'ரவுத்திரம்' பட பாடல் வெளியீட்டு விழாவிற்கு ஜீவா, ஸ்ரேயா, ஆர்யா, ஜெயம் ரவி என நட்சத்திரங்களுடன் விக்ரமன், கே.எஸ்.ரவிகுமார், வெற்றி மாறன், லிங்குசாமி, ராஜேஷ் என டைரக்டர்கள் பட்டாளமும் வந்த¤ருந்தது. இதில் ஆர்யா பேசும்போது, ‘'எல்லோரும் ஜீவா, டெக்னிஷீயன்கள் பற்றி பேசிவிட்டார்கள். நான் ஸ்ரேயாவை பற்றி பேசுகிறேன். அவர் கடின உழைப்பாளி. அவருடன் ஒரு படத்தில் நடித்திருக்கிறேன். எந்த காட்சியாக இருந்தாலும் அதை விரிவாக கேட்டு நடிப்பார்" என்று ஐஸ் வைத்தார். அதை கேட்ட ரவிகுமார், ‘'ஸ்ரேயா பக்கத்துல கொஞ்ச நேரம் தானய்யா உட்கார்ந்தே, அதுக்குள்ள இவ்வளவு பில்டப்பா?" என்று தமாஷ் செய்தார்.
அடுத்து பேச வந்த ராஜேஷ், ‘'ஆர்யா எப்போது பேசினாலும் ஹீரோயினை பற்றித்தான் பேசுவார். 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க ஜீவாவை கேட்டேன். பலமுறை சந்திப்புக்கு பிறகு ஓ.கே. சொன்னார். ஷூட்டிங் நேரத்தில் ஜீவாவும், ஆர்யாவும் பேச ஆரம்பித்தார்கள். 'ரவுத்திரம்' படத்தில் நடிக்கும் ஸ்ரேயா பற்றி ஜீவா சொல்ல ஆரம்பித்தார். உடனே ஆர்யா, ‘ஆமாம் மச்சான். அவங்க இப்படி டான்ஸ் ஆடுவாங்க, அப்படி நடிப்பாங்க. எவ்ளோ அழகு தெரியுமா?' என்று மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருந்தார்கள். ஷூட்டிங் நடக்கவில்லை. பொறுக்க முடியாமல் நான் இடையில் புகுந்து ‘ரெண்டுபேரும் கொஞ்ச நேரம் நடிக்க வாங்க' என்று சத்தம் போட்டபிறகுதான் நடிக்கும் மூடுக்கு வந்தார்கள் என்று கிண்டலடித்தபோது அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.
அடுத்து பேச வந்த ராஜேஷ், ‘'ஆர்யா எப்போது பேசினாலும் ஹீரோயினை பற்றித்தான் பேசுவார். 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க ஜீவாவை கேட்டேன். பலமுறை சந்திப்புக்கு பிறகு ஓ.கே. சொன்னார். ஷூட்டிங் நேரத்தில் ஜீவாவும், ஆர்யாவும் பேச ஆரம்பித்தார்கள். 'ரவுத்திரம்' படத்தில் நடிக்கும் ஸ்ரேயா பற்றி ஜீவா சொல்ல ஆரம்பித்தார். உடனே ஆர்யா, ‘ஆமாம் மச்சான். அவங்க இப்படி டான்ஸ் ஆடுவாங்க, அப்படி நடிப்பாங்க. எவ்ளோ அழகு தெரியுமா?' என்று மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருந்தார்கள். ஷூட்டிங் நடக்கவில்லை. பொறுக்க முடியாமல் நான் இடையில் புகுந்து ‘ரெண்டுபேரும் கொஞ்ச நேரம் நடிக்க வாங்க' என்று சத்தம் போட்டபிறகுதான் நடிக்கும் மூடுக்கு வந்தார்கள் என்று கிண்டலடித்தபோது அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.
0 comments:
Post a Comment