்ற‌ப்படு‌கிறது. இ‌தி‌லிரு‌ந்தே ‌நீ‌ரி‌ன் அ‌த்‌தியாவ‌சிய‌த்தை உணரலா‌ம்.

WD
வா‌ந்‌தி அ‌ல்லது பே‌தி போ‌ன்றவ‌ற்றா‌லோ அ‌ல்லது ஏதேனு‌ம் ஒரு காரண‌த்‌தினாலோ உட‌லி‌ல் இரு‌ந்து ஏராளமான ‌நீ‌ர் வெ‌ளியே‌றி ‌விடு‌கிறது. இ‌ந்த சமய‌த்‌தி‌ல் உடனடியாக நோயா‌ளி‌க்கு குளு‌க்கோ‌ஸ் ஏ‌ற்ற‌ப்படு‌ம். இத‌ற்கு‌க் காரண‌ம் உடலு‌க்கு ‌நீ‌ர்‌ச்ச‌த்து எ‌ன்பது ‌மிகவு‌ம் அவ‌சிய‌ம் எ‌ன்பதா‌ல்தா‌ன். அ‌வ்வாறு ‌குளு‌க்கோ‌ஸ் ஏ‌ற்றா‌வி‌ட்டா‌ல், உட‌ம்‌பி‌ல் ‌நீ‌ர் முழுவது‌ம் வ‌ற்‌றி, கை, கா‌ல்க‌ள் ‌வெ‌ப்ப‌த்தை இழ‌ந்து ‌விடு‌ம். உட‌ல் சூ‌ட்டை இழ‌ந்து ‌ஜி‌ல்‌லி‌ட்டு‌‌ப் போகு‌ம், நர‌ம்பு‌த் துடி‌ப்பு ‌சீர‌ற்று ர‌த்த அழு‌த்த‌ம் குறை‌ந்து மய‌க்க ‌நிலை‌க்கு ஆ‌ட்படுவா‌ர்க‌ள். வயதான‌ர்வகளாக இரு‌ந்தா‌ல் ‌இ‌ந்த ‌நிலை‌யி‌ல் ‌உ‌யி‌ர் இழ‌ப்பு‌க் கூட ‌நிக‌ழலா‌ம்.

இதே‌ப் போல ஏதேனு‌ம் ஒரு நோ‌‌யி‌ன் தா‌க்க‌த்‌தினாலோ ‌அ‌ல்லது மரு‌த்துவ ‌சி‌கி‌ச்சை‌யி‌ன் காரணமாகவோ சா‌ப்‌பிட இயலாம‌ல் போகு‌ம் நோயா‌ளிகளு‌க்கு‌க் கூட குளு‌க்கோ‌‌ஸ் ஏ‌ற்ற‌ப்படு‌கிறது. இத‌ற்கு‌க் காரண‌ம் உடலு‌க்கு‌த் தேவையான ச‌த்து‌க்களை நா‌ம் த‌ண்‌ணீ‌ர் மூலமே அ‌ளி‌த்து ‌விட முடியு‌ம் எ‌ன்பதா‌ல்தா‌ன்.

சராச‌ரியாக 65 ‌கிலோ எடையு‌ள்ள ஒரு ம‌னித‌னி‌ன் உட‌லி‌ல் 40 ‌லி‌ட்ட‌ர் த‌ண்‌ணீ‌ர் இரு‌க்கு‌ம். அ‌வ்வாறு 40 ‌லி‌ட்ட‌ர் ‌நீ‌ர் இரு‌ந்தா‌ல்தா‌ன் அவ‌ன் ஆரோ‌க்‌கியமான ம‌னித‌ன். இ‌தி‌ல் 28 ‌லி‌ட்ட‌ர் ‌நீரானது உட‌லி‌ன் ப‌ல்வேறு உறு‌ப்புக‌ளி‌ல் இரு‌க்கு‌ம் பல ஆ‌யிர‌ம் செ‌ல்லு‌க்கு‌ள் இரு‌க்‌கிறது.அ‌வ்வாறு செ‌ல்‌‌லி‌ற்கு‌ள் இரு‌க்கு‌ம் ‌நீ‌ர் இ‌ன்‌ட்ரா செ‌ல்லுல‌ர் வா‌ட்ட‌ர் எ‌ன்று அழை‌க்க‌ப்படு‌கிறது. ர‌த்த‌த்‌தி‌ல் உ‌ள்ள ‌திரவ ‌நீரான ‌பிளா‌ஸ்மா‌வி‌ல் ம‌ட்டு‌ம் 3 ‌லி‌ட்ட‌ர் அள‌வி‌ற்கு ‌நீ‌ர் இரு‌க்கு‌ம். ‌மீத‌ம் 9 ‌லி‌ட்ட‌ர் ‌நீ‌ர் இ‌ந்த இர‌ண்டி‌ற்கு‌ம் இடை‌ப்ப‌ட்ட இணை‌ப்பு பாக‌ங்க‌ளி‌ல் இரு‌க்‌கு‌ம். இ‌தி‌ல் ஏதேனு‌ம் ஒரு இட‌த்‌தி‌ல் இரு‌க்கு‌ம் ‌நீ‌ரி‌ன் அளவு குறை‌ந்தாலு‌ம் உட‌ல் பா‌தி‌க்க‌ப்படுவது ‌நி‌ச்சய‌ம்.

மேலு‌ம், உட‌லி‌ன் பல பாக‌ங்க‌ள் ‌சீராக இய‌ங்கவு‌ம் நா‌ம் அரு‌ந்து‌‌ம் ‌நீ‌ரி‌ன் அளவு மு‌க்‌கியமாக இரு‌க்‌கிறது.

சில ‌வியா‌திகளு‌க்கு மரு‌ந்தாகவு‌ம் ‌நீ‌ர் உ‌ள்ளது. ம‌ஞ்ச‌ள் காமாலை பா‌தி‌த்தவ‌‌ரி‌ன் க‌ல்‌லீரலு‌க்கு அ‌திக‌ப்படியான ‌நீ‌ர் தேவை‌ப்படு‌ம். இ‌ந்த சமய‌த்‌தி‌ல் குளு‌க்கோ‌‌ஸ் ஏ‌ற்றுவதா‌ல் ம‌ஞ்ச‌ள் காமாலை‌யி‌ன் ‌தீ‌விர‌ம் குறையு‌ம்.

இதே‌ப் போ‌ன்று ‌சிறு‌நீரக‌த் தொ‌ற்று ம‌ற்று‌ம் ‌சிறு‌நீரக‌ப் பாதை‌த் தொ‌ற்று நோ‌ய்களு‌க்கு‌ம், தொட‌ர்‌ந்து குளு‌க்கோ‌ஸ் ஏ‌ற்றுவது‌ம், அ‌திக‌ப்படியான ‌நீ‌ர் அரு‌ந்துவது‌மே ‌சிற‌ந்த மரு‌ந்தாக அமையு‌ம்.

க‌‌ர்‌ப்‌பி‌ணி‌ப் பெ‌‌ண்க‌ள் ‌தின‌மு‌ம் ‌நிறைய த‌ண்‌ணீ‌ர் அரு‌ந்த வே‌ண்டு‌ம் எ‌ன்று மரு‌த்துவ‌ர்க‌ள் ப‌ரி‌ந்துரை‌க்‌கிறா‌ர்க‌ள். ‌நீ‌ர் எ‌ன்பது அவ‌ர்களது உடலு‌க்கு ம‌ட்டும‌ல்லாம‌ல், உ‌ள்‌ளிரு‌க்கு‌ம் குழ‌ந்தை‌க்கு‌ம் ‌மிகவு‌ம் தேவையான ஒ‌ன்றாகு‌ம்.

கரு‌ப்பை‌க்கு‌ள் குழ‌ந்தையுட‌ன் இரு‌க்கு‌ம் ‌நீ‌ரி‌ன் அளவு குறையு‌ம் போது உடனடியாக அறுவை ‌சி‌கி‌ச்சை மூல‌ம் குழ‌ந்தையை ‌பிர‌ச‌வி‌க்க வே‌‌ண்டிய க‌ட்டாய‌ம் கூட நே‌ரிடலா‌ம். எனவே, குழ‌ந்தை‌யி‌ன் கரு‌ப்பை‌க்கு‌ள் இரு‌க்கு‌ம் ‌நீ‌ர் குழ‌ந்தை‌யி‌ன் ஆரோ‌க்‌கிய‌த்‌தி‌ற்கு அவ‌சியமா‌கிறது. எனவே க‌ர்‌ப்‌‌பி‌ணி‌ப் பெ‌ண்க‌ள் ‌நிறைய த‌ண்‌ணீ‌ர் அரு‌ந்த வே‌ண்டியது அவ‌சியமா‌கிறது.

நீ‌ரி‌ழிவு நோயா‌ளிகளு‌ம், வெ‌யி‌லி‌ல் அ‌திக நேர‌ம் ப‌ணியா‌ற்றுபவ‌ர்களு‌ம் சராச‌ரி ம‌‌னித‌ர்களை ‌விட அ‌திக‌ப்படியான ‌நீரை அரு‌ந்‌தினா‌ல், உட‌‌லி‌ன் ஆரோ‌‌க்‌கிய‌த்தை‌க் கா‌க்கலா‌ம்.

மேலு‌ம், கால‌ை‌யி‌ல் எழு‌ந்தது‌ம் வெறு‌ம் வ‌யி‌ற்‌றி‌ல் அரு‌ந்து‌ம் ‌நீரானது பல ‌வியா‌திகளு‌க்கு ‌சி‌கி‌ச்சையாக அமை‌கிறது. காலை‌யி‌ல் எழு‌ந்தது‌ம் கா‌பி, டி போ‌ன்றவ‌ற்றை அரு‌ந்துவதா‌ல் ‌பி‌த்த‌ம் அ‌திக‌ரி‌க்குமே‌த் த‌விர உடலு‌க்கு‌ப் பல‌ன் தராது. எனவே, காலைல‌யி‌ல் எழு‌ந்தது‌ம் ‌ப‌ற்களை சு‌த்த‌ம் செ‌ய்து‌வி‌ட்டு ‌‌நீ‌ர் அரு‌ந்து‌ம் பழ‌க்க‌த்தை‌க் கைகொ‌ண்டா‌ல் பலரு‌ம் உட‌ல் ஆரோ‌க்‌கிய‌த்தோடு வாழலா‌ம்.

த‌ற்போது மரு‌த்துவ ‌சி‌கி‌ச்சை முறை‌யிலேயே ‌த‌ண்‌ணீ‌ர் ‌சி‌கி‌ச்சை எ‌ன்ற பு‌திய முறை அ‌றிமுக‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு வரு‌கிறது. இதனை‌க் கையா‌ண்டு பலரு‌ம் குண‌ம் அடை‌ந்து வரு‌கி‌ன்றன‌ர்.

உடலில் கலோரியை கட்டுப்படுத்த மருந்து தேவையல்ல, தண்ணீர் தான் முக்கியத் தேவை. தண்ணீர் குடி‌த்தா‌ல் வா‌யி‌ல் இரு‌ந்து ஆரம்பித்து, வ‌யிறு, குடல், சிறுநீரகம் என்று எல்லா இடத்தையும் சுத்தப்படுத்தி, எலும்பு, தசைகளையும் எந்த பாதிப்பும் இல்லாமல் சீராக்கி‌க் கொ‌ண்டு கடைசியில் உட‌லி‌ல் இரு‌க்கு‌ம் தேவைய‌ற்ற ‌விஷய‌ங்களை எடு‌த்து‌க் கொ‌ண்டு வெளியேறி விடுகிறது.

இதுபோ‌ன்ற மக‌த்துவமான ப‌ணியை வேறு எதனாலு‌ம் செ‌ய்ய இயலா‌து. ‌நீ‌ர் அரு‌ந்துவத‌ன் அவ‌சிய‌த்தை ‌விட, அதனை சு‌த்தமாக கா‌ய்‌‌ச்‌சி வடிக‌ட்டி அரு‌ந்த வே‌ண்டியது ‌மிகவு‌ம் அவ‌சியமா‌கிறது.

பல நோ‌ய்‌த் தொ‌ற்றுகளு‌க்கு‌ம், சுகாதாரம‌ற்ற ‌நீரே‌க் காரணமா‌கிறது. எனவே உடலை ஆரோ‌க்‌கியமாக வை‌த்து‌க் கொ‌ள்ள முத‌லி‌ல் சு‌த்தமான ‌நீரை அ‌திக அள‌வி‌ல் அரு‌ந்து‌ம் பழ‌க்க‌த்தை‌க் கை‌க்கொ‌ள்ளு‌ங்க‌ள்.

முதுமையை அதிகரிக்கும் கம்ப்யூட்டர் பணி!


இன்றைய கணினி யுகத்தில் ஐ.டி. பணியாளர்கள் மட்டுமல்ல, ஏறக்குறைய அனைத்து துறைகளிலுமே கணினி பயன்பாடு என்பது இன்றியமையாததாகிவிட்டது.

இதில் ஐ.டி. எனப்படும் தகவல் தொழில்நுட்ப துறை போன்ற குறிப்பிட்ட சில துறைகளில் பணியாற்றுபவர்கள்,அதிக நேரம் கணினி முன்னர் அமர்ந்து வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

இவ்வாறு அதிக நேரம் கணினி முன்னர் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு, முதுமை வேகமாக எட்டிபார்ப்பதற்கான காரணம் கணினி முன் நீண்ட நேரம் அமர்ந்து வேலை பார்ப்பதே என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக பிரிட்டனை சேர்ந்த அழகியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மைக்கேல் ப்ரகர், ஏராளமான பெண்களிடம் மேற்கொண்ட ஆராய்ச்சியில் இது உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளதாம்.

கணினி முன்னர் ஒருவர் நீண்ட நேரம அமர்ந்திருந்தால் அவரது கீழ் தாடை தொங்கி போய்விடும் என்றும், இதற்கு காரணம் ஒரே நிலையில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதுதான் என்றும் அவர் தெரிவிக்கிறார். இவ்வாறு வேலை செய்யும் பெண்கள் பெரும்பாலான நேரம் சிடு சிடுவென இருப்பதற்கு,நீண்ட நேரம் கணினி முன்னர் அமர்ந்து மிக அதிகமாக கவனம் செலுத்தி வேலை செய்வதுதான் காரணம் என்பதை அவர்கள் உணரவில்லை.

இத்தகைய பெண்களுக்கு நெற்றியில் விரைவிலேயே சுருக்கம் மற்றும் கண்களை சுற்றி தோல் சுருக்கம் போன்றவை ஏற்படும்.இது குறித்து இவர்கள் மிக அதிகமாகவே கவலையும், அச்சமும் கொள்வார்கள்.ஆனால் இதற்கு உண்மையான குற்றவாளி யார் என்பதை இவர்கள் அறிந்திருக்கிறார்களா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

Saturday, August 20, 2011

காலையில் சிகரெட் பிடிப்பது மிகுந்த ஆபத்து!


பொதுவாகவே சிகரெட் பிடிப்பது,உயிருக்கு உலை வைக்கக்கூடிய ஆபத்தான பழக்கம் என்று மருத்துவர்கள் எச்சரிப்பது ஒருபுறம் இருக்க, காலையில் எழுந்தவுடன் புகை பிடிப்பது என்பது எமனை எருமை மாட்டில் வரவழைப்பதற்கு பதில் ஏரோபிளேனில் வரவழைத்துவிடும் என்று எச்சரிக்கிறார்கள் மருத்து ஆய்வாளர்கள்.

இது தொடர்பாக அமெரிக்க மருத்துவக் கல்லூரி ஒன்று நடத்திய ஆராய்ச்சியில், காலையில் எழுந்ததும் புகை பிடிப்பதினால் நுரையீரல், கழுத்து மற்றும் தலையில் புற்று நோய் வருவதற்கான ஆபத்து மிக அதிகமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.

புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களில் பலர்,காலையில் எழுந்ததுமே டாய்லட்டுக்குள் புகுந்துகொள்வார்கள். உள்ளே போய் ஒரு சிகரெட்டை பற்ற வைத்தால்தான் அவர்களுக்கு காலைக்கடனே கழியும். சிலர் இதனை பெருமையாக வேறு கூறிக்கொள்வார்கள்.

அத்தகைய பீற்றல்காரர்களுக்குத்தான் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர் மேற்கூறிய மருத்துவக்கல்லூரி ஆராய்ச்சியாளர்கள்.

இவ்வாறு காலையில் எழுந்ததும் புகைபிடிப்பவர்களது உடலில் நிகோடின் மற்றும் இதர புகையிலை நச்சுகள், மற்ற நேரங்களில் புகை பிடிப்பவர்களைக் காட்டிலும் அதிகமாக காணப்படுகின்றன. அத்துடன் புகை பிடிக்கும் மற்றவர்களை விட இவர்கள் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு மிக அதிகமாக அடிமையாக உள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

நுரையீரல் புற்றுநோய் தொடர்பாக அந்நோய் பாதித்த 4,775 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், அவர்கள் அனைவருமே காலையில் எழுந்ததும் வழக்கமாக சிகரெட் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களாகவே இருந்துள்ளது தெரியவந்துள்ளதாக கூறுகிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட மருத்துவ பேராசிரியர்களில் ஒருவரான பென்.

இதேப்போன்றுதான் தலை மற்றும் கழுத்தில் புற்றுநோய் தாக்கியவர்களுக்கும், மற்ற நேரங்களில் அதாவது காலையில் எழுந்து ஒரிரு மணி நேரம் கழித்து புகை பிடிப்பவர்களைக்காட்டிலும் அதிக நோய் தாக்கம் இருப்பது தெரியவந்துள்ளது.

மொத்தத்தில்,சிகரெட் பிடிப்பதே உடல் நலத்திற்கு கேடு என்று இருக்கும்போது, காலையில் எழுந்தவுடன் மட்டுமல்லாது நிரந்தரமாகவே புகைபிடிப்பதை கைவிட்டுவிடலாமே!


குறிப்பு: இதெல்லாம் ஏன் நீங்களும் கடைபிடிக்க கூடாதுனு கேட்கலாம்.. அட்வைஸ் பன்னுறது சுலபம்.. ஆனால் அத.........Follow..... lol
நன்றியுடன்: ப்ரியமுடன்

விதியின் ரேகை


கல்கத்தா(கொல்கத்தா) இந்தியாவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்று.தினம்,தினம் வேலை தேடி பலர் அலைமோதும் நகரம்.பல மொழி பேசும் மனிதர்கள்.பக்கத்து வீட்டில் யார் வசிக்கின்றார்கள் என்று தெரியாத நகர வாழ்க்கை.இயந்திர மயமான உலகத்தில் இயந்திர வாழ்க்கைக்கு பழகிவிட்ட மனிதர்கள்.அருண் இருபத்தியாறு வயது இளைஞன்.சொப்ட்வெயார் இன்ஜினியர்.கைநிறைய காசு.சந்தோசமான வாழ்க்கை.சாதிக்கவேண்டும் என்ற ஆசை,விடாமுயற்சி,தன்னம்பிக்கை இவைதான் அவனை பல வெற்றிக்கனிகளை சுவைத்து வாழ்க்கையின் உயரத்திற்கு கொண்டு சென்றவை.இருந்தும் அவனுள் இனம் புரியாத் ஒருசோகம் அவனை தினம்,தினம் வதைத்துக்கொண்டிருந்தது.இன்று இருக்கும் அருண் வேறு. 10வருடங்களுக்கு முன் இருந்த அருண் வேறு. ஆசியாவின் அழகிய குழந்தையும் எழில் மிகுந்த குழந்தையுமான இலங்கைதான் அருணின் தாய்நாடு.சிறுவயதில் தாய்,தந்தையை இழந்துவிட்ட அவனுக்கு அன்புகாட்ட யாரும் இல்லை.அநாதையாக அவன் ஊரில் வாழ்ந்து வந்தான்.மெல்லிய உருவம்,சீவப்படாத தலைக்கேசம்,இதுதான் அவன் உருவம்.நிறைய படிக்கவேண்டும்,வாழ்க்கையில் சாதிக்க வேண்டும்.என்ற ஆவல்.ஆனால் அதற்குவசதி இல்லை என்றபடியால் தனது ஆசைகளை கனவு உலகில் மாத்திரம் கண்டு களித்துக்கொண்டிருந்தான்.அப்பாவியான அருணின் செயற்பாடுகளை பலர் வெறுத்த போதும்,அவனுக்கு ஆதரவாக ஒர் உள்ளம் அந்த ஊரில் இருந்தது.மைதிலி,பொறுப்பில்லாத அப்பா,பிள்ளைகளை நன்றாக வளர்க்கவேண்டும் என சதா பிள்ளைகளைப் பற்றியே சிந்திக்கும் அம்மா,விளையாட்டுத்தனமான தங்கை,ஆசைக்கு ஒர் தம்பி,வெளிநாட்டில் தொழில்புரியும் அண்ணன்.இதுதான் அவளது குடும்பம்.அருணை அவளுக்கு மிகவும் பிடிக்கும்.அன்புக்காக ஏங்கிய அருணின் உள்ளத்தில் மைதிலியுடனான நட்பு ஒர் வடிகாலய் அமைந்தது.என்னதான் ஏழையாக,அநாதையாக,இருந்தாலும் அவனும் ஒர் இளைஞன் தானே.அவளது அன்பினால் கட்டுண்டு,அவளை காதலிக்கத்துவங்கினான்.ஆனால் அவனது ஏழ்மை காதலை அவளிடம் கூறத்தடையாக இருந்தது.மறைத்து வைக்கமுடியாத் ஒர் நோய் காதல்.அவனுக்கும் அவளிடம் சொல்லாமல் இருக்க முடியவில்லை.ஒர் நாள் அவளிடம் தனது காதலை கூறிவிட்டான்.அதற்கு அவள் இங்கபாருங்க அருண் உங்கள் மேல எனக்கு நல்ல மரியாதை இருக்கு.உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்.அதற்காக உங்களை காதலிக்கிறதா,என்னால் நினைச்சுப் பார்க்கமுடியவில்லை,எப்படி அருண் ,அம்மா,அப்பா இல்லாத அநாதை நீங்கள்,அதைவிட வேலை ஏதும் இல்லாது ஊரை வெட்டியாக சுற்றித்திரியும் ஒருவனை எப்படி அருண் நான்காதலிப்பது?எனது எதிர்காலம் என்னவாகும்.சிந்தித்து பாருங்க.இன்டைக்கும் சரி,எப்பவும்சரி நீங்கள் எனக்கு பிரண்ட் தான்அருண்.தப்பா ஏதும் சொல்லி இருந்தால்,மன்னிச்சுக்கொள்ளுங்க"என்றாள்.இல்லை மைதிலி தப்பு என்னோடதுதான்.நீங்கள் தான் என்னை மன்னிக்கவேணும்.அந்தச்சம்பவத்துக்கு அப்புறம் இரண்டு நாட்களாக மைதிலி அவனிடம் பேசவில்லை.அதற்கு பிறகு அவனைப் பார்த்தாள்.சகஜமாக கதைப்பாள்.முன்பு போல பழகினாள்.ஆனால் அருணால் அப்படி இருக்கமுடியவில்லை.காலங்கள் யாருக்காகவும் காத்திருப்பதில்லை.ஒர் நாள் மைதிலியின் பெயருக்கு ஒரு கடிதம் வந்திருந்தது. அன்புள்ள மைதிலிக்கு: தூக்கம் இல்லாத என் இரவுகளுக்கு சொந்தக்காரி,தூங்காத என் விழிகளின் தூக்கத்தை கொள்ளை அடித்தவளே! நான் போகின்றேன்.இந்த ஊரை விட்டே போகின்றேன்.தினம்,தினம் உன்னைப் பார்துக்கொண்டு நடை பிணமாக என்னால் வாழ முடியவில்லை.அதனால் இந்த ஊரை விட்டே போகின்றேன்."ஒருவனுக்கு ஒரே ஒரு அம்மாதான்.அதேபோல் ஒரே ஒரு காதலிதான்". எனக்கு அது என்றைக்கும் நீதான் மைதிலி. பிரியமுடன், அருண்...... கடிதத்தைவாசித்ததும் மைதிலியின் கண்கள் அவளை அறியாமலே கண்ணீர் சிந்தின."மன்னித்துவிடு அருண்.நானும் உன்னை காதலிக்கின்றேன்.ஆனால் உன்னை திருமணம் செய்துகொண்டு வாழும் ஏழ்மையான வாழ்க்கையை நினைக்கத்தான் எனக்கு கஷ்டமாக இருந்தது.அதுதான் எனது காதலை உன்னிடம் கூற முடியவில்லை.மன்னித்துக்கொள்." மனதுக்குள் அவனிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டாள்.அதன் பிறகு அருணை அந்த ஊரில் காணவில்லை. அருண் அந்த ஊரை விட்டு மட்டும் அல்ல,நண்பர் ஒருவரின் உதவியுடன் தனது தாய்த்திருநாடான இலங்கையை விட்டே சென்று விட்டான். அதற்கு பிறகு அவன் தனது நாட்டிற்கு திரும்பிச் செல்லவேயில்லை.கஷ்டப்பட்டு உழைத்தான்.தனது விடாமுயற்சியால் நிறைய படித்தான்.இன்று கல்கத்தாவின் மிகப் பெரிய சொப்ட்வெயார் கம்பனி ஒன்றின் சொந்தக்காரன்.ஆனால் அவனது மைதிலி இன்று இந்தியாவில் தான் இருக்கிறாள்.அருணைப்பார்ப்பாள்,கதைப்பாள்,அவளில் எந்த மாற்றமும் இல்லை.ஒர் நாள் அருண் அவளிடம் கேட்டான்."ஏன் மைதிலி அன்று நான் ஏழை. அதனால் நீ எனது காதலை ஏற்றுக்கொள்ளவில்லை.இன்று அப்படி இல்லை.என்னிடம் நிறைய பணம் இருக்கு.படிப்பு இருக்கு.நீ கேட்ட வசதியான வாழ்க்கை இருக்கு.இப்பவும் நீ என்னை ஏற்றுக்கொள்ள மாட்டாயா?.அருண் அவளது வார்த்தைகள் தடுமாறின.நான் படிக்கிறதுக்குத்தான் இந்தியாவுக்குவந்தேன்"அருண்" உங்களை இங்கே சந்திப்பேன்னு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கலை.எனது மனம் உங்களை இப்பவும் நேசிக்கின்றது அருண் அனால் நாம் சேரமுடியாது அருண்"."அதான் ஏன் மைதிலி?.சொல்லுறன் அருண் அன்று,உங்களை நான் நிராகரித்ததுக்கு உங்கள் ஏழ்மை காரணமாக இருந்தது.இன்று உங்கள் வசதி தடையாக இருக்கிறது.நான் உங்களை திருமணம் செய்தால் அன்று நீங்கள் ஏழையாக இருந்த போது வெறுத்தது,உங்களுடன் வாழும் ஒவ்வொருநிமிடமும் என்னை நிம்மதியாக இருக்க விடாது அருண்.அந்தவலி வலித்துக் கொண்டே இருக்கும்.நீங்கள் இல்லாத வலியை விட இது சிறியது தான்.என்றாலும் இது எனக்கு நானே கொடுக்கும் தண்டனை.உங்களது காதல் புனிதமானது அருண். அதை கொச்சப்படுத்த நான் விரும்பவில்லை.என்றைக்கும் நீங்கள் எனக்கு நல்ல நண்பன் தான் அருண்.கண்ணீருடன் கூறிவிட்டு போய்விட்டாள்". "தொலை தூரம் சென்று மறையும் உன் உருவம். தொடர்ந்து வந்தகண்கள் காணாமல் கரையும். நீ போகும் பாதை நெஞ்சுக்குள் தெரியும்.அனாலும் அன்பே உன்கூட வரவா முடியும்?. .அன்பு நினைத்த மாதிரி எல்லோருக்கும் இலகுவாக கிடைப்பதில்லை.ஏழ்மையிலும் அதிகமாக கிடைக்கும் செல்வம் அன்பு. பணம் கொடுத்தும் வாங்க முடியாதது அன்பு. இருந்த போதிலும் இது ஏழ்மையைக் கண்டும், பணத்தைக் கண்டும்,சில நேரங்களில் பயப்படுவது உண்டு. அப்போது காதல் என்கின்ற இதன் குழந்தை மரணித்து விடுகின்றது.

நன்றி: K.S.S. RAJ

Wednesday, August 17, 2011

மனைவியை வெல்லும் மந்திரங்கள்!




அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்குள் இணக்கமான சூழல் இருக்க வேண்டும் என்பதற்காகவே இன்றைக்கு பல நிறுவனங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றன. எட்டுமணிநேர வேலைக்கே இத்தனை மெனக்கெடல் இருக்கும் நிலையில் அதிகாலை எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை இணைந்தே இருக்கும் மனைவிக்கு என்னென்ன செய்யவேண்டும் என்று உளவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

அலுவலக டென்சன்

அலுவலகத்தில் டென்ஷனை சந்தித்தாலும் அதை அலுவலகத்தோடு விட்டுவிடுங்கள். வீட்டில் உங்கள் மனைவி, பிள்ளைகளை மட்டும் நினையுங்கள், அலுவலகத்தில் உள்ள கோபத்தை எக்காரணம் கொண்டும் மனைவியிடம் பிரயோகித்து விடாதீர்கள்.

அலுவலகத்தில் இருந்து வருகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். வீட்டில் மனைவியைபார்த்ததும் அவளை பாசத்தோடு கட்டித் தழுவுங்கள் (அருகில் யாரும் இல்லாத நேரத்தில்). சில முத்தங்களையும் கொடுங்கள். அவளும் தன் பங்குக்கு உங்கள் மீதுபாசத்தை கொட்டுவாள்.

சமையல் செய்யும்போது நீங்களும் மனைவிக்கு உதவி செய்யுங்கள். விடுமுறை நாளில்நான் சமைக்கிறேன் என்று சின்ன பொய்யையாவது சொல்லி முயற்சி செய்யுங்கள். நீங்கள் சொன்னதே போதும் என்று திருப்திகொள்வாள் உங்கள் மனைவி.

குழந்தையாக மாற்றுங்கள்

சாப்பிடும்போது ஒன்றாகவே சாப்பிடுங்கள். அப்போது மனைவிக்கு சாப்பாட்டைஊட்டி விடுவதில் தவறே இல்லை. அவ்வாறு செய்தால் அவள் ஒரு குழந்தை யாகவே மாறிவிடுவாள். அந்த குழந்தைத் தனத்தில் அவளது செய்கைகள் உங்களை மகிழ்ச்சியின் எல்லைக்கே கொண்டு போய்விடும். வாரத்திற்கு ஒரு நாள் அல்லது மாதத்திற்கு ஒரு நாளாவது சினிமாவுக்கு அழைத்துச்செல்லுங்கள். சிரித்துப் பேசுங்கள், மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்ளுங்கள். வெளியில் மனைவியுடன் செல்லும்போது அவளை நெருங்கியபடியே செல்லுங்கள். முடிந்தால் அவளது கரத்தை பற்றிக் கொண்டே செல்லுங்கள். இந்த பாதுகாப்பை எல்லா பெண்களுமே கணவனிடம் எதிர்பார்ப்பார்கள்.

காதலும் புரிதலும்

சிலநேரங்களில், அவளே எதிர்பார்க்காத வகையில் பரிசுப் பொருட்களை வாங்கிக்கொடுத்து அசத்துங்கள். எதிர்காலம் பற்றி முடிவு எடுக்கும் போது உங்கள் மனைவியிடமும் விஷயத்தை சொல்லி, அவளது கருத்தை கேளுங்கள். அவள் அப்போது கூறும் அறிவுரைகளையும் பின்பற்றிப் பாருங்கள். செக்ஸ் விஷயத்தில் மட்டுமல்ல, எல்லா விஷயத்திலுமே உங்கள் மனைவியிடம் அன்பை பரிமாறிக் கொள்ளுங்கள்.

மற்றவர் உங்களை புரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணுவதற்குப் பதிலாக முதலில் நீங்கள் மற்றவரை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். ஏனெனில் புரிந்து கொள்ளுதல் இல்லாததால்தான் எத்தனையோ குடும்ப உறவுகள் சிதைந்திருக்கின்றன. புரிதல் இல்லாதவர்கள் சேர்ந்து வாழவே முடியாது.

துணைவர் மற்றும் மற்றவர்களின் உரிமைகள், ஆசைகள், தேவைகளை அறிந்து நடப்பதும், அவற்றை மதித்து அவருக்கு உதவுவதுமே புரிந்து கொள்ளல் ஆகும். மனைவி கணவரை மதிப்பதுபோலவே கணவரும் மனைவியை மதித்தால் குடும்பத்தில் பிரச்சினையே இல்லை. எந்த விஷயத்திலும் ஈகோ பார்க்காதீர்கள். இதைப்போய் நான் அவளிடம் கேட்க வேண்டுமா? என்று மட்டும் எண்ணாதீர்கள். உங்களுக்காகவே வாழ வந்தவளிடம், நீங்கள் எந்த விஷயத்தையும் சொல்லலாமே! மறைக்க வேண்டிய அவசியம் இல்லையே!

சொர்க்கமாகும் இல்லம்

எக்காரணத்தைக் கொண்டும் கோபத்தை அவளிடம் வெளிப்படுத்தாதீர்கள். அப்படியே கோபப்பட்டாலும், உடனே சமாதான மாகிவிடுங்கள். அப்போது உங்கள் கோபத்தை நியாயப்படுத்திப் பேசாதீர்கள். ஏதோ தவறாக பேசிவிட்டேன். இனி கண்டிப்பாக பேச மாட்டேன் என்று சமாதானமாகவே பேசவேண்டும். பின் மனைவி தரப்பில்அமைதி ஏற்படுவதை உணரமுடியும்.

இப்படியெல்லாம் உங்கள் மனைவியை வைத்திருந்தால் உங்கள் இல்லமே ஒரு சொர்க்கலோகம் தான்.






Tuesday, August 16, 2011

Job details for this week

Dear job seekers those all about job details for this week please post your resume to given email id.

Civil Engineer and Civil foremen – Soudi Arabia
http://latestgulfjobs.blogspot.com/2011/08/civil-engineer-and-civil-foremen.html


HR ADMINISTRATOR – Arabic Speaking – UAE
http://latestgulfjobs.blogspot.com/2011/08/hr-administrator-arabic-speaking-uae.html


Planner / Project Control Engineer
http://latestgulfjobs.blogspot.com/2011/08/planner-project-control-engineer.html

Content Writer for Website - Kuwait
http://latestgulfjobs.blogspot.com/2011/08/content-writer-for-website-kuwait_13.html

bilingual Telephone Interviewers/ Researchers and Office Assistant/ Typist -Baharain
http://latestgulfjobs.blogspot.com/2011/08/bilingual-telephone-interviewers.html

QA / QC Manager (1)
http://latestgulfjobs.blogspot.com/2011/08/qa-qc-manager-1.html


Planning/Scheduler (2)
http://latestgulfjobs.blogspot.com/2011/08/planningscheduler-2.html

Senior Architect (4)
http://latestgulfjobs.blogspot.com/2011/08/senior-architect-4.html

Quantity Surveyor (3)
http://latestgulfjobs.blogspot.com/2011/08/quantity-surveyor-3.html

Senior Mechanical Engineer (5)
http://latestgulfjobs.blogspot.com/2011/08/senior-mechanical-engineer-5.html

Senior Electrical Engineer (5)
http://latestgulfjobs.blogspot.com/2011/08/sale-expert-ip-telephone-solutions.html

INTERIOR DESIGNER
http://latestgulfjobs.blogspot.com/2011/08/interior-designer.html

Sophis Techno Expert, Hong Kong/South Korea
http://latestgulfjobs.blogspot.com/2011/08/sophis-techno-expert-hong-kongsouth.html


Risk Manager, Bahrain
http://latestgulfjobs.blogspot.com/2011/08/risk-manager-bahrain.html

Test Manager – Tier1 European Investment Bank - Hong Kong
http://latestgulfjobs.blogspot.com/2011/08/test-manager-tier1-european-investment.html


Head of Market Risk - Lebanon
http://latestgulfjobs.blogspot.com/2011/08/head-of-market-risk-lebanon.html

AUTO ELECTRICIANS - 4 Nos - UAE
http://latestgulfjobs.blogspot.com/2011/08/auto-electricians-4-nos-uae.html

Accountant - Saudi Arabia
http://latestgulfjobs.blogspot.com/2011/08/accountant-saudi-arabia.html

DRIVER - Kuwait
http://latestgulfjobs.blogspot.com/2011/08/driver-kuwait.html

Content Writer for Website - Kuwait
http://latestgulfjobs.blogspot.com/2011/08/content-writer-for-website-kuwait.html


For More Jobs Visit our website: http://latestgulfjobs.blogspot.com

- Priyamudan

மனக்க.. ருசிக்க.. சுவைக்க

டீ கமகமவென மணக்க...

டீத்தூள் வைத்திருக்கும் பாட்டிலில் உபயோகித்த ஏலக்காய் தோல்களைப் போட்டு வைத்திருந்தால் டீ ஏலக்காய் மணதோடு சுவையாக இருக்கம்

தேங்காய் சட்னி ருசியாக இருக்க...

தேங்காய் சட்னி மிகவும் சுவையாக இருக்க நாம் அரைக்கும் சட்னியில் பாதி தேங்காயும், பாதி கொத்துமல்லியையும் சேர்த்து அரைத்தால் மிகவும் ருசியாக இருக்கும்.

வடகம் நன்றாகப் பொரிய...

மழை, குளிர் காலங்களில் வடகம் நமத்துப் போய் நன்றாகப் பொரியாது வெறும் வானலியை அடுப்பில் வைத்து சூடேற்றி அதில் வடகத்தைப் போட்டு சற்று புரட்டி எடுத்து விட்டு எண்ணெயில் பொரித்தால் நன்றாகப் பொரியும்.

வெங்காய தோசை சுவையாக இருக்க...

வெங்காய ஊத்தாப்பம் செய்யும்போது தோசை இருபுறமும் வெந்து இருந்தால்தான் சுவையாக இருக்கும். தோசையின் நடுப்பகுதியில் சிறு ஓட்டை செய்து எண்ணெய் ஊற்றினால் விரைவில் வெந்தும், சுவையாகவும் இருக்கும்.

சத்தான நிறமான தோசை வார்க்க...

தோசைக்கு ஊற வைக்கும்போது 1 கிலோவிற்கு, 50 கிராம் வேர்க்கடலை 50 கிராம் பட்டாணி சேர்த்து ஊற வைத்து அரைத்து மாவுடன் கலந்து தோசை வார்த்தால் நிறமான சுவை அதிகமான, சத்து நிறைந்த தோசை ரெடி.

மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை!


பெண்ணின் பெருமையையும் மதிப்பையும் உயர்த்தும் ஆடைகளில் புடவைக்கு தனி இடம் உண்டு. நவநாகரீகமாய் இருக்கும் பெண்கள் கூட புடவை கட்டும் போது சபையில் அவர்களுக்கு கிடைக்கும் மரியாதையே தனிதான்.

பெண்களின் அழகை சிறந்த முறையில் வெளிக்காட்டுவது மட்டுமின்றி, சிறப்பானதொரு தோற்றபொலிவையும் புடவை தருகிறது. இந்தியாவில் மட்டுமே சேலை உடுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதிலும் குறிப்பாகத் தென்இந்தியாவில் சேலைகளின் பயன்பாடு மிக அதிகம். பெரும்பாலும் திருமணமான பெண்களே சேலைகளை விரும்பி அணிகின்றனர். கைக்குழந்தை உள்ள பெண்களுக்கு சேலை மிகச்சிறந்த வரப்பிரசாதமாகும்.

புடவையில் தெரியும் அழகு

நாகரீக உடையை அணிவது போல புடவை கட்டுவது என்பது எளிதான காரியம் அல்ல. ஐந்தரை மீட்டர் நீளமுள்ள புடவையை கட்டும் போது சற்றே கவனம் பிசகினாலும் அவிழ்ந்து விழுந்து மானத்தை வாங்கிவிடும். எனவே புடவை கட்டும் போது சில விசயங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.

பெட்டிகோட்டும், ரவிக்கையும் புடவையுடன் இணைந்து அணியக்கூடிய ஆடைகள் ஆகும். அவை மேட்சாக இல்லாவிட்டால் என்னதான் விலை உயர்ந்த புடவை அணிந்தாலும் பாந்தமாக இருக்காது. எனவே அவற்றிலும் கவனம் தேவை.

பெண்ணுக்கு தனி வாசம்

வட இந்தியாவில் குறிப்பாக குஜராத்தில் புடவையின் முந்தானை முன்பக்கமாக வருமாறு அணிவார்கள். ஆனால் தென்னிந்தியாவில் புடவை முந்தானை பின்பக்கம் வருமாறு பார்த்து அணிகின்றனர்.

புடவை கட்டுவதில் முக்கியமானது மடிப்பு எடுத்து கொசுவம் சொருகுவதுதான். முன்பெல்லாம் கிராமத்தில் உள்ளவர்கள் கெண்டைக்கால் தெரிய புடவையை உயர்த்தி கட்டி பின் கொசுவம் வைத்து கட்டியிருப்பார்கள். இப்போது கால மாற்றத்திற்கு ஏற்ப அனைவருமே முன்கொசுவம் வைத்து தளர கட்டத் தொடங்கிவிட்டனர். புடவையின் நீளத்திற்கு ஏற்பவே கொசுவ மடிப்பு எடுத்து இடுப்பில் சொருகவேண்டும். சேப்டி பின் பயன்படுத்துவது மிகவும் பாதுகாப்பானது. மீதமுள்ள புடவையை அழகாக மடிப்பு எடுத்தோ அல்லது ஒற்றைத் தலைப்பிலோ இடது தோல் மேல் போட்டு பின் குத்தி விட வேண்டும். முதன் முதலாக புடவை கட்டும் போது அரைமணி நேரமாவது ஆகும். பின்னர் பழகப் பழக ஐந்து நிமிடத்தில் புடவை கட்டிவிடலாம்.

ஊர் பெருமையை கூறும் புடவைகள்

பல லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள பட்டுசேலைகள் முதல் சிலநூறு ரூபாய் உள்ள காட்டன் சேலைகள் வரை இந்தியாவில் தயாராகின்றன. பட்டு என்றாலே சட்டென்று அனைவருக்கும் நினைவில் வருவது வாரணாசியும், காஞ்சிபுரமும்தான். பனாரஸ் சில்க் என்று அழைக்கப்படும் வாரணாசி பட்டு உயர்தரமான பட்டு நூலால் தயாரிக்கப்படுகிறது. இவைகளை திருமணம், விழாக்கள் போன்றவற்றிற்கு அணிந்து சென்றால் சிறப்பான தோற்றத்தைத் தரும். காஞ்சிபுரம் பட்டுச்சேலைகளின் முந்தானை டிசைன் உலக அளவில் புகழ் பெற்றது. தமிழகத்தில் பழங்காலத்தில் இருந்தே தயாரிக்கப்பட்டு வரும் இந்த புடவைகள் கையால் நெய்யப்படுவதால் நல்ல தரமாக இருக்கும்.

ஒரிசாவின் `இக்கத்’ சேலைகளில் அதிக கைவேலைபாடுகள் காணப்படுகின்றன. எம்ராய்டரி செய்யப்பட்ட இத்தகைய சேலைகள் பிரபலமானவை. இதில் ஆரஞ்சு, மஞ்சள் வண்ணங்கள் அதிகமாக பயன்படுத்தபட்டிருக்கும். காஷ்மீரின் மொஷிதாபாத் சேலைகள், சைனா சில்க்கை போன்று இருக்கும். இதை `பெங்காலி சில்க்` என்றும் கூறுவர். காஷ்மீரின் பாரம்பரிய உடையான இதில் காஷ்மீர் டிசைன்கள் நிறைந்திருக்கும்.

ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் `பந்த்னி’ சேலைகள் தயாரிக்கப்படுகின்றன. பெரும்பாலும் வெள்ளை நிற சேலைகளே அதிகமாக இருக்கும். அதில் நூல் வேலைபாடு செய்யபட்டிருக்கும். பாத்திக் வகை சேலைகளில் மெழுகு பயன்படுத்தபட்டிருக்கும். இந்த சேலைகளை அணிந்தால் வடஇந்தியத் தோற்றத்தைக் கொடுக்கும். குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் புடவைகளுக்கு பெயர்பெற்ற நகரமாகும். இங்கு கிடைக்கும் புடவைகள் சிறப்பு வாய்ந்தவை.

தென்மாநில புடவைகள்

கர்நாடகாவின் பன்கடி சேலைகள் விலை குறைவானவை. தினமும் பயன்படுத்தும் விதத்தில் இவை இருக்கும். ஆந்திராவின் போச்சம்பள்ளி சேலைகள் அதிக எடை கொண்டதாய் இருக்கும். அந்த அளவுக்கு கைவேலைப்பாடுகள் மிகுந்திருக்கும். மங்கல்கிரி சேலைகளும் அங்கு தயாரிக்கப்படுகின்றன. இந்த வகை சேலைகளில் பார்டர் டிசைனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும்.

தமிழ்நாட்டில் கிடைக்கும் காஞ்சிபுரம் பட்டு போல கோயம்புத்தூர் காட்டன் சேலைகளும் பிரசித்தி பெற்றது. பினிஷிங் நன்றாக இருக்கும் சின்னாளபட்டி சுங்குடி புடவைகள் பெண்களின் தோற்றத்திற்கு தனி மதிப்பினை தரும். ஆயிரம் ஆடைகள் அணிந்தாலும் சேலை கட்டும் பெண்ணுக்கு என்று தனிவாசம் இருப்பதை புடவையை கட்டி பார்த்தால்தான் தெரியும்

Monday, August 15, 2011

வணக்கதிற்குரிய (சுதந்திர) தெய்வங்கள்!


இந்தியா என்ற ஒரு நாடு உருவாதற்கு முன்பே இந்த மண்ணை மீட்க போராடிய தமிழர்களின் விவேகம், தமிழர்களின் போர்த் தந்திரம், வீரம் போன்றவைகளை கேட்டால் பூனை கூட புலியாக மாறிவிடும். அந்த அளவு வீரம் செறிந்தது.

கி.பி. 1857 ல் நடைபெற்ற வேலூர் சிப்பாய்க் கலகம் தான் இந்திய விடுதலைப் போராட்டத்தின் தொடக்கம் என வரலாற்று அறிஞர்களும், உலக மாமேதை கார்ல் மார்க்ஸ் -ம் கூறுகின்றனர்.

சிப்பாய்க் கலகத்திற்கு ஒரு நூற்றாண்டிற்கு முன்பே அடக்குமுறைக்கு எதிரான விடுதலைப் போராட்டம் தொடங்கி விட்டது.

தென் தமிழகத்தில் வெள்ளையர்கள் அடக்கு முறைக்கு அஞ்சமாட்டோம் என தம் உயிரையே துச்சமென தியாகம் செய்த மாவீரர்கள் பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாற்றை நாம் பெருமையோடு நன்கு அறிவோம்.

ஆனால், இன்றைய நெல்லை மாவட்டத்தில், சங்கரன் கோவிலிலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் வடமேற்கில் உள்ள நெற்கட்டும் செவ்வல் கிராமமும் அதனைச் சுற்றி 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நெற்கட்டும் செவ்வயல் பாளையமும் ஒரு காலத்தில் நமது சுந்திர போராட்டத்திற்கு முன் மாதிரியாக திகழ்ந்த புண்ணிய பூமி.

அக் காலத்தில் பாளையங்கள் பேரரசுகளுக்கு வரியாக நெல் செலுத்தி வந்ததால் அது நெற்கட்டும் செவ்வயல் பாளையம் என அழைக்கப்பட்டதாக வரலாறு கூறுகின்றது.

வரிகொடுக்க மறுத்த காரணத்திற்காக ஏற்கெனவே வரி வசூலித்து வந்த முகலாய மன்னர்களும், புதிதாக வரி வசூலிக்கும் உரிமையைப் பெற்ற கிழக்கிந்தியக் கம்பெனியர்களும் கி.பி.1755 ல் முதல் போரைத் தொடுத்தனர்.

இப் போரில் பாளையத்தின் எல்லையிலேயே அவர்களை விரட்டியடித்தார் மன்னன் மாவீரன் பூலித்தேவனும், அவரது தளதியான ஒண்டிவீரனும்.

அன்றைய காலகட்டத்தில், மன்னர் மாவீரன் பூலித்தேவன் மேல் படை எடுப்பதற்காக, வெள்ளையர்கள் தென்மலை என்ற இடத்தில் முகாமிட்டிருந்தனர்.

மன்னன் மாவீரன் பூலித்தேவனின் படை வீரர்கள் சண்டையிட வரும் போது அவர்கள் மீது பீரங்கியால் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு அவற்றில் வெடி மருந்தும் நிரப்பி வைத்திருந்தனர் வெள்ளையர்கள்.

வெள்ளையர்களின் நவீன யுத்த ஆயுதமான பீரங்கிகளை எதிர்த்து அன்றைக்கு யுத்தம் செய்வது நினைத்து பார்க்க கூட முடியாத விஷயம் என்றே கூறலாம்.

இதனால், வெள்ளையர்களை அவர்களது பீரங்கியையே வைத்தே கதையை முடித்துவிட வேண்டும் என முடிவு கட்டினான் மன்னன் பூலித்தேவன்.

அந்த ஆற்றல்மிகு செயலை செய்ய சரியான வீரன் ஒண்டிவீரன் தான் என்று முடிவு செய்து, வெள்ளையர்கள் முகாமிற்கு ஒண்டி வீரனை அனுப்பி வைத்தார் மன்னன் பூலித்தேவன்.

இரவு வேளையில் மை இருட்டில் தென் மலையில் உள்ள எதிரி முகாமிற்கு தன்னந்தனியாக சென்றான் ஒண்டிவீரன். வெள்ளையர் படை வீரர்களின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு முகாம் ஓரமாய் உள்ள மலைச் சரிவில் பதுங்கிக் கிடந்தான் ஒண்டி வீரன் .

தான் பதுங்கி இருப்பதைப் படையினர் பார்த்து விட்டால், மன்னன் கட்டளையும் நிறைவேற்ற முடியாது, இந்த மண்னையும் காப்பாற்ற முடியாது என்பதற்காக, தன்மேல், இலைதளைகளை அள்ளிப் போட்டுக் கொண்டு பதுங்கி கிடந்தான் மாவீரன் ஒண்டிவீரன்.

அப்போது அங்கு வந்த படை வீரன் ஒருவன், குதிரை ஒன்றைக் கட்டுவதற்காக இரும்பாலான ஈட்டி ஒன்றைத் தரையில் குத்தினான்.

ஈட்டியை தரையில் ஓங்கி குத்தும் போது ஒண்டிவீரனின் கையை பிளந்து கொண்டு அது மண்ணில் குத்தி நின்றது. அந்த வலியையும் பொறுத்துக் கொண்டு அந்த இடத்திலேயே வலியோடு துடிதுடித்து கிடந்தார் ஒண்டிவீரன்.

ஆனால், ஒண்டிவீரனின் சபதம் வெற்றிப்படிகளை நோக்கி சென்று கொண்டு இருந்தது என்பது அந்த வீரர்களுக்குத் தெரியவில்லை.

எதிரியின் வீரர்கள் கண்ணயர்ந்த நேரத்தில் ஒண்டிவீரன், தனது கையை ஈட்டியில் இருந்து பிடுங்க முயன்றார். ஆனால் முடியவில்லை.

ஒரு வேளை குதிரை கணைத்து விட்டால் தனக்கும் ஆபத்து, தனது நாட்டிற்கும் ஆபத்து என்பதை உணர்ந்து இடுப்பில் செருகியிருந்த வாளை தனது மற்றொரு கையில் எடுத்து தானே வெட்டிக் கொண்டு எழுந்தான் ஒண்டிவீரன்.

புயலுக்கு சவாலாக குதிரையைக் கிளப்பிக் கொண்டு வெங்கல நகராவை ஒலித்து விட்டுப் புறப்பட்டார் மாவீரன் ஒண்டிவீரன்.

எதிரிகள் வந்துவிட்டார்கள் என்று நினைத்துக் கொண்டு பீரங்கியை இயக்கினார்கள் வெள்ளை வீரர்கள். அப்போது பீரங்கிக் குண்டுகள் தங்கள் முகாம் மீதே வெடித்து சிதறியதை கண்டு பதைபதைத்து, அதிர்ந்து, அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்றுவிட்டது ஆங்கிலேய படை. இதில் வெள்ளையர் முகாம் மட்டும் அல்ல ஆயிரக்கணக்கான வீரர்களும் செத்து மடிந்தனர்.

இந்த மண் தமிழனுக்கு தான் சொந்தம் என எதிரிகளை விரட்டி விரட்டி அடித்த பூலித்தேவன் கி.பி. 1767 ல் மறைந்தார். அதே போல 1771 வரையில் எதிரிகளுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார் தளபதி ஒண்டிவீரன். எதிரிகளின் முகாமை அழித்த தென்மலைப் போரோடு ஒண்டிவீரனின் சகாப்தம் முடிந்து போனது.

ஆனால், ஒரு குறிப்பிட்ட காலம் வரை பூலித்தேவனின் குடும்பத்தாரைப் பாதுகாத்து வந்தார் தளபதி ஒண்டிவீரன். இரு சமூகங்களின் காவல் தெய்வங்களாக இன்று மாறி நிற்கிறார்கள் தாயகத்திற்காகப் போராடிய பூலித்தேவனும், ஒண்டி வீரனும்.

நன்றி: கே.என்.வடிவேல்

Saturday, August 13, 2011

வலி சுமந்த தமிழ் இனத்துக்கு இந்தியா வழி அமைக்குமா?


புதிய பரிணாமத்துடன் பயணிக்கின்ற தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் பங்காளியாகி இருக்கின்ற ஒவ்வொரு தமிழனும் இன்று ஆழமாக புரிந்துகொள்ள வேண்டிய கட்டாய பாடமாகவும் தேவையாகவும் ஈழத் தமிழருக்கும் இந்தியாவுக்குமான உறவு என்ற கரு வியாபித்திருக்கின்றது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆதார சக்தியாக தொடங்கி கடந்த மூன்று தசாப்தங்களில் எத்தனையோ கசப்புமிக்க பாடங்களை இரு தரப்புக்களும் சந்தித்துள்ள இன்றைய நிலையில் -

பாரத மாதாவின் அரவணைப்பில் ‘ஈழம்’ மலர வேண்டும் என அன்று ஊற்றெடுத்த அதே நம்பிக்கையுடனும் – எதிர்பார்ப்புடனும் – ஈழத் தமிழ் இனம் இன்றும் இந்தியாவை நோக்கி கை நீட்டி நிற்கின்றது.

இந்தியாதான் ஈழத் தமிழிருக்கு எல்லாமே என்பதில் எவருக்கும் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடம் இருக்க முடியாது. தமிழர்களின் போராட்டம் தொடங்கிய நாள் தொடக்கம் இன்றுவரை நடந்து முடிந்த சாதக, பாதக விவகாரங்கள் அனைத்துக்கும் இந்தியாதான் முழுமுதற் காரணியாக இருந்து வந்துள்ளது.

அடக்குமுறைக்கு எதிரான கடைசி காண்டீபமாக ஆயுதப் போராட்டத்தை தொடங்கிய தமிழீழத் தேசியத் தலைவரின் முன்னோடிகளாக இருந்தவர்களான இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் சுபாஸ் சந்திரபோஸ், பகத் சிங்காக இருக்கட்டும் -

ஈழத்தில் பெண்களின் விடுதலைக்காக – அவர்களின் வீரத்தை வெளிக்கொணர்வதற்காக – விடுதலைப் புலிகளின் மகளிர் படையணி ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற தேசியத் தலைவரின் சிந்தனைக்கு வித்திட்ட – சுபாஸ் சந்திரபோஸ் தொடக்கிய – ஜான்சி ராணி மகளிர் சுதந்திர படையணியாக இருக்கட்டும் -

ஈழத் தமிழ்மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அறவழி ரீதியில் உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொண்டு உயிர்நீத்த தியாகி திலீபன், அன்னை பூபதி ஆகியோருக்கு முன்னோடியாக இருந்த இந்தியாவின் சுதந்திரத் தந்தை மகாத்மா காந்தியின் போராட்டமாக இருக்கட்டும் -

தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு ஆயுதங்கள் மற்றும் பயிற்சி என அனைத்து தேவைகளையும் வழங்கியதாக இருக்கட்டும் -

அனைத்துமே ஈழத் தமிழருக்கு இந்தியாவாகவே இருந்து வந்திருக்கின்றது.

இதேபோல பிந்திய சம்பவங்களை பார்க்கப்போனாலும் ராஜீவ் படுகொலைக்குப் பின்னர் ஈழத் தமிழ் இனத்துக்கு சகல வழிகளிலும் வலிகளைக்கொடுத்ததும் இந்தியாதான். இன்று ஈழத் தமிழ் இனம் இவ்வாறான ஒரு நிலைக்கு வந்திருக்கின்றது என்றால் அதற்கு காரணமும் இந்தியாதான்.

சுருக்கமாகச் சொன்னால் ஈழத் தமிழன் ஒவ்வொருவனினதும் பிறப்பிலும் இறப்பிலும் பாரதத்தின் பார்வை ஏதோ ஒருவிதத்தில் விழுந்திருக்கின்றது. அந்தப் பார்வைகள் சில தடவை தழுவல்களாக இருக்கின்றன. பல தடவை தழும்புகளாகி இருக்கின்றன.

இருப்பினும் – இவ்வளவு நடந்த பின்னரும்கூட – ஈழத் தமிழ் இனம் இந்தியாவையே தமது ஒரே நட்பு சக்தியாக – நேச சக்தியாக – ஆதார சக்தியாக – ஆதரவு தரும் சக்தியாக – கை நீட்டி நிற்கின்றது. இதுதான் காலத்தின் தேவை என்பதையும் தமிழ் இனம் உணர்ந்து நிற்கின்றது.

ஈழத் தமிழர்களுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு எவ்வளவு பலம் வாய்ந்தது என்பது எழுத்தில் வடிக்க முடியாதது. “ஈழத் தமிழர்களுக்கு ஒரு விடிவை ஏற்படுத்திக்கொடுங்கள்” – என்று தமது அரசை கேட்டுக்கேட்டு, எந்தக் கோரிக்கைகளையும் செவிசாய்க்காத இந்தியாவின் மனசாட்சியை உலுப்புவதற்கு ஈற்றில் தமது உடலையே எரித்து உயிரை மாய்த்த தமிழகத்தின் உத்தமர்களது தியாகத்துக்கு மேலாக ஈழத் தமிழர்களுக்கும் இந்தியாவுக்கும் இடையில் உள்ள பிணைப்பை விவரிக்க வேறு விளக்கம் தேவையில்லை.

இந்தப் பிணைப்பு – இந்த இறுக்கம் – இந்த உறவு ஆகியவற்றின் அடிப்படையில் ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் இனிமேல் எவ்வாறு அமையப் போகின்றது?

அதற்கு ஏதுவான களம் எந்த அரசியல் வியூகத்தின் அடிப்படையில் வகுக்கப்பட வேண்டும்?

ஆகியவை காலத்தின் தேவையாக கருதப்படுகின்ற கட்டாய கேள்விகள்.

காலத்தின் கட்டாய தேவைகள்

இதனை இன்றைய புவிசார் ஒழுங்கு நிலைகளின் ஊடாகவும் அதன் வழி ஒத்துப்போகும் அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் ஊடாகவும் விளங்கிக்கொள்ளலாம்.

தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தை அடியோடு அழிப்பதற்காக கங்கணம் கட்டி நின்ற காலப்பகுதியில் சிங்கள தேசம், மேற்குலகத்தை முற்று முழுதாகவே ஓரங்கட்டிவிட்டது. அந்த அடிப்படையில், மேற்குலகின் முகத்தில் ஓங்கி அறைந்தது போல பல்வேறு காரியங்களை சீனாவின் கைப்பொம்மையாக நின்று செய்து முடித்திருக்கின்றது. இன்றும் சிங்கள தேசம் அதே திமிருடனும் இறுமாப்புடனும்தான் செயற்பட்டு வருகின்றது.

இந்நிலையில், தமக்கு இடையில் எவ்வளவோ முறுகல்கள் இருந்தாலும் சிங்கள தேசத்தின் சீன ஆதரவுப்போக்கை அறுத்துவிடவேண்டும் என்பதில் அக்கறை கொண்ட வல்லரசுகள் இரண்டு. அவற்றில் ஒன்று இந்தியா. மற்றையது அமெரிக்கா.

ஆகவே, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்து சமுத்திரத்தில் தாம் கோலோச்சுவதற்காக சிங்கள தேசத்தை சீனாவிடம் இருந்து பிரித்தெடுப்பதற்கு இந்தியாவுக்கு அமெரிக்காவும் அமெரிக்காவுக்கு இந்தியாவும் தேவைப்படுகின்றது.

இந்த இருதரப்பு தேவையை கடந்த கால அரசியல் நகர்வுகளில் நாம் தெளிவாக கண்டிருக்கின்றோம்.

2002 ஆம் ஆண்டில் சிறிலங்காவுடன் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துடன் விடுதலைப் புலிகள் மேற்குலகம் சார்ந்து போய்விட்டனர் என்று இடி விழுந்தாற்போல் இருந்த இந்தியா -

விடுதலைப் புலிகள் சகலதுக்கும் தம்மை நோக்கியே இருக்கவேண்டும் என்பதற்காக திடீரென எடுத்துக்கொண்ட அரசியல் நிலைப்பாடுதான் அமெரிக்க ஆதரவுப்போக்கு.

இந்தியா தனது ஏக சொத்தாக எண்ணிக்கொண்டிருந்த ஈழத் தமிழர் விவகாரத்தை மையமாக வைத்து, அமெரிக்கா தனது அக்குளுக்குள் புகுந்துவிட்டதை சற்றும் எதிர்பாராத இந்தியா, வேறு வழி இல்லாமல் மேற்கொண்ட திடீர் இராஜதந்திர நகர்வு இந்த அமெரிக்க ஆதரவு போக்கு என்று குறிப்பிடலாம்.

அமெரிக்காவுடன் அணு ஆயுத ஒப்பந்த கைச்சாத்து உட்பட பல விடயங்களில் அமெரிக்காவுடன் நெகிழ்வுப் போக்கை காண்பித்த இந்தியா, “நாம் இருவரும் சேர்ந்து இந்து சமுத்திரத்தை ஆளலாம் வாருங்கள். ஆனால், சீனாவை இங்கு விட்டுவிடக்கூடாது” – என்ற கொள்கையை வகுத்து -

நேர இருந்த ஆபத்தை win – win சமரச கோட்பாட்டின் ஊடாக சாமர்த்தியமாக சமாளித்துக்கொண்டது.

இந்த விடயத்தில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மிகச் சாதுரியமாக காய்களை நகர்த்தினார் என்பதை ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.

இந்து சமுத்திர ஆளுமை கனவு, அங்கு கடல் பாதைகளுக்கான தேவை மற்றும் இந்தியா எனப்படுகின்ற பல கோடி டொலர்கள் மதிப்புள்ள இராஜ சந்தை ஆகியவற்றுக்கு கணக்கு போட்டுக்கொண்டிருந்த அமெரிக்காவுக்கு வலிய வந்த இந்தியாவின் இந்த அரவணைப்பு சாதகமாகவே இருந்தது.

இரு வல்லரசுகளும் ஒருவித எச்சரிக்கையுடன் கூடிய தோழமை உறவை வளர்த்துக்கொள்ளத் தொடங்கியுள்ளன.

ஆனால், இந்தியா என்னதான் அமெரிக்காவுடன் தோளில் கை போட்டுக்கொண்டாலும் அமெரிக்காவின் பாகிஸ்தான் சார்பு நிலைப்பாடு உட்பட பல விடயங்கள் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் ஒரு சந்தர்ப்பவாத உறவினையே பேணிவைத்திருப்பது ஏதோ உண்மைதான்.

இந்தியா – அமெரிக்கா – ஈழத் தமிழர்

தற்போது விரிந்துள்ள இந்தக் களத்தில், இந்தியா சரி- அமெரிக்கா சரி இரண்டுமே ஈழத் தமிழர்கள் விடயத்தில் என்ன விதமான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றன என்பதை சற்று ஆழமாக நோக்கினால் -

அதுவே ஈழத் தமிழர்களின் எதிர்கால பயணத்துக்கான தெளிவான விடுதலைப் பாதையாக அமையும். அதனை ஆராய்ந்தறிவதே எமது நோக்கமும்கூட.

இந்த இரண்டு வல்லரசுகளும் ஈழத் தமிழரின் விடிவுக்கு அனுசரணை வழங்கிய அல்லது ஆசீர்வாதமளித்த அல்லது நேரடியாக சம்மந்தப்பட்ட சம்பவங்கள் யாவை?

1987 ஆம் ஆண்டில் ஈழத் தமிழர்களின் பிரதிநிதியாக அன்று சிறிலங்காவுடன் இந்தியா செய்துகொண்டது இந்திய – சிறிலங்கா உடன்படிக்கை.

2002 ஆம் ஆண்டில் அமெரிக்க மற்றும் மேற்குலகத்தின் ஆசீர்வாதத்துடன் விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் மற்றும் அதனைத்தொடர்ந்து இணைத்தலைமை நாடுகளிடம் முன்வைக்கப்பட்ட தீர்வு வரைவுகள்.

இந்திய – சிறிலங்கா ஒப்பந்தத்தின் முக்கிய சாராம்சம் எனப்படுவது 13 ஆவது அரசமைப்பு சட்ட சீர்திருத்தம். அதாவது தமிழர்களின் பூர்வீக நிலமாகிய வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கான சபைகளுக்கு காணி, காவல்துறை உட்பட சகல அதிகாரங்களும் வழங்குவது.

2002 ஆம் ஆண்டில் செய்துகொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையை சட்ட ரீதியாக பார்த்தால் அது தமிழீழத்தை எழுதி அனைத்துலக சமூகத்தின் அனுசரணையுடன் தமிழர்கள் பெற்றுக்கொண்டார்கள் என்றே குறிப்பிடலாம்.

2002 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் விடுதலைப் புலிகளின் அரசியல் போராளிகள், தமிழர் தாயத்தின் எந்தப்பகுதிக்கும் சென்று – அந்த நிலங்கள் சிறிலங்கா படையினரின் கட்டுப்பாட்டில் இருந்தாலும்கூட – அரசியல் பணிகளில் ஈடுபடலாம் என்பதில் இருந்து -

தமிழீழத்தின் நிலம் வரையறுக்கப்பட்டு அங்கு தமிழர்களின் ஆளுமை அங்கீகரிக்கப்பட்டு, அது அனைத்துலகத்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டாயிற்று.

ஒப்பந்தத்தின் உட்பொருளை பின்னர் நடைமுறையில் தெரிந்துகொண்ட சிங்கள தேசம், அதனை நடைமுறைப்படுத்த வெருண்டுகொண்ட காரணம் இதுதான். ஆனால், இணைத்தலைமை நாடுகள் ஒப்பந்தத்தை தெளிவாக தெரிந்து – அதன் தாற்பரியத்தை விளங்கியே – அதற்கு ஆதரவு வழங்கின.

இவை முன்னர் நடந்த சம்பவங்கள்.

இன்றைய நிலையில், இந்த இரண்டு வல்லரசுகளும் தமிழர்களுக்கான தீர்வு என்ற விடயத்தில் என்ன நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றன என்பதை நோக்கினால் -

தமது அரசினால் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் 13 ஆவது அரசமைப்பு சீர்திருத்தச் சட்டத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்படவேண்டும் என்று இந்தியா விடாப்பிடியாக நிற்கிறது.

தனது அனுசரணையுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் சீனச் சார்பு சிறிலங்கா அரசினால் தூக்கியெறிப்பட்டு தாமும் அவமானப்படுத்தப்பட்ட நிலையில் உள்ள மேற்குலகம் -

ஈழத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு ஒன்று வழங்கப்படவேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையுடன் இந்தியாவுடன் சாதுவான பேச்சுக்களை மேற்கொண்டவண்ணம் உள்ளது.

13 ஆவது அரசமைப்பு சட்ட தீர்திருத்தம்

இந்த 13 ஆவது அரசமைப்பு சீர்திருத்தம் அடங்கிய இந்திய – சிறிலங்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோதும், அதனை அன்று சிங்கள தேசம் நடைமுறைப்படுத்தவில்லை. (அந்த காலப்பகுதியில் தமிழர்களின் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்குமாறு ஆறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் அண்ணா உண்ணாநிலை இருந்து, கடைசிவரை அவை நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் அவர் உயிர் துறந்தார்.)

மாறாக, ஓப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொழும்புக்கு சென்றபோது, அவருக்கு அணிவகுப்பு மரியாதை செய்த சிங்களப் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் துப்பாக்கிப் பிடியால் தலையில் அடித்து, அந்த ஒப்பந்தத்தின் மீது சிங்கள தேசம் கொண்டிருந்த கடும் சீற்றத்தையும் – தமிழர்களுக்கு ஒரு சொட்டு உரிமை கூட கொடுப்பதிலும் தமக்கு உடன்பாடில்லை என்ற நிலைப்பாட்டையும் – ‘அடித்து’ கூறினான்.

அவ்வாறு இந்தியப் பிரதமரை அடித்த கடற்படையைச் சேர்ந்தவர் பின்னர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுக்கும்போது -

ராஜீவ் காந்திக்கு மரியாதை வழங்கியது போல நாளை பிரபாகரனுக்கும் நான் அணிவகுப்பு மரியாதை செய்ய வேண்டிய நிலைக்கு இந்திய – சிறிலங்கா ஒப்பந்தம் வழிவகுத்துவிடும். அதனாலேயே அதில் கைச்சாத்திட்ட ராஜீவை அடித்தேன் என்று கூறினான்.

இதுதான் சிங்கள தேசத்தின் மனநிலை. அன்றல்ல. இன்றல்ல. என்றுமே இதுவாகத்தான் இருக்கப்போகிறது.

இந்த ஒரு நிலையில், தமிழர்களுக்கு வழங்கும்படி இந்தியா பணிக்கும் எந்த தீர்வுக்கும் சிறிலங்கா இணங்கப்போவதில்லை. 13 ஆவது அரசமைப்பு சட்ட திருத்தம் ஊடான மகாண சபை அல்ல; மாவட்ட சபை அதிகாரம் கூட தமிழர்களுக்கு வழங்க சிறிலங்கா முன்வரப்போவதில்லை.

அது இந்தியாவுக்கும் தெரியும். சிங்கள தேசத்தின் விருப்பம் இன்மையை – தமிழர் மீதான அந்த வெறுப்பை – வெளிப்படையாக தோலுரித்துக்காட்டுவதற்கு இந்தியாவின் இந்த அழுத்தம் ஏதோ ஒரு வகையில் உதவத்தான் போகிறது.

இதன் அடிப்படையில் சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வைத்திருக்கும் அடுத்த அடுத்த அரசியல் காண்டீபங்கள்; சிறிலங்காவை சிக்கலுக்குள் மாட்டுபவையாக இருக்கப்போகின்றன என்பது அடுத்த விடயம்.

இந்தியா – ஈழத்தமிழர் – மேற்குலகம்

ஆகவே, தற்போதைய நிலையில், இந்தியா வழிமொழிவதை அனுசரித்து அதன்மூலம் இந்தியாவை அனுசரித்து அதன் வழியாக இந்தியாவை தமிழ்மக்களின் வசப்படுத்தும் ஒரு படிமுறைக்குள் ஈழத் தமிழ் இனம் சென்று கொண்டால் மாத்திரமே எதிர்கால நடவடிக்கைகளுக்கும் -

சிங்களம் என்றைக்குமே எதிரியாக பார்க்கும் இந்தியாவை தமிழ் இனத்தின் நிரந்தர நட்பு சக்தியாக இணைத்துக்கொள்ளவும் -

பெருந்துணையாக அமையும்.

இதேவேளையில் மறுமுனையில் உள்ள அமெரிக்கா தலைமையிலான மேற்குலகுடன் நாம் மேற்கொள்ளவேண்டிய இராஜதந்திர நகர்வுகள் தமிழ்மக்களுக்கு முன்னுள்ள இரண்டாவது அரசியல் பணி.

இந்தியாவின் இந்த முயற்சிகளுடன் மேற்குலகம் சேர்ந்து செயற்படுவதற்கான களத்தினை தமிழ்மக்கள் – முக்கியமாக புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் – ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

சுருக்கமாக சொல்லப்போனால், மேற்குலகத்தையும் இந்தியாவையும் இணைக்கும் பாலமாக தமிழ்மக்கள் இருப்பார்களேயானால், அது தமிழீழ அங்கீகாரத்துக்கு உலகத் தமிழினம் செய்து முடித்துவிட்ட பெரும்பணியாக அமையும்.

ஆகவே, சிறிலங்காவில் இந்தியா மேற்கொள்ளும் தீர்வு முயற்சிகளுக்கு ஆதரவு கொடுப்பதையும் மேற்குலகத்தை நோக்கிய இராஜதந்திர முயற்சிகளையும் சமாந்தரமாக மேற்கொள்ளவதில் தமிழினம் காண்பிக்கப்போகும் வேகமே, தமிழ் மக்களின் விடிவுக்கான தூரத்தை நிர்ணயிக்கப்போகின்றது.

இது சவாலான பணி. பல இடர்கள் நிறைந்தது. பல அனைத்துலக சதிகள் நிறைந்தது. ஆனால், புலம்பெயர்ந்து வாழும் மக்கள் சக்தி என்பதற்கு முன்னால் அது பெரிய விடயமே அல்ல.

இன்று புலம்பெயர்ந்து வாழும் மக்கள் சக்தியை தனிப்பெரும் சக்தியாக மேற்குலகம் அங்கீகரித்திருக்கின்றது. அந்த மக்கள் சக்தியை மேற்குலகம் செவிசாய்க்கின்றது. அந்த மக்கள் சக்தியை மேற்குலகம் மதிக்கின்றது.

ஆகவே, தெளிவாக வரையறுக்கப்பட்ட இராஜதந்திர வேலைத்திட்டங்கள் மூலம் இந்த இலக்கினை அடைவது என்பது தாயகத்தில் உள்ள உறவுகளுக்கு புலம்பெயர்ந்த மக்கள் செய்யும் மிகப்பெரும் அரசியல் பணியாக அமையும்.

அடக்கப்பட்ட இனத்தின் கோரிக்கைகளை வீரத்தின் ஊடாக எடுத்துக்கூறினாலும் கூட மனிதாபிமான ரீதியான கோரிக்கைகள் மற்றும் இராஜதந்திர ரீதியிலான வழிமுறைகள் ஊடாக எடுத்துக்கூறினால் மாத்திரமே இன்றைய உலகம் செவிசாய்த்து செயலில் இறங்குகின்றது. அதற்கு போதிய வரலாற்று உதாரணங்கள் உள்ளன.

தமிழ் இனம் தனது தேசியத் தலைவனது தலைமையின் கீழ் தனது வீரத்தை பார் எங்கும் பறைசாற்றி விட்டது. 30 ஆயிரம் மாவீரர்களை இழந்து 30 வருடங்களுக்கு மேலாக தமிழர் சேனை மேற்கொண்ட போராட்டம் உலகுக்கே சிம்ம சொப்பனமாக அமைந்தது. பிரபாகரன் என்ற ஒரு தலைவனாலும் அந்த தலைமையின் கீழ் போராடிய மக்களாலும்தான் இன்று பார் எங்கும் வாழும் ஒவ்வொரு தமிழனுக்கும் ஒரு அடையாளம் கிடைத்திருக்கிறது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆயுத வழிமுறை என்பது ஒவ்வொரு தமிழனதும் வீரத்தின் குறியீடு.

ஆகவே, தற்போது உலகின் அனுதாபத்தையும் இந்தியாவின் இரக்கத்தையும் ஆழத்தொட்டுச் செல்லும் வகையில் தமிழர்களின் கோரிக்கைகள் நகர்த்தப்படும்போது, அவற்றின் தாற்பரியத்தை அனைத்துலக சமூகம் நிச்சயம் பதிந்துகொள்ளும்.

அந்தப் பாதையின் ஓரத்தில் தாயக உறவுகள் இன்று கண்ணீரும் கம்பலையுமாய் நின்று கொண்டிருக்கும் இந்நிலையில், புலம்பெயர்ந்து வாழும் மக்கள் தமது பணிகளை சரியான நெறிப்படுத்தலுடன் – ஒருமைப்பாட்டுடன் – தெளிவான சிந்தனையுடன் – பரந்த மனதுடன் மேற்கொள்ளவேண்டும்.

இந்த கருத்துக்களம் ‘புதினம்’ இணையத்தளத்துக்காக எழுதப்பட்டதாகும்

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அயல்நாட்டு வீராங்கனை!

இன்று சுதந்திரக் காற்றை நாம் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம்.


நமது முன்னோர்கள் பலர் வெள்ளையர்களுக்கு எதிராக போராடி உயிரதியாகம் செய்து, இந்த சுந்திரத்தை நமக்கு பெற்று தந்துள்ளனர் என்பதை நாம் அறிவோம்.

பல்வேறு வீர மங்கைகளும் வெள்ளையர்களை எதிர்த்து போராடி உயிர் நீத்து, 'சுதந்திரப் போராட்டத்தில் ஆண்களுக்கு நாங்கள் கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல' என்று நிரூபித்து காட்டினர்.

இந்த தியாகிகள் எல்லாம் நம் இந்திய மண்ணை சேர்ந்தவர்கள். தாய்நாட்டை மீட்க மண்ணின் மைந்தர்களாக அவர்கள் நடத்தியப் போராட்டத்தை நாம் அறிவோம்.

ஆனால், இந்திய சுதந்திரப் போராட்டத்துக்காக அயல்நாட்டு பெண்மணி ஒருவர் தனது இறுதி மூச்சுவரை போராடி உயிர் நீத்ததை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

நமது நாட்டு தியாகிகளை நினைவு கூறும் அதே நேரத்தில் அந்த அயல்நாட்டு பெண் தியாகியையும் நாம் அறிய வேண்டியது மிக அவசியம்.

லண்டனில் பிறந்து, பாரீசில் வளர்ந்து, ஜெர்மனியில் இல்லற வாழ்க்கையை நடத்தி, இறுதியில் இந்தியா வந்து சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று வெள்ளையர்களையே கதி கலங்க வைத்த அந்த வீரமங்கை அன்னி பெசன்ட் அம்மையார்.

இளமைப் பருவம்:

1847ம் ஆண்டு அக்டோபர் முதல் தேதி லண்டனில் பிறந்தார் அன்னி பெசன்ட். இவரது பெற்றோர் டாக்டர் வில்லியம் பேஜ்வுட்- தாயார் எமிலி.



அன்னி பெசன்டின் 5வது வயதிலேயே அவரது தந்தையார் மரணமடைந்ததார். இதனால் வறுமைக்கு தள்ளப்பட்ட எமிலி, தனது இன்னொரு குழந்தை ஹாரியை நன்றாக வளர்க்க வேண்டும் என்பதற்காக, அன்னி பெசன்டை தனது உறவினரான மிஸ் மேரியாட் என்பவரிடம் ஒப்படைத்தார்.

இதனால், தனது 7வயதில் மிஸ் மேரியாட்டுடன் பாரீஸ் பறந்தார் அன்னி. செல்வச்செழிப்பில் வளர்ந்த அவர் இளம் வயதிலேயே குதிரையேற்றம், வில் வித்தை போன்ற வீர விளையாட்டுக்களை கற்று தேர்ந்தார். பல மொழிகளை எளிதில் கற்றார்.

தனது 14 வயதில் ஜெர்மனி சென்றார் அன்னி பெசன்ட். இளமையில் பேரழகியாக திகழ்ந்தார். 1866ல் பிராங்க்பெசண்ட் என்பவர் விரும்பி திருமணம் செய்து கொண்டார். அப்போது அன்னி பெசன்டுக்கு வயது 20.

எப்போது வரும் சுதந்திர தினம்...??


வானமாய் வளர ஆசைதான்
அதற்கு
எங்களுக்கு வயிறு வளரவேண்டுமே....
கவலைகளோடும் கண்ணீரோடும்
கண் மூடிய பொழுதுகள் எங்கள்
தோள்களை தொடர்ந்து
உரசிக் கொண்டே வருகின்றன.....

பாதைகளில் பயணிக்க
இங்கு
பாதங்களோ பயணில்லாமல் கிடக்கின்றன!
பசுமையாய்க் கிடந்த வயலுக்கு
தீ வைத்த சங்கதி போல்
எங்கள் வாழ்க்கைக்கு தீ வைத்தது யார்?
கண்ணிற்குத் தெரியாத கடவுளா?
அல்லது
நாங்கள் சுவாசித்து விடும் காற்றை
சுவாசிக்கும் இந்த மானிடர்களா?




மீன்களுக்கு தவறாமல் உணவு போடும்
எம் மக்கள் எங்களை மீனை விட
அற்பமாக பார்ப்பது ஏனோ?
இது யார் செய்த குற்றம்....???
விதியை நொந்து எங்களைச் சுமந்த
எங்கள் தாயா?
உருவாகப் போகும் உயிர்களுக்கு
உணவிட வேண்டுமே என்பதை
நினைக்காமல் தன் பசியைப் போக்கி
எங்களை வீதியில் நிறுத்திய
எங்களின் தந்தையா?
படைப்பே பிரதானம் என்று
பாரபட்சம் பார்த்து வக்கத்தவர்களுக்கு
எங்களைக் கொடுத்த - இந்த
கடவுளின் குற்றமா? யார் செய்த குற்றம்?

மனசுக்குள் துடிப்பதை உதடுகள்
ஊமையாய் உரைக்கின்றன......
கண்களின் ஓரத்தில் அனுமதியில்லாமல்
கண்ணீர்த்துளி வெளியேறி
கன்னங்களை சுத்தமாக்குகின்றன....

எல்லா வழிகளும் இறுக்கமாய்
அடைபட்ட போதும்....- ஒரு
சிறிய மிட்டாய்க்காக இதயம்
ஏங்குகிறது....இப்போதைய பசிக்கு
அது போதுமே....!!! அது சரி
எப்போது வரும் சுதந்திர தினம்...??


Thanks - Pearlson Emmanuel


Wednesday, August 10, 2011

விசாரணைக்கு வா!


இந்தக் கதையைக் கேளுங்கள். இது ஒரு சோகக்கதை. நிச்சயமாகத் தொண்ணூறு மில்லி கண்ணீர் உத்தரவாதம். உங்களுக்கா எனக்கா என்பதுதான் பிரச்னை.

இந்தக் கதையின் நாயகன் பெயர் பாராகவன். அட, என்னுடைய பெயர் போலவே இருக்கிறதே என்று உங்களுக்குத் தோன்றலாம். எனக்கும் அப்படித்தான் தோன்றியது. குழப்பத்தைத் தவிர்ப்பதற்காகப் பெயரை மாற்றலாமா என்று முதலில் யோசித்தேன். அது தருமமாகாது என்கிறபடியால் இடையில் இருந்த ஒரு புள்ளியை மட்டும் எடுத்துவிட்டு அதே பெயரையே வைத்துவிட்டேன். பாராகவன் என்கிற இந்தக் கதையின் நாயகன் என்னைப் போலவே ஒரு தமிழ் எழுத்தாளன். என்னைப் போலவே, எழுதுவது தவிர மிச்சமுள்ள ஆய கலைகள் எதிலும் அத்தனை சாமர்த்தியம் போதாத ஒரு சராசரி. அவனுக்கு ஒரு சிக்கல் வந்தது. ஆகவே, அந்தப் புள்ளியிலிருந்து இந்தக் கதை தொடங்குகிறது.

பாராகவன், வருமானம் என்ற ஒன்றை ஒரு குத்துமதிப்பாகவேனும் பார்க்கத் தொடங்குவதற்கு முன்னமேயே, முன் ஜாக்கிரதை முத்தண்ணாவாகிய அவனது தந்தையார் அவனுக்கு வருமானவரி நிரந்தரக் கணக்கு எண்ணுக்கு விண்ணப்பம் செய்துவிட்டிருந்தார். எதிர்காலத்தில் பையன் கோடி கோடியாகச் சம்பாதிக்கப் போகிறான் என்று சரியாகத் தப்புக்கணக்குப் போட்டு இந்தச் செயலை அவர் செய்தார். இந்த வகையில், இக்கதையின் மிக முக்கியமான திருப்புமுனைக்கு அவரே காரணமாகிறார். தனது இந்தச் செயல் சரித்திரத்தில் இடம்பெறப் போகிறது என்பதோ, ஒரு துயர சரித்திரத்தின் அடிக்கல்லாகத் தனது செயல்பாடு அமையப்போகிறது என்பதோ அந்த உத்தமோத்தமருக்கு லவலேசமும் தெரியாது. ஒரு வெள்ளைக் கடுதாசி. டியர் சார் என்று ஆரம்பம். பெயர். தந்தை பெயர். தாத்தா பெயர். பிறந்த தேதி, மாதம், வருடம். முகவரி. தீர்ந்தது விஷயம்.

PAN என்றொரு சங்கதியும் அதன் ஸ்தூல ரூபமான சதுர அட்டையும் தமிழ்கூறும் நல்லுலகில் அறிமுகமாகிக்கொண்டிருந்த கிபி இருபதாம் நூற்றாண்டின் தொண்ணூறாவது வருடங்களின் மத்தியில் இச்சம்பவம் நடைபெற்றது. எனவே, வருமான வரித் துறையினருக்கே ஏகப்பட்ட குழப்பங்கள் இருந்திருக்கும் என்பதை நாம் மறுப்பதற்கில்லை. குழப்பங்களின் குற்றியலுகரமாகப் பல பேரின் நிரந்தரக் கணக்கு அட்டையில் புகைப்படங்கள் மாறியிருப்பதாகச் செய்திகள் வந்துகொண்டிருந்தன. குப்புசாமிகளின் அட்டைகளில் கோவிந்தசாமிகளின் புகைப்படங்கள். குமாரசாமிகளின் அட்டைகளில் குழந்தைசாமிகளின் பெயர்கள்.

இதெல்லாம் எம்பெருமானின் அலகிலா விளையாட்டுகளின் ஒரு பகுதி என்று எடுத்துக்கொண்டு தன் கடன் பணி தேடிக் கிடந்த பாராகவனுக்கும் நிரந்தரக் கணக்கு அட்டை ஒரு நன்னாளில் வந்து சேர்ந்தது. அவனது தகப்பனாருக்குப் பரம திருப்தி. வருமான வரிக் கணக்கு அட்டை வந்துவிட்டது. இனி வருமானம் வரவேண்டியதுதான் பாக்கி. அது தன் வேலையல்ல என்று வந்த அட்டையை எடுத்து உள்ளே பத்திரப்படுத்திவிட்டுப் போய்விட்டார்.

சம்பவம் நடந்து பல வருடங்களுக்குப் பிறகுதான் பாராகவனாகப்பட்டவன் அந்த அட்டையை எடுத்துப் பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அப்போதுங்கூட வரி கட்டுமளவுக்கு அவன் சம்பாதிக்கத் தொடங்கியிருக்கவில்லை என்றாலும், நான் வரி கட்டுமளவு சம்பாதிக்கவில்லை என்பதை இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறேன் என்று சுய தீர்ப்பு வழங்கவேண்டிய புதிய சட்டம் அப்போது அமலுக்கு வந்திருந்தது.

எடுத்துப் பார்த்த பாராகவனுக்கு திடுக்கிட்டது நெஞ்சம். அடக்கடவுளே, இதென்ன என் அப்பா பெயரை என் பெயராகவும், தாத்தா பெயரை என் அப்பா பெயராகவும் மாற்றி அச்சிட்டிருக்கிறார்களே. எல்லாம் இந்த எழவெடுத்த ஆங்கிலேய கிவன் நேம், சர் நேம், லாஸ்ட் நேம் சம்பிரதாயங்களால் வந்த வினை.

என்ன செய்வதென்று அவனுக்குப் புரியவில்லை. அப்பாவாகப்பட்டவர் அப்போது பொது வாழ்க்கையிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டபடியால், அவரை மேற்கொண்டு இம்சிக்க விரும்பாமல் பேசாதிருந்துவிட்டான். பெயரில் என்ன இருக்கிறது என்று நினைத்துக்கொண்டான். முன்பே சொன்னபடி அவனது ஆய கலைகள் 63ன் குறைபாடும் இவ்விடத்தில் செயல்பட்டிருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

பெரிய பிரச்னை ஏதும் அப்போது இல்லாதபடியால் அந்தப் பெயர் மாற்றக் குழப்படியை அவன் சுத்தமாக மறந்தே போனான்.

பிறகு சில வருடங்கள் கழித்து, வருமான வரித்துறையினரிடமிருந்து அவனுக்கு ஒரு நோட்டீஸ் வந்தது. திரு. பாராகவன்! நீங்கள் திருவனந்தபுரம் அனந்தபத்மனாபன் அளவுக்கு சம்பாதித்துக் குவித்திருக்கிறீர்கள். ஆனால் வருமான வரித்துறைக்குச் சரியாகக் கணக்குகளைச் சமர்ப்பிக்காமல் ஏமாற்றியிருக்கிறீர்கள். உங்களைக் கூண்டிலேற்றி விசாரிக்க அன்புடன் அழைக்கிறோம். நாளது சித்ரபானு வருஷம் ஆனி மாதம் சுக்ல பட்சம் குருவாரம் உதயாதி நாழிகை பத்தே முக்கால் மணிக்கு மேல் பன்னிரண்டு மணிக்குள் (பூரண ராகுகாலம்) எங்கள் அலுவலகத்தில் இன்ன ஆபீசர் முன் ஆஜராகக் கடவீர்.

ஓர் எழுத்தாளனுக்கே உரிய குலைநடுக்கங்களுடன் பாராகவன் குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட அதிகாரி முன்னால் போய் நின்றான்.

ஐயா நான் ஒரு தமிழ் எழுத்தாளன். இந்த வகையினைச் சேர்ந்தவர்கள் அனந்த பத்மநாப சுவாமி திருக்கோயிலின் வாயில் காப்போன் அளவுக்குக் கூட சம்பாதிக்க திராணியற்றவர்கள். கோடிக்கணக்கில் கருப்புப் பணம் சேர்த்து கல்லா கட்டும் கலையறியாக் கபோதிகள். ஏதோ பெரிய சரித்திரப் பிழை நேர்ந்திருக்கிறது. கொஞ்சம் கருணை கூர்ந்து கணக்கு வழக்குகளைச் சரியாகப் பார்க்க வேணும்.

அதிகாரி அவனை ஏற இறங்கப் பார்த்தார். சரி போ. மூன்று மாதம் கழித்து திரும்ப விசாரணைக்கு வா என்று வாய்தாக் கடுதாசி போட்டு அனுப்பிவிட்டார். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அதிகாரி அழைப்பதும் அவன் போய் அதே பாட்டை வேறு வேறு மேளகர்த்தா ராகங்களில் பாடுவதுமாக இந்தக் கச்சேரி சுமார் ஓராண்டு காலம் தொடர்ச்சியாக நடைபெற்றது. இடைப்பட்ட காலங்களில் அந்த உத்தம அதிகாரி அவனுக்கு நெருங்கிய சிநேகிதராகிவிட்டார்.

‘இதெல்லாம் கம்ப்யூட்டர் பண்றது சார். ரேண்டமா சிலபேரை சிஸ்டம் செலக்ட் பண்ணிக் குடுக்கும். அவங்களைத் துருவிப் பாக்கறது வழக்கம். ஸ்க்ரூட்டினின்னு சொல்லுவோம். சமயத்துல சில நிஜமான ஃப்ராட் கேசுகள் மாட்டும்’ என்று சாதாரணமாகச் சொன்னார்.

அடக்கஷ்டமே. கடவுள்தான் விதியை எழுதுகிறார் என்று நினைத்துக்கொண்டிருந்த பாராகவனுக்கு அன்றுதான் கம்ப்யூட்டர் அதை எழுதுவது தெரியவந்தது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கும் மற்றதுக்கும் நஷ்ட ஈடெல்லாம் கேட்கப்படாது. ஒழுங்காக வீடு போய்ச்சேர். மேற்கொண்டு ஸ்க்ரூட்டினியில் சிக்காதிருக்க எல்லாம் வல்ல எம்பெருமான் உன்னோடு இருப்பான் என்று சொல்லி அனுப்பினார் நல்ல அதிகாரி.

விட்டதா சனி?

ம்ஹும். அந்த ஓராண்டுக் காலத்தில் பாராகவன் தினசரி தனது வருமான வரி நிரந்தரக் கனக்கு அட்டையை எடுத்து எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்ததில், அந்த முதல் சரித்திரப் பிழை பூதாகாரமாகத் தெரிந்தது. அவன் பெயரிடத்தில் அப்பா பெயர். அப்பா பெயரிடத்தில் தாத்தா பெயர். தவிரவும் அது திரேதா யுகத்தில் அச்சிடப்பட்ட பழுப்புத் தாள். நவீன வரியாளர்கள் எல்லோரும் வழுவழுவென்று பிளாஸ்டிக் அட்டைகள் வைத்திருக்கிறார்கள். மாறும் புகைப்படங்களில்கூட மனம் கவரும் வகையில் தமன்னா, ஸ்ரேயாக்களின் படங்கள்தான் வருகின்றனவாம்.

பிழையைச் சரிசெய்து தானும் ஏன் ஒரு நல்ல பளபளப்பான பிளாஸ்டிக் அட்டையாக வாங்கிக்கொள்ளக்கூடாது என்று பாராகவனுக்குத் தோன்றியது. பழைய பிரச்னையோடு பழைய அட்டையையும் ஒழித்துக் கட்டி, புதியன புகுவது நல்லதே அல்லவா?

ஆகவே இம்முறை அவனது அப்பாவுக்கு பதிலாக அவனே விண்ணப்பம் எழுதினான். தன் பெயர். தன் தந்தையின் பெயர். தாத்தாவின் பெயர். பிறந்த தேதி, மாதம், வருடம். முந்தைய நிரந்தரக் கணக்கு அட்டையில் இடம் பெற்றிருந்த பிழைகளின் விவரம். சரியான விவரங்களுக்கான சரியான ஆதாரங்களை உடன் இணைத்திருக்கிறேன். கருணை கூர்ந்து பளபளப்பான புதிய பிளாஸ்டிக் அட்டையைக் காலக்கிரமத்தில் அனுப்பிவைக்கக் கோரும் தங்கள் உண்மையுள்ள பாராகவன்.

ஒரு மாதம் கழித்து வருமான வரித்துறையினரிடமிருந்து அவனுக்கு ஒரு பதில் வந்தது.

திரு. பாராகவன்! நீங்கள் அனுப்பிய விவரங்களைக் கண்டோம். எங்கள் டேட்டா பேஸில் உள்ள விவரங்களும் நீங்கள் அனுப்பிய விவரங்களும் சற்றும் பொருந்தவில்லை. நீங்கள் உங்கள் அப்பா என்று குறிப்பிட்டிருப்பவர், எங்கள் விவரப்படி உங்கள் அப்பா இல்லை. அது எப்படி அவ்வாறு இருக்கலாம்? உங்கள் அப்பாவுக்கு நீங்கள் தவறாகப் பெயரிட்டிருப்பது மாபெரும் தவறு. இக்கடிதம் கண்ட பதினைந்து நாள்களுக்குள் நீங்களும் உங்கள் நிஜமான அப்பாவும் எங்கள் அதிகாரி முன்னிலையில் ஆஜராகக் கடவீர். அவர்தான் உங்கள் அப்பா என்பதற்குத் தக்க ஆதாரங்களைக் கொண்டுவருவது அவசியம். அவரது அப்பா இன்னார் என்பதற்கான ஆதாரங்களும் பரம அவசியம்.

ஆடிபோனான் பாராகவன். விதி திரும்பவும் ஒரு பிளாஸ்டிக் கார்ட் ரூபத்தில் விளையாடத் தொடங்கிவிட்டதா? பிரதி வெள்ளிக்கிழமை லீவு போட்டுவிட்டு அப்பாவை அழைத்துக்கொண்டு வருமான வரி அலுவலகத்துக்குத் தீர்த்த யாத்திரை போகவேண்டியதுதானா? தள்ளாத வயதில் பொல்லாத விதிக்கு அவரும் இரையாகவேண்டியதுதானா? அவர்தான் தனது தந்தை என்று பாராகவனால் நிரூபித்துவிட முடியும். ஆனால் முதல் உலகப்போருக்கு முன்னால் செத்துப்போன அவரது தந்தையார் இன்னார்தான் என்று என்ன ஆதாரங்களை வைத்து நிரூபிப்பது? ரேஷன் கார்டு, டிசி, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட்… ம்ஹும். அந்தப் புண்ணியாத்மா உயிர் வாழ்ந்த காலத்திலேயே இதெல்லாம் இருந்திருக்குமா என்பது சந்தேகம்.

எனக்கு ப்ளாஸ்டிக் அட்டையே வேண்டாம், உங்கள் டேட்டா பேஸே என் தெய்வம், என் தாத்தா பெயரே அப்பாவின் பெயராக இருந்துவிட்டுப் போகட்டும், ஆளை விடுங்கள் என்று கதறிக் கண்ணீர் மல்க ஒரு கடுதாசி போட்டுவிட்டு அறைக்குள் புகுந்து கதவைச் சாத்திக்கொண்டான் பாராகவன்.

அதோடு முடிந்தது என்றுதான் அவன் நினைத்தான். சரியாக ஒரு வருடம். ஆட்சி மாற்றம் நடைபெற்ற சூட்டில் அனைத்துத் துறைகளும் சுறுசுறுப்பாக வேலை பார்க்கத் தொடங்கியிருக்கின்றன அல்லவா? மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் மாநிலத்தில் குப்பை கொட்டும் வருமான வரித்துறையின் டேட்டா பேஸும் விழித்துக்கொண்டு விட்டது.

நேற்றைக்குப் பாராகவனுக்குத் திரும்பவும் ஒரு கடுதாசி வந்திருக்கிறது. திரு. பாராகவன்! நீங்கள் எக்கச்சக்கமாக சம்பாதித்துவிட்டீர்கள். ஏ.ஐ.ஆர். அப்படித்தான் சொல்கிறது. ஆனால் உங்கள் PAN எண்ணைக் கொடுக்காமல் ஏமாற்றியிருக்கிறீர்கள். இது சம்பந்தமாக உங்களை விசாரிக்க வேண்டியிருக்கிறது. இக்கடிதம் கண்ட பதினைந்து நாள்களுக்குள் எங்கள் அதிகாரி இன்னாரை நேரில் வந்து சந்திக்காவிட்டால்….

ஊர் மெச்சும் பிரபல எழுத்தாளனாக இருந்து என்ன புண்ணியம்? ஏ.ஐ.ஆர். என்றால் ஆனுவல் இன்ஃபர்மேஷன் ரிப்போர்ட்டா? ஆல் இந்தியா ரேடியோவா? முன்னது என்றால், பாராகவன் வருடம் தவறாமல் வரி கட்டியதற்கு அத்தாட்சிகள் இருக்கின்றன. பின்னது என்றால் அந்தத் தலத்தின் வாசல் படியைக் கூட வாழ்நாளில் ஒருமுறையும் அவன் மிதித்ததில்லை. இதை அந்த அதிகாரிக்குப் புரியவைக்கச் சரியான சொற்கள் கிடைக்காமல் தவித்துத் தண்ணீர் குடித்துக்கொண்டிருக்கிறான் பாராகவன். ஒன்றும் பெரிய விஷயமில்லை. நேரில் ஆஜராகி விளக்கம் தரலாம். அவர் ஏற இறங்கப் பார்த்துவிட்டு இரண்டு மாதம் கழித்து வரச் சொல்லி வாய்தா கொடுப்பார். திரும்பப் போனால் திரும்ப இரண்டு மாதம். இப்படி ஒரு வருடம் கழித்து ஒரு குத்துமதிப்பான பெனால்டி. எதற்குப் பெனால்டி? அதெல்லாம் கேட்கப்படாது. அப்படித்தான்.

அரசாங்கத்தை ஏமாற்ற வேண்டுமென்று எந்த நல்ல குடிமகனும் நிச்சயமாக நினைக்கமாட்டான். ஆனால் அரசாங்கம் என்பது இந்த மொக்கை அதிகாரிகளும், சார்லஸ் பேபேஜ் காலத்து டப்பா கம்ப்யூட்டர்களும்தான் என்னும் பட்சத்தில், குறைந்தது ஒரு கட்டுரை அளவிலாவது பழிவாங்கும் உணர்ச்சி ஏற்படுவதைப் பரம சாதுவான பாராகவன்களாலும் தவிர்க்க முடியாது என்பதே இக்கதை உணர்த்தும் நீதியாகும்.

[நன்றி: புதிய தலைமுறை]

Loading...
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More