Blogroll

Saturday, August 13, 2011

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அயல்நாட்டு வீராங்கனை!

இன்று சுதந்திரக் காற்றை நாம் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம்.


நமது முன்னோர்கள் பலர் வெள்ளையர்களுக்கு எதிராக போராடி உயிரதியாகம் செய்து, இந்த சுந்திரத்தை நமக்கு பெற்று தந்துள்ளனர் என்பதை நாம் அறிவோம்.

பல்வேறு வீர மங்கைகளும் வெள்ளையர்களை எதிர்த்து போராடி உயிர் நீத்து, 'சுதந்திரப் போராட்டத்தில் ஆண்களுக்கு நாங்கள் கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல' என்று நிரூபித்து காட்டினர்.

இந்த தியாகிகள் எல்லாம் நம் இந்திய மண்ணை சேர்ந்தவர்கள். தாய்நாட்டை மீட்க மண்ணின் மைந்தர்களாக அவர்கள் நடத்தியப் போராட்டத்தை நாம் அறிவோம்.

ஆனால், இந்திய சுதந்திரப் போராட்டத்துக்காக அயல்நாட்டு பெண்மணி ஒருவர் தனது இறுதி மூச்சுவரை போராடி உயிர் நீத்ததை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

நமது நாட்டு தியாகிகளை நினைவு கூறும் அதே நேரத்தில் அந்த அயல்நாட்டு பெண் தியாகியையும் நாம் அறிய வேண்டியது மிக அவசியம்.

லண்டனில் பிறந்து, பாரீசில் வளர்ந்து, ஜெர்மனியில் இல்லற வாழ்க்கையை நடத்தி, இறுதியில் இந்தியா வந்து சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று வெள்ளையர்களையே கதி கலங்க வைத்த அந்த வீரமங்கை அன்னி பெசன்ட் அம்மையார்.

இளமைப் பருவம்:

1847ம் ஆண்டு அக்டோபர் முதல் தேதி லண்டனில் பிறந்தார் அன்னி பெசன்ட். இவரது பெற்றோர் டாக்டர் வில்லியம் பேஜ்வுட்- தாயார் எமிலி.



அன்னி பெசன்டின் 5வது வயதிலேயே அவரது தந்தையார் மரணமடைந்ததார். இதனால் வறுமைக்கு தள்ளப்பட்ட எமிலி, தனது இன்னொரு குழந்தை ஹாரியை நன்றாக வளர்க்க வேண்டும் என்பதற்காக, அன்னி பெசன்டை தனது உறவினரான மிஸ் மேரியாட் என்பவரிடம் ஒப்படைத்தார்.

இதனால், தனது 7வயதில் மிஸ் மேரியாட்டுடன் பாரீஸ் பறந்தார் அன்னி. செல்வச்செழிப்பில் வளர்ந்த அவர் இளம் வயதிலேயே குதிரையேற்றம், வில் வித்தை போன்ற வீர விளையாட்டுக்களை கற்று தேர்ந்தார். பல மொழிகளை எளிதில் கற்றார்.

தனது 14 வயதில் ஜெர்மனி சென்றார் அன்னி பெசன்ட். இளமையில் பேரழகியாக திகழ்ந்தார். 1866ல் பிராங்க்பெசண்ட் என்பவர் விரும்பி திருமணம் செய்து கொண்டார். அப்போது அன்னி பெசன்டுக்கு வயது 20.

0 comments:

Post a Comment

Loading...
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More