Blogroll

வயது ஏறினால் அழகும் கூடும்!

குழந்தையாக இருக்கும் போது தொடங்கி பேரிளம் பெண்ணாக மாறும் வரை பெண்கள் ஒவ்வொரு கால கட்டத்திலும் அழகுதான். எந்தப் பெண்ணையுமே அழகில்லை என்று கூற யாருக்குமே மனசு வராது...

சுகப்பிரசவத்தை அளிக்கும் குங்குமப்பூ

எந்தப் பூவிலும் இல்லாத புதுமை குங்குமப்பூவில் உண்டு. உடல் நிறத்தை சிவப்பாக மாற்றக் கூடிய அற்புதக் குணம் இதில் நிறைந்து காணப்படுகிறது. குங்குமப்பூக்களின்..

மனைவியை புரிந்து கொள்ள.!!!

மனைவியை புரிந்து கொள்ள முடியவில்லை என்று புலம்புவர்களுக்காக இது. மனைவியை மயக்க ஐடியாக்கள் இது மனைவியை மயக்க மட்டும்தான்.. கல்யாணம் ஆகாதவர்கள் வேண்டுமானால் இதை யூஸ் பண்ணி பெண்களை மயக்க டிரைப் பண்ணலாம். மயக்குங்க ஆனா நீங்க மயங்கிடாதீங்க.

நீங்காத நினைவுகள்...

தேய்ந்தாலும் வானை விட்டு நீங்காத பிறையை போல... உதிர்ந்தாலும் மலரை விட்டு நீங்காத காம்பை போல...

அம்மா என்பவள் காத்திருப்பவள்

நினைவுகள் எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் அம்மா என்பவள் மெலிந்த தேகமும் கந்தலான உடையும் அணிந்தவள் சமையல் பாத்திரங்களுக்கு முன்பு வியர்வை துடைப்பவள் நெருப்பை சீராக வளரவிடுபவள்

Sunday, July 31, 2011

உனக்கும் கீழே உள்ளவர் கோடி

நமக்கு மேல் வசதி இருப்பவர்களைப் பார்த்து, மனம் பொருமுவதை விட நமக்கு கீழான நிலையில் உள்ளவர்களைப் பார்த்து திருப்தியடைவதே சிறந்ததாகும். இதுகுறித்து நாயகம்(ஸல்) அவர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?
""உங்களை விட கீழ் நிலைமையில் உள்ளவர்களைப் பாருங்கள். உங்களுக்கு மேலான நிலையில் உள்ளவர்களைப் பார்க்காதீர்கள். அதுவே, அல்லாஹ்வின் அருட்கொடையை நீங்கள் தாழ்மையாகக் கருதாமல் இருப்பதற்கு துணைபுரியும்,' 'என்று. அதாவது, இறைவன் அவரவருக்கென கொடுத்ததைக் கொண்டு திருப்தியடையாமல், வசதியானவர்களின் வாழ்க்கையோடு ஒப்பிட்டால், அது இறைவன் நமக்கு தந்த வாழ்க்கையை அவமதிப்பது போலாகும் என்று கொள்ள வேண்டும். இருப்பதைக் கொண்டு திருப்தியுடன் வாழ்வோமா!

முதியோர் இல்லத்தில் இருக்கிறார்களா உங்கள் பெற்றோர்!


பிள்ளைகளால் சிரமப்படும் பெற்றோர் முதியோர் இல்லங்களுக்கு மனம் உடைந்து செல்கின்றனர். அல்லது கட்டாயமாக அனுப்பப்படுகின்றனர். ஆனால், அவர்களுக்கு எந்தளவுக்கு மரியாதை செய்ய வேண்டும் என்பது குறித்து நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறுவதைக் கேளுங்கள். எவன் ஒருவன் தன் தந்தையின் பக்கம் வெறுப்பான பார்வையைச் செலுத்துவானோ அவன் பெற்றோருக்கு அடி பணிந்தவனாக மாட்டான்.
  • உமது தந்தைக்கு முன்பாக நீர் நடக்காதீர். அவர் உட்காருவதற்கு முன் நீர் உட்காராதீர். அவருடைய பெயரைச் சொல்லி அழைக்காதீர். மேலும், அவரைப் பற்றி எவரிடமும் குறை சொல்லித் திரியாதீர்.
  • வயது வந்த பெற்றோர்களுக்கு (தாய் தந்தை இருவரில்) ஒருவர் இருந்து அவருக்கு (பிள்ளைகள்) செலவு செய்யவில்லையானால், அவர்கள் சுவர்க்கம் நுழைய முடியாது.
  • பெற்றோர்களுக்கு உதவி செய்யும் பிள்ளைகளுக்கு (எனது) வாழ்த்து உண்டாகட்டும். அவருடைய வயதை அல்லாஹ் அதிகப்படுத்துவானாக.
  • பெற்றோரை (மனம் நோகச் செய்து) அவர்களை அழுது கண்ணீர் வடிக்கச் செய்வது பெரும் பாவமாகும், தண்டனைக்குரியதாகும்.
  • பெற்றோரை துன்புறுத்திய ஒருவன் மன்னிப்புக்கேளாமல் இறந்து விடுவானாயின், கியாமநாளில் அவன் குஷ்டரோகியாக எழுப்பப்படுவான்.
  • பெற்றோர் தனக்கு அநியாயம் செய்தாலும் அவர்களிடம் பிள்ளைகள் அன்பைச் செலுத்துவது கட்டாயக் கடமையாகும்.இவ்வளவையும் படித்த பின்பு, நிச்சயம் மனம் மாறும் தானே!
- நன்றியுடன்... ப்ரியமுடன்

Thursday, July 28, 2011

ஆண்களுக்கு சில டிப்ஸ்! பெண்கள் எதை எதை விரும்புவார்கள்.


* காலையில் வேலைக்கு புறப்படும் ஆண், `அந்த பொருள் எங்கே? இது எங்கே?’ என்றெல்லாம் கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது. அதேநேரம், பொறுப்பாக கேள்விகள் கேட்டால், அதற்குரிய செயலை பொறுப்பாக செய்ய எல்லா பெண்களும் தயாராகவே இருக்கிறார்களாம்.

* விடுமுறை நாட்களில் தங்கள் விருப்பம்போல் ஓய்வெடுக்க வேண்டும் என்பது பெண்களின் பேராசை என்றுகூட சொல்லலாம். அன்றையதினம், `இன்று ஏதாவது விசேஷமாக செய்யலாமே…’ என்று வற்புறுத்தக்கூடாது.


* எந்தவொரு வேலையையும் நின்று நிதானமாக செய்யத்தான் எல்லாப் பெண் களுக்கும் பிடிக்கும். அவசரம் அவசர மாக அதைச் செய்வதில் அவர் களுக்கு உடன்பாடு இல்லை.

* திடீரென்று குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால், அதற்கு காரண மாக மனைவியை குற்றம் சொல்லக் கூடாது. குழந்தையை பராமரிக்கும் பொறுப்பு கணவன், மனைவி இருவருக் குமே உண்டு.

* எந்தவொரு முடிவை கணவன் எடுத் தாலும், அதில் மனைவியின் பங்களிப்பும் இருக்க வேண்டும். முடிவு எடுக்கும் விஷயத்தில் மனைவியை புறந் தள்ளக் கூடாது.

* ஒரு குடும்பத்தில் கணவனிடம் மட்டுமே குடும்ப வருமானம் இருக்கக் கூடாது. மனைவியிடமும் கொஞ்சம் பணம் இருக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் தன்னை மதிப்பார்கள் என்று ஒவ்வொரு பெண்ணும் நினைக்கிறாள்.

* படுக்கையறையில் போர் அடிக்கும் விதமாக கணவன் செயல்படக்கூடாது. எதைச் செய்தாலும், எதைச் சொன்னாலும் புதுமையாக, வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பது பெரும்பாலான பெண்களின் எதிர்பார்ப்பு.

* அதிகம் பேசுவதில் பெண்களுக்கு எப்போதும் ஆர்வம் உண்டு. அதனால், செல்போனில் அவர்கள் நீண்ட நேரம் அரட்டை அடித்தாலும் கண்டு கொள்ளக்கூடாது. `அய்யோ… பில் அதிகமாகி விடும்’ என்று சொன்னால் அவர்கள் எரிச்சல் ஆகிவிடுவார்கள். அதனால், அவர்களை மனம்போல் பேச விட்டுவிட வேண்டும்.

* வீட்டிலேயே அடைந்து கிடக்க எந்தவொரு பெண்ணும் ஆர்வம் காட்ட மாட்டாள். வாரத்திற்கு ஒரு முறை பக்கத்தில் உள்ள பார்க், பீச், ஓட்டல், தியேட்டருக்கோ, வருடத்திற்கு ஒருமுறையாவது வெளிர் சுற்றுலாவுக்கோ அழைத்துச் செல்ல வேண்டும்.

* கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசை எல்லாப் பெண்களிடமும் உள்ளது. அந்த வேலையை கணவன் தேடித் தந்தால் அவர்கள் மிகவும் மகிழ்வார்கள்.

பென் டிரைவ் மூலம் பரவும் வைரஸை தடுக்கும் இலவச மென்பொருள்

இப்போதெல்லாம் தினம் தினம் புதிது புதிதாய் வைரஸ் வந்துக்கொண்டே இருக்கின்றன. அதை எப்பாடுபட்டேனும் தவிர்த்திட ஆன்ட் வைரஸ் மற்றும் தடுப்பு மென்பொருள் சந்தையில் கிடைத்துக்கொண்டு இருக்கின்றன.. சில ஆன்ட்டி வைரஸ் மென்பொருள் தயாரிப்பாளர்களே கூட வைரஸை பரவ விட்டு அதற்குரிய சொல்யூசனை கொடுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் பரவலாக எழுந்த இந்நிலையில் பென்டிரைவ் மூலம் பரவும் வைரஸை தடுக்க என்றே புதிய இந்த மென்பொருள் வெளியிட்டிருக்கிறார்கள்..அதுவும் இலவசமாகவே..




நமது கணினியைவிட நாம் உபயோகிக்கும் பென்டிரைவால் தான் நமக்கு பெரிய தொல்லைகளே வந்து சேரும்.. அவ்வப்போது வேறு சில கணினியில் வெளியில் சென்று கூட சிலவேளையில் பயன்படுத்த வேண்டியிருக்கும். அப்போது நமக்குத் தெரியாமலேயே பென்டிரைவில் வைரஸ் மற்றும் மால்வேர்கள் என்ற நச்சு நிரலியும் நமது பென்டிரைவில் தஞ்சம் புகுந்து கொண்டு நாம் எப்போதெல்லாம் நமது கணினியில் பென்டிரைவை கணினியில் பொருத்துகிறோமே அப்போதெல்லாம் நமது அனுமதியில்லாம் அந்த வைரஸ்கள் நமது கணிணியில் குடிகொண்டு விடும்..

பிறகென்ன தாங்கள் வந்த வேளையை செவ்வனே செய்து கொண்டிருக்கும்.. அதுவும் இணைய இணைப்பில் உள்ள கணினி என்றால் துவம்சம் செய்து விட்டுத்தான் விடும்.

இவ்வாறு நமது கணினியை நாசம் செய்யும் மால்வேர்கள் மற்றும் வைரஸ் அறவே ஒழித்து கட்டுகிறது இந்த மென்பொருள்.. குறிப்பாக auto run.inf என்று சொல்லக்கூடிய நச்சு நிரலியை ஓரங்கட்டி தடுத்து விடுகிறது.

இனி நமது கணினியில் பென் டிரைவ் மூலம் எந்த ஒரு வைரஸையும் தடுத்து நிறுத்தும் பணியை செய்கிறது..

தரவிரக்க சுட்டி இங்கு கிளிக் செய்யவும்.

தமிழனின் புதிய வெப் அப்ளிகேசன்

நண்பர்களே உங்களுடைய குறிப்புகளை எழுதி வைத்துக்கொள்ளவும். எழுதி வைத்த குறிப்புகளை தேவைப்படும் பொழுது படிக்கவும். உங்களுடைய பர்சனல் விவகாரங்களை ஆன் டைரியில் எழுதி வைக்கவும். ஒரு மென்பொருள் உள்ளது. இதன் பெயர் ஞாபகம் என்பதை நினைவு படுத்தும் வகையில் Nyabag என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது. இது ஒரு டெஸ்க்டாப் அப்ளிகேசன் கிடையாது. இதனால் மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவ தேவையில்லை. இது ஒரு வெப் அப்ளிகேசன் ஆகும்.

இதன் டைரி பகுதியில் அன்றைய பொழுது குறித்து எழுதும் பொழுது எந்த மாதிரி மன நிலையில் இருந்தீர்கள் என்று Smilies தேர்வு செய்ய முடியும்.

உதாரணத்திற்கு காதல் மூடில் இருந்தீர்கள் என்றால் Smiliey இரண்டு கண்களும் இதயமாகவும் மாறி உங்களை காதல் மூடிற்கு மாற்றி விடும்.

இதே நீங்கள் கோபமாக இருந்தீர்கள் என்றால் வேறு மாதிரியும் காட்டும் Smiliesகள் உள்ளன.



இதன் மூலம் அன்றைய பொழுது எவ்வாறு இருந்திருக்கும் என்று உங்கள் டைரியினை படிக்காமலேயே உங்கள் Smiliey மூலம் தெரிந்து கொள்வீர்கள்.

இவர்களுடைய டைரி பகுதியில் பதினான்கு வகையான Smilieகள் உள்ளன.

இவர்களுடைய இந்த அப்ளிகேசனில் டாஸ்க் என்ற பகுதியில் உங்களுடைய அடுத்து செய்ய வேண்டிய வேலைகள் மற்றும் கலந்துரையாடல்கள் மற்றும் உங்களுடைய நினைவூட்டல்களை பதிந்து வைத்தால் உங்கள் மொபைல் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு நினைவூட்டல் செய்யும்.

இந்த இணையத்தளத்தில் உங்கள் மின்னஞ்சல் முகவரி இருந்தால் போதுமானது உடனே சேர்ந்து கொள்ளலாம்.

இந்த மென்பொருள் பீட்டா அளவில் இருப்பதால் இன்னும் நிறைய வசதிகள் செய்து தருவார்கள் என நம்பலாம். அத்துடன் இந்த மென்பொருள் vheeds.com நிறுவனத்தில் முதல் இலவச உலகளாவிய மென்பொருள் ஆகும்.

இதை உருவாக்கியவர்கள் நமது ஈரோட்டில் உள்ல வாழையக்கார தெருவில் உள்ள VHEEDS TECHNOLOGY SOLUTIONS நிறுவனத்தினர் என்னும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.



இவர்களின் இந்த இணையதள அப்ளிகேசன் வெற்றி பெற வாழ்த்துவோம். இத நமக்கு அறிமுகப்படுத்தி நம் வாசகர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள் என்று கூறிய வசந்த் அவர்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.

தமிழன் உருவாக்கிய மென்பொருள் உலகம் முழுவதும் பரவ என்னாலான சிறு முயற்சிதான் இது. இதை உபயோகப்படுத்துவதன் மூலம் நம் தமிழரின்
பெருமை பரவட்டும்.

இணையத்தள சுட்டி

இவர்களை பற்றிய சிறு குறிப்புகள் குறித்து அவர்கள் அனுப்பிய மின்னஞ்சலை இங்கு கொடுத்திருக்கிறேன்


“Vheeds Technology solutions” என்ற ‘technology startup’யினை செப்டம்பர் 2010’ல் மூன்று நண்பர்கள் சேர்ந்து ஈரோட்டில் ஆரம்பித்தோம். நாங்கள் 2007’ல் எங்களது பொறியியல் கல்வியினை ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் முடித்து ஹைதராபாத்தில் உள்ள MNC’ல் பணியமர்த்தபட்டோம். பின்பு ஜூலை 2010’ல் எங்களது பணியை Resign செய்துவிட்டு சொந்த நகரத்தில் எங்களது நிறுவனத்தை ஆரம்பித்தோம்.


தொழில்நுட்பம் மற்றும் அதன் சார்ந்த வளர்ச்சிகள் அனைத்தும் வளர்ந்த நாடுகள் மற்றும் இந்தியாவில் உள்ள பெரிய வர்த்தக நகரங்களுக்கு மட்டும் உரித்தானது என்ற நிலையினை மாற்றி சிறிய நகரங்களும் அதை சேர்ந்த தொழில்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற எங்களது எண்ணத்தை நோக்கி உழைத்து கொண்டிருக்கிறோம். அதற்கு ஏற்றார் போல் ஈரோட்டில் உள்ள சிறுத்தொழில் மற்றும் அதன் சார்ந்த நிறுவனங்கள் அனைத்துக்கும் அவர்களின் தொழில் முறைக்கு ஏற்ப மென்பொருள் செய்து அவர்களை நவீனத்துவம் ஆக்குகிறோம். மேலும் தமிழகத்தில் இருந்து உலகளாவிய அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வகையில் மென்பொருள்களை வடிவமைத்து கொண்டிருக்கிறோம். அதன் வகையில் வந்த முதல் மென்பொருள்தான் NYABAG.COM.
நாங்கள் இதுவரை செய்த மென்பொருள் மற்றும் வடிவமைப்புகளை இந்த உரலியில் பார்க்கவும். http://vheeds.com/portfolio.html.




இந்த பதிவு அனைவரையும் சென்றடைய உங்கள் ஓட்டுக்களை அனைத்து திரட்டிகளிலும் போடுங்கள் பேஸ்புக் மற்றும் ட்விட்டரிலும் கூறுங்கள் இதன் மூலம் தமிழரின் பெருமை உலகம் எங்கும் பரவட்டும்.

நன்றி மீண்டும் வருகிறேன்

Wednesday, July 27, 2011

நக்கீரனின் தரத்தைப் பாருங்கள்.

"நக்கீரன் வார இரு முறை வார இதழின் நிருபர்கள் கூட்டம், 29.05.2011 அன்று காலை 10மணிக்கு நக்கீரன் அலுவலகத்தில் நடந்தது..

தமிழகம் முழுவதும் நிருபர்கள் வந்திருந்தார்கள், அவர்களுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்ட கடிதத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள், அமைச்சர்களின் செயல்பாடுகள் கூர்ந்து கவனித்து, அதை செய்தியாக்க வேண்டும் என்று கூறிப்பிடப்பட்டிருந்தது.

இணை ஆசிரியர் காமராஜ் தலைமை நிருபர்கள் கூட்டம் தொடங்கியது, ஆசிரியர் கோபால் வந்தவுடன், எங்க தம்பி சிவசுப்ரமணியனை காணவில்லை உடனே காமராஜ், அவரை கூப்பிடவில்லை, ஏன்.. சிவா நம்ம வளர்ச்சிக்கு உழைத்தவன், உங்கள் விருப்பு வெறுப்பை நிருபர்களிடம் காட்டாதீர்கள், நக்கீரன் வளர்ச்சி என்பதே வீரப்பனை வைத்துதான், அதில் தம்பி சிவாதான் முக்கிய பங்கு ஆற்றினார், என்று கூறிவிட்டு எழுந்து அவர் அறைக்கு போய்விட்டார்..

நிருபர்களிடம் கருத்து கேட்ட போது, ஈரோடு நிருபர் ஜிவா, நாம் திமுக ஆதரவு பத்திரிகை என்பதை நிருபித்து வருகிறோம், நடு நிலை பத்திரிகையாக இருந்தால் மட்டுமே விற்பனை உயரும் என்றவுடன், காமராஜ் உனக்கு என்ன தெரியும் செய்தி அனுப்பவது இல்லை, வீரப்பன் பெயரை சொல்லி உங்க பொழப்பு ஓடுது என்ற கண்டபடி பேச, ஜிவா கூட்டத்திலிருந்து வெளியேறி கோபால் புகார் கூறினார், திரும்பவும் கூட்டத்திற்கு வந்த கோபால், ஜிவாவிடம் எதாவது கேட்க வேண்டுமானால் தனியாக கேளுங்கள், அவர்கள் வீரப்பன் தொடபான வழக்கில் ஆஜராவதில் காலம் போய்விடுகிறது, சீனியர் நிருபர்களை எல்லாம், அனைவர் முன்னாடி பேசுவது சரியல்ல என்று கூறிவிட்டு வெளியேறினார்..

காமராஜ் செல்போன் பேச கூட்ட அறையிலிருந்து வெளியே வர, நிருபர் பிரகாஷ், ஜிவாவை பார்த்து ஆசிரியரிடம் சொன்னால் பருப்பு வேகாது, காமராஜ் அட்ஜஸ்ட் செய்துக் கொண்டு போய் பொழப்பை நடத்து என்று கிண்டலடிக்க, ஜிவா, பிரகாஷ்யை அடிக்க பாய, கூட்டத்தில் அடிதடி நடந்தது. பிறகு காமராஜ் சமாதானம் செய்தார்..

கடைசியில் காமராஜ், ஆசிரியரை ஜெயலுக்கு அனுப்பியவர் ஜெயலலிதா, மீண்டும் அவர் ஆட்சிக்கு வந்துள்ளார்(இதை எல்லாம் ஒருமையில் பேசினார் அவ, இவ என்று) ஒவ்வொரு நிருபரும் அதிமுகவுக்கு எதிராக செய்தி சேகரித்து அனுப்ப வேண்டும்..
அதிமுக எதிராக ஆதாரத்துடன், புகைப்படத்துடன் செய்தி கொடுக்கும் நிருபர்கள் மாதம் மாதம் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு பரிசுகள் கொடுக்கப்பட்டும் என்று காமராஜ் பேசிய பிறகு கூட்டம் முடிந்தது.."

இதைப் படித்த நக்கீரன் இதழின் தலைமை நிருபர் பிரகாஷ் தனது 96770 91357 என்ற எண்ணிலிருந்து தொடர்பு கொண்டார். இது இதழியல் நெறிகளை மீறிய செயல் என்று, நக்கீரன் இதழின் தலைமை நிருபர் பிரகாஷ் கருத்து தெரிவித்தார். அவ்வாறு அவர் கருத்து தெரிவிப்பதற்கு அவருக்கு எல்லா உரிமைகளும் உண்டு. நம்மை கடிந்து கொள்வதற்கும் அவருக்கு உரிமை உண்டு. ஆனால், அதை எப்படிச் செய்ய வேண்டும் ? எடுத்த எடுப்பில் அவதூறான வார்த்தைகளால் அர்ச்சனை செய்வதா ?

நக்கீரன் எடிட்டோரியல் அறையில் நடந்தவைகளை எழுதுவதற்கு சவுக்குக்கு உரிமை இல்லை என்றால், நித்யானந்தாவின் படுக்கையறையில் நடந்தவைகளை படம் பிடித்துக் காட்டுவதற்கு மட்டும் நக்கீரன் இதழுக்கு உரிமை உண்டா ?

சவுக்குக்கு தகவல் சொல்லுபவர்கள், பல்வேறு இடங்களில் இருந்து சொல்வார்கள். அவற்றின் நம்பகத்தன்மையை பரிசோதித்த பிறகே, அவை பதிவேற்றப் பட்டு வருகின்றன. சவுக்குக்கு யார் தகவல் தருகிறார்கள் என்பது குறித்த எவ்வித புரிதலுமின்றி, சில பத்திரிக்கையாளர்களைப் பற்றியும், சில காவல்துறை அதிகாரிகளைப் பற்றியும், மிகவும் கொச்சையாக பதிவேற்ற முடியாத வார்த்தைகளால் இன்று காலை 10 மணிக்கு, நக்கீரன் இதழின் தலைமை நிருபர் பிரகாஷ், சவுக்கை அர்ச்சனை செய்தார்.

பிரகாஷ் இது போல அவதூறான வார்த்தைகளால் சவுக்கை ஏசியதால், அது சவுக்குக்கு அவமானம் அல்ல…. இது போன்ற தரந்தாழ்ந்த நபர்களை தலைமை நிருபராக வைத்திருப்பதன் மூலம், நக்கீரன் இதழின் தரம் தெரிகிறது.

இந்த உரையாடலின் ஒலிப்பதிவை சவுக்கு அப்படியே சமர்ப்பிக்கிறது. மிக மிக அவதூறான வார்த்தைகளைக் கொண்டிருக்கிறது இந்த உரையாடல். வாசகர்கள் தவறாக நினைக்க வேண்டாம்.

Click to download in MP3 format (3.11MB)

மனைவியை புரிந்து கொள்ள.!!!



மனைவியை புரிந்து கொள்ள முடியவில்லை என்று புலம்புவர்களுக்காக இது. மனைவியை மயக்க ஐடியாக்கள் இது மனைவியை மயக்க மட்டும்தான்.. கல்யாணம் ஆகாதவர்கள் வேண்டுமானால் இதை யூஸ் பண்ணி பெண்களை மயக்க டிரைப் பண்ணலாம். மயக்குங்க ஆனா நீங்க மயங்கிடாதீங்க.

பெண்களின் அன்பை பெறுவது எளிதுதான். இதோ அதற்கான வழிகள்.....

1. மதித்தல்

வீட்டு வேலையைத் தவிர மற்ற துறைகளிலும் நிறைய சாதிக்க முடியும் என்று நிருபித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே மனைவியின் திறமையை மதியுங்கள் & ஊக்குவியுங்கள் வேற வழியில்லை வீட்டு வேலைகளை நீங்க தான் நண்பர்களே செய்ய வேண்டும் .. என்னை அடிக்க வர வேண்டாம் ஒகேவா? பெண்களை மயக்குவது என்பது அவ்வளவு எளிதல்ல. முதல் ஐடியாவிற்க்கே சோர்ந்து போனா எப்படி?


2.கனவுகள்

பெண்களுக்கென சில கனவுகளும் இலட்சியங்களும் உள்ளன.அந்த கனவுகளை சிதைத்து உங்கள் பின் வர வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். முடிந்தால் உதவுங்கள். இல்லையென்றால் அமைதியாக வழிவிடுங்கள்.(நண்பரே நீங்கள் என்ன கேட்க வருகிறீர்கள் என்பது எனக்கு புரிகிறது.. அவர்களின் கனவில் புடைவைகள் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதுதானே உங்கள் கேள்வி? இதல்லெல்லாம் ஒரு கேள்வியா என்ன? பேசாமல்
புடைவைகளை வாங்கி கொடுங்கள்.)இது என்ன என் காசா பணமா?

3.வித்தியாசமான முறையில் சிந்தியுங்கள்.

மனைவியை சமாதானபடுத்தம் பழைய வழிமுறைகளெள்லாம் ( மல்லிகை பூ, அல்வா ) இந்த காலத்திற்கு உதவாது. புதிய புதிய முயற்சியில் ஈடுபடுங்கள் .மனைவிக்கு திடீர் ஆச்சிரியம் கொடுக்கும் முயற்சியை கைவிடாதிர்கள்( அதற்க்காக இன்னொரு பெண்ணை வீட்டுக்கு அழைத்து வந்து இது உனக்கொரு புதிய தங்கை என்று அதிர்ச்சி கொடுக்காதிர்கள்... பெண்பாவம் பொல்லாதது)

4. உணர்வுகளை வெளிபடுத்துங்கள்.

ஆண்கள் அழக்கூடாது என்பது சரிதான். ஆனால் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஆண்களைத்தான் பெண்கள் விரும்புவார்கள் என்பது ரொம்ப உண்மை. அதற்க்காக எப்போதும் அழுமுஞ்சியாக இருக்கும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது( நண்பரே மனைவி அடிக்கும் போதல்லாம் அழுகாதிர்கள் சில சமயங்களில் சிரியுங்கள். நம்மாளுக்கு மண்டை கழண்டு போய்யிடுச்சுன்னு சில அடிகளோட தப்பிக்கலாம்)

5.ஆலோசனைக் கேளுங்கள்.

நீங்கள் எந்த ஒரு முடிவு எடுக்கும் போதும் மனைவியிடம் கலந்து ஆலோசியுங்கள் .அது எதைப்பற்றியது வேண்டுமானலும் இருக்கலாம். மனைவியின் கருத்தைக் கேளுங்கள் அதற்கு மதிப்பு கொடுங்ககள். ( நண்பர்களே கருத்தை கேளுங்கள்& மதிப்பு கொடுங்கள் ஆனால் உங்கள் முடிவின் படி நடங்கள்)

6. சமைக்க கற்று கொள்ளுங்கள்.

பாசத்தில் மட்டும் அல்ல சமையலிலும் கெட்டிக்காரரை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். (நண்பர்களே மனைவியிடம் சண்டைப்போட்டு சாப்பாடு கிடைக்காத நாள்களில் இது நமக்கு மிகவும் கை கொடுக்கும்.. மாதத்தில் பாதி நாள் சண்டைதானே?)

7. பேசுங்கள்

பெண்களுக்கு பேசுவது என்றால் பிடிக்கும். எனவே எல்லாவிஷயங்களைப் பற்றி பேசுங்கள். அரசியல் , பொருளாதாரம் , ஊழல், உங்கள் லட்சியம் கனவுகள். உங்கள் நண்பர்கள் அடிக்கும் சைட்டுக்கள் எல்லாவற்றையும் பற்றி பேசுங்கள். ( நண்பர்களே உண்மை வாழ்வில் பெண்கள் பேசமட்டும்தான் செய்வார்கள். கேட்கமாட்டார்கள் அப்படியே கேட்டாலும் ஏதோ பேசும் சந்தோஷத்தில் உங்களின் புதிய கேர்ல் ப்ரெண்டைப் பற்றி உளறி மாட்டிக்கொள்ளாதிர்கள்)

8.மனைவியின் குடும்பத்தில் பங்கு கொள்ளுங்கள்

உங்கள் மனைவி உங்கள் குடும்பத்தோட மட்டும் ஒட்டி போகிவிட வேண்டுமென்று நினைக்காதிர்கள். நீங்களும் மனைவியின் குடும்பத்தாரோடு ஒத்து போங்கள். ( நண்பரே நான் சொல்ல வருவது உங்களுக்கு புரிந்ததா? நீங்கள் உங்கள் மாமியார் மாமனாரோடுமட்டும் ஒத்துபோகாதீர்கள். மனைவியின் மாமியார் மாமனார் அண்ணண், தங்கைகளை ரொம்பபப நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்)

மச்சான்



அழகான ரெண்டு பொண்ணுங்க
போய்கிட்டு இருந்தாங்க...
பின்னாடியே ரெண்டு பசங்க
போனாங்க.
உடனே
ரெண்டு பொண்ணுங்களும்
ஆளுக்கு ஒரு பையன்
கைல ராக்கிய
கட்டிட்டு 'அண்ணா'னு
சொல்லுச்சுங்க.



பசங்க என்ன
சொல்லிருபாங்க ??
?
?
?
?
?
?
?
?
பையன்: டேய் மச்சான்!
என் தங்கச்சிய நீ கட்டிக்க.
உன் தங்கச்சிய நான்
கட்டிக்கிறேன்...!

நாங்கல்லாம்
சுனாமில ஷ்விமிங்க
போடுறவங்க...

Tuesday, July 26, 2011

புதிய தமிழ் திரைப்படங்களை இணையத்தில் இலவசமாக காண சிறந்த 10 தளங்கள்





இணையம் என்பது அனைத்துமே கொட்டி கிடக்கும் தகவல் களஞ்சியம். இணையத்தில் இந்த

விஷயம் கிடைக்கவில்லை என்று குறை கூறினால் நீங்கள் சரியாக இணையத்தை

தேடவில்லை என்றே பொருள். இணையத்தில் இல்லை என்பதே இல்லை அனைத்துமே

கிடைக்கும் அனால் கொஞ்சம் சிரமம் எடுத்து தேட வேண்டும். இந்த வகையில் நம் தமிழ்

திரைப்படங்களை இலவசமாக ஆன்லைனில் காண சிறந்த 10 தளங்கள் கீழே உள்ளது. இந்த

தளங்களில் சென்று லேட்டஸ்ட் ரிலீஸ் தமிழ் திரைப்படங்களை ஆன்லைனில் இலவசமாக

கண்டு களியுங்கள்.


1) Movie Lanka

இந்த தளத்தில் பல புதிய தமிழ் திரைப்படங்களின் வீடியோக்கள் காணப்படுகின்றது. புதிய

திரைப்படங்கள் முதல் பழைய திரைப்படங்கள் வரை வரிசைப்படுத்தி வைத்துள்ளனர். இந்த

தளத்தில் ஒரு பகுதி முடிந்ததும் அடுத்த பகுதி தானாகவே இயங்கிவிடும்.



2) Tamil Flix

இந்த தளத்திலும் பல புதிய படங்கள் காணப்படுகிறது. இந்த தளத்தில் திரைப்படங்களை New

Movies, Old Movies, Middle Movies என்று தனித்தனியாக வகை படுத்தி உள்ளனர். இந்த

தளத்தில் 90களில் வந்த திரைப்படங்கள் கூட பார்க்க முடிகிறது.



3) Padangal

நீங்கள் இணையத்தில் பழைய திரைப்படங்களை தேடி தேடி அலுத்து போய் விட்டீர்களா ஆம்

என்றால் உங்களுக்கான சிறந்த தளம் இது தான். இந்த தளத்தில் பழைய திரைப்படங்கள்

கொட்டி கிடக்கிறது. பழைய பட விரும்பிகள் இந்த தளத்தை பயன் படுத்தி கொள்ளுங்கள்.



4) Tamil Peek

இந்த தளத்தில் பல புதிய தமிழ் திரைப்படங்களின் வீடியோக்கள் காணப்படுகின்றது. இந்த

தளத்தில் படங்களை புதிய படங்கள் ,பழைய படங்களை என இரு வகையாக பிரித்து

வைத்துள்ளனர். தமிழ் திரைப்படங்களை காண இந்த தளமும் சிறந்த தளமாகும்.



5) Tamil tvs.com

இந்த தளத்தில் பல புதிய தமிழ் திரைப்படங்களின் வீடியோக்கள் காணப்படுகின்றது. இந்த

தளத்தில் படங்களை புதிய படங்கள் ,பழைய படங்களை என இரு வகையாக பிரித்து

வைத்துள்ளனர். தமிழ் திரைப்படங்களை காண இந்த தளமும் சிறந்த தளமாகும்.



6)Good Lanka

இந்த தளத்தில் புதிய மற்றும் பழைய திரைப்படங்களின் வீடியோ பாட்டுக்களை கேட்டு

மகிழலாம். அகர வரிசைப்படி படங்களை வரிசைப்படுத்தி உள்ளனர். உங்களுக்கு தேவையான

வீடியோ பாட்டுக்களை இந்த தளத்தில் கேட்டு மகிழலாம்.



7) Tube Kolly

இந்த தளத்தில் பல புதிய தமிழ் திரைப்படங்களின் வீடியோக்கள் காணப்படுகின்றது. புதிய

திரைப்படங்கள் முதல் பழைய திரைப்படங்கள் வரை வரிசைப்படுத்தி வைத்துள்ளனர். இந்த

தளத்தில் ஒரு பகுதி முடிந்ததும் அடுத்த பகுதி தானாகவே இயங்கிவிடும்.



8)TamilVix

இந்த தளத்திலும் பல புதிய படங்கள் காணப்படுகிறது. இந்த தளத்தில் திரைப்படங்களை New

Movies, Old Movies, Middle Movies என்று தனித்தனியாக வகை படுத்தி உள்ளனர். இந்த

தளமும் இலவசமாக திமில் திரைப்படங்களை காண சிறந்த தளமாகும்.


9) Rajshree

இந்த தளத்திலும் தமிழ் திரைப்படங்களை இலவசமாக பார்த்து ரசிக்கலாம்.



10) Thiruttu VCD

இந்த தளத்திலும் தமிழ் திரைப்படங்களை இலவசமாக பார்த்து ரசிக்கலாம்.

பெண்களிடம் நல்ல பெயர் வாங்க ஆண்களுக்கு சில ஐடியாக்கள்...

ஆண்கள் என்ன செய்தாலும் பெண்களிடம் நல்ல பெயர் வாங்க முடிவதில்லை. எப்போது பார்த்தாலும் சண்டைகள் மட்டுமே. இந்த பிரச்சனை தீர சில ஐடியாக்கள இங்கே உங்களுக்கு....

1.காலையில் எழுந்தவுடன் ஹாய்.. குட் மார்னிங்' ன்னு ஒரு SMS அனுப்பணும். உன் குரலை கேட்டாத்தான் இன்னைக்கு பொழுதே நல்லபடியா விடியுதுன்னு ஒரு அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விடணும் (ஒரு ரூபாய் செலவுதான். என்னங்க பண்றது? பண்ணித்தான் ஆகணும்.) இதே விஷயத்தை ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடியும் நீங்க செஞ்சாகணும்.

2. அவங்களைப் பார்க்க போறதுக்கு முன்னாடி உங்க செல் ஃபோனோட ஸ்கிரீன் சேவர்'ல அவங்களோட புகைப்படத்தை கண்டிப்பா வெச்சுக்கணும். (எப்பவும் உன் முகத்தையே பார்த்துகிட்டே இருக்கணும்'ன்னுதான் இந்த மாதிரி வெச்சிருக்கேன்னு சொல்லுங்க. இதுலையே அவங்க க்ளீன் போல்ட் )

3. அவங்க பேரோட முதல் எழுத்தை பைக் கீ- செயின்'ல தொங்க விட்டுக்குங்க. எப்பவும் நீ என் கூடவே இருக்கணும்'ன்னுதான் இந்த மாதிரி செய்யுறேன்னு ஒரு பிட்டை விடுங்க. அப்புறம் பாருங்க...

4. சினிமாவுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா, படத்தை பார்க்கறீங்களோ இல்லையோ கண்டிப்பா ஐந்து நிமிஷத்துக்கு ஒரு வாட்டி அவங்களை திரும்பி திரும்பி பார்க்கணும். எதுக்கு என்னையே பார்க்குறீங்கன்னு கேட்பாங்க. உன்னைப் பார்க்கும் போது இருக்கிற சுவாரஸ்யம் படம் பார்க்கும் போது இல்லைன்னு நீங்க சொல்லணும். (வேற வழி இல்லைங்க. இந்த மாதிரி எல்லாம் நாம டயலாக் விடணும்'ன்னு அவங்க எதிர்பார்ப்பாங்க)

5. அவங்க பேர்ல நிச்சயம் ஏதாவது தமிழ் பாட்டு வந்திருக்கும். அந்த பாட்டை எப்படியாவது தேடி கண்டுபிடிச்சு ரிங்டோனா வெச்சுக்குங்க. அவங்க உங்ககிட்ட சண்டை போடும்போது, உங்க ஃபிரண்டைவிட்டு உங்க நம்பருக்கு கால் பண்ண சொல்லுங்க. அந்த பாட்டு வந்த உடனே அவங்களை பாருங்க. சண்டை எல்லாம் எங்கே போகுதுன்னே தெரியாது.




6. கவிதைங்கிற பேர்ல எதையாவது நீங்க கிரீட்டிங் கார்ட்ல கிறுக்கிக் கொடுத்தே ஆகணும். அந்த கவிதைகள்'ல வானம், கடல், குயில், தேவதை, மயில், போன்ற வார்த்தைகள் கண்டிப்பா இருந்தே ஆகணும்.

7. "நீ ரொம்ப அழகா இருக்கே"ங்கிற அகில உலக பொய்யை ஒரு நாளைக்கு ஐந்து வாட்டியாவது நீங்க சொல்லியே ஆகணும். (இதுக்கு நீங்க கடவுள்கிட்ட தனியா மன்னிப்பு கேட்டுக்குங்க)

8. ஹோட்டலுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா ஃபர்ஸ்ட் நீங்க ஆர்டர் பண்ணக்கூடாது. மெனு கார்டை அவங்க கையில கொடுத்து, அவங்களைத்தான் ஆர்டர் பண்ண சொல்லணும். புரியுதா? (பெண்களோட உணர்வுகளுக்கு நீங்க மதிப்பு கொடுக்குறவர்'ன்னு அவங்களுக்கு தெரியணும் இல்லை. அதுக்குத்தான்)

9. அவங்க எப்படித்தான் ட்ரஸ் பண்ணாலும், " இந்த ட்ரஸ்'ல நீ தேவதை மாதிரி இருக்கேன்னு மனசாட்சியை கழட்டி வெச்சிட்டு பொய் சொல்லணும்". (ராத்திரியில நீங்க தூங்கும் போது தேவதைங்க உங்க கண்ணை குத்தும். சமாளியுங்க)

10. ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம். அவங்க தோழிங்ககிட்ட பேசும்போது ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அவங்க தோழிங்களை நீங்க கண்டுக்காத மாதிரியே இருக்கணும். ஏன்னா பல பிரச்சனைகளோட தொடக்கம் இங்கே இருந்துதான் ஆரம்பிக்குது.
இந்த விஷயங்களை எல்லாம் கடைபிடிச்சு பாருங்க. உங்க காதலி உங்களை தலையில தூக்கி வெச்சு கொண்டாடுவாங்க.

நீங்காத நினைவுகள்...

தேய்ந்தாலும்
வானை விட்டு நீங்காத
பிறையை போல...
உதிர்ந்தாலும்
மலரை விட்டு நீங்காத
காம்பை போல...


மறைந்தாலும்
ஆகாயத்தை விட்டு நீங்காத
சூரியனை போல...
வற்றினாலும்
நீரை விட்டு நீங்காத
ஈரத்தை போல...

நீ மறந்தாலும்
என் நெஞ்சை விட்டு
நீங்காதடி உன் நினைவுகள்...

தாயே !!


உன் உயிர் தந்து
என் உயிர்
வளர்த்த தாயே !!

தரணியில் நானும்
அவதாரம் எடுத்திட
துணையாய்
இருந்தவளே !!

ஈரைந்து மாதங்கள்
எனை கருவாய்
வயிற்றில்
சுமந்தவளே !!

பசியால் நீ
வாடிடும் போதும்
நான் பசியறியாது
செய்தவளே !!

நோயினால் நீ
வாடிய போதும்
என் மனம்
நோகாமல்
பார்த்தவளே !!

உன்னை
என்னவென்று
நான் சொல்வேன்...
நீ தெய்வம் என்று
சொன்னால் கூட
உனக்கு அது
இழுக்கு தான்...!!

நீ தெய்வத்துக்கு
மேலே தான்
என் மனதில்...!!

Monday, July 25, 2011

எ ஆர் ரகுமானின் அரிய புகைப்படங்கள்

































அம்மா என்பவள் காத்திருப்பவள்


நினைவுகள் எல்லாம்

சரியாக இருக்கும் பட்சத்தில்

அம்மா என்பவள்

மெலிந்த தேகமும்

கந்தலான உடையும் அணிந்தவள்

சமையல் பாத்திரங்களுக்கு முன்பு

வியர்வை துடைப்பவள்

நெருப்பை சீராக வளரவிடுபவள்

அழுக்குத் துணிகளை அள்ளிக்கொண்டுபோய்

ஆற்றிலே அலசுபவள்

அவை உலரும் நேரத்தில்

கரையோரக் காடுகளில் நட்ட

யூகலிப்டஸ் கன்றுகளுக்கு நீர் வார்ப்பவள்.

நினைவுகள் எல்லாம்

சரியாக இருக்கும் பட்சத்தில்

அம்மா என்பவள்

வயலில் விளைந்த காய்கறிகளை

கூடைகளில் விற்பவள்

மீந்தவற்றை உப்பு சேர்த்து உலர வைப்பவள்

நள்ளிரவுவரை

பொட்டல்களில் அறுத்த

உளுந்தம்பயறுகளை

திருவைகளில் வைத்துத் திரிப்பவள்

அம்மா என்பவள்

குழந்தைகளை உறங்கவைத்து

கணவனுக்குக் காத்திருப்பவள்

மூன்றாம் ஜாமத்தில்

பணிவிடைகள்போல் சிலவற்றை

தன் கணவனுக்கு செய்ததை

பிள்ளைகள் அறிந்த பின்னும்

வெட்கமற்ற அதிகாலையில்

ஊறவைத்த தானியங்களின் மேல்

உலக்கை குத்துபவள்

நினைவுகள் எல்லாம்

சரியாக இருக்கும் பட்சத்தில்

அம்மா என்பவள்

வறுத்த கம்பு மாவரைத்து

உலர்ந்த ஈசல்களில் கருப்பட்டி தூவி

கலந்து தருபவள்

உமிகள் கட்டிய துணியை

சூடாக்கி ஒத்தடம் தருபவள்

அம்மா என்பவள்

பணியாரம் சுட்டவள்

வடித்த சுடுகஞ்சியில்

தனது கணவனது வேட்டியை முக்கி எடுப்பவள்

பொதுவில் அழியவிட்ட

குளத்து மீன்களை உளசுபவள்

சேவற்கட்டில் ஜெயித்த சேவல்களின் இறகுகளை

வெந்நீரில் கொய்து

குழம்பு சமைப்பவள்

கிண்ணிக் கோழி முட்டைகளை

அடை வைப்பவள்

தன் மகள் ருதுவான நாட்களில்

கால்களைக்கட்டிக்கொண்டு அழுதவள்

நினைவுகள் எல்லாம்

சரியாக இருக்கும் பட்சத்தில்

எனக்குத் தெரியாததெல்லாம்

மாதா கோயில் மணியோசைக்கு

தனது சமையற்கட்டில் முக்காடிட்டு

ஏன் கண்ணீர் சொரிந்தாள் என்பதும்

ரசத்திற்கரைத்த அம்மியில்

ஏன் அரளி விதைகளைத் தட்டினாள் என்பதும்

எனது சந்தேகமெல்லாம்

கஞ்சியிலிட்ட விறைத்த ஆடைகள்

பொதுவில் அழியவிட்ட மீன்கள்

மற்றும் உடல் முறுக்கி பட்டை கழற்றும்

அந்த யூக்லிப்டஸ் மரங்களின் மீதும்தான்.


நன்றி: செல்மா ப்ரியதர்ஸன்.

_நான் ரசித்த கவிதைகளுடன்.. ப்ரியமுடன்

கடவுள் சிறிது காதல் பெரிது


மழை வருவதற்கு முன் பொழுது.

உன்னுடன் நான் நடக்கிறேன்.

எதிர்ப்படும் எல்லோருமே

தேவதைகளாய்த் தெரிகின்றனர்.

பின்வரும் எல்லோருமே

அட்சதை சொரிகின்றனர்.


"குடை இல்லையா..?"

எனக்கேட்கிறாய்.

தனித்தொலிக்கிறது உனது குரல்

இனிப்புவழியும் கட்டளைகளை

உற்பத்தி செய்யும் தொழிற்சாலை.


ஓடிச்சென்று ஒரு குடையினைக்

கொண்டு வருகிறேன்.

மெல்லத் தூறல் தொடங்குகிறது.

பள்ளி சென்று வீடு மீளும்

குழந்தையொன்றின்

கைகளில் குடை திணிக்கிறாய்.


சாலை முடிவுவரை

திரும்பிப்பார்த்துக் கைகாட்டியபடியே

செல்லும் குழந்தையை

புன்னகைத்துக்கொண்டே

வழியனுப்புகிறாய்.


கொட்டுகிறது மழை.

கோபமறைத்த குரலில்

சொல்கிறேன்.

"குடை உனக்கென்று தானே கொணர்ந்தேன்."

என்று.


சிரித்துக்கொண்டே கேட்கிறாய்..

அந்தக் குழந்தை நானில்லையா?

என்று.


அமைதி காக்கிறேன்.

பின் மௌனமாய் முனகுகிறேன்.

"நன்றாக நனைந்துவிட்டாயே?"

என்று.


இடுப்பில் கைகளை இருத்திக் கொண்டு

முறைத்தபடி கேட்கிறாய்.

"அந்த மழை நீயில்லையா?"

என்று.


புன்சிரிக்கிறேன்.

- நான் ரசித்த கவிதைகளுடன் .. ப்ரியமுடன்


Sunday, July 24, 2011

இப்படியெல்லாம் SMS வந்தா என்ன பண்றது...?



வெல்லும் வரை தோல்வி..!
சிரிக்கும் வரை கண்ணீர்...!
உதிரும் வரை பூக்கள்...!
மறையும் வரை நிலவு...!
மரணம் வரை நம் நட்பு...!


**************************


விரும்பிய ஒருத்தரை மட்டும்
சொந்தமாக்கிக் கொள்ளும் காதல்...!
விரும்பிய அனைவரையும்
சொந்தமாக்கிக் கொள்ளும் நட்பு..!

\
**************************


நம் நட்பை ஓவியமாய் வரைய நினைத்தேன்
ஆனால் முடியவில்லை..!
ஏன் தெரியுமா..?

ரோஜாவை வரைந்து விடலாம்
அதன் வாசத்தை எப்படி வரையமுடியும்...!


**************************


கண்ணில் ஒரு மின்னல்...
முகத்தில் ஒரு சிரிப்பு...
சிரிப்பில் ஒரு பாசம்...
பாசத்தில் ஒரு நேசம்...
நேசத்தில் ஒரு இதயம்...
அந்த இதயத்தில்
என் இனிய நண்பன் நீ...


***********************


கண்ணீர் எனக்கு பிடிக்கும்
அ‌து எனக்கு கவலை இருக்கும் வரை...
இரவுகள் எனக்கு பிடிக்கும்
அது உண்மையாய் பிடிக்கும்...

உன் நட்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்
அது என் உயிர் பிரியும் வரை...!

*****************************

இந்த நட்புக் கவிதைகள் என் கைபேசியில்
குறுந்தகவல்களாக வந்தவைகள்...
இவைகள் யாருக்கு சொந்தமென்று எனக்கு தெரியாது...

தீயில் குளித்தாலும்
சாம்பல்தட்டி எழும் பீனிக்ஸ் போன்று
என்றும் உயிர் வாழ்பவைகள் இவைகள்...

ரசியுங்கள் அனைத்தையும்...
தங்கள் வருகைக்கு நன்றி..!

Loading...
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More