தேவையானவை
- கோழி கறி - அரைக் கிலோ
- பெரிய வெங்காயம் - ஒன்று
- தக்காளி - 3
- பூண்டு - 5 பல்
- இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
- வரமிளகாய் - 2
- கறிவேப்பிலை - 5 இதழ்
- மல்லித் தழை - சிறிது
- சோம்பு - ஒரு மேசைக்கரண்டி
- மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி
- மல்லித் தூள் - ஒரு மேசைக்கரண்டி
- மிளகு தூள் - அரை மேசைக்கரண்டி
- மஞ்சள் தூள் - அரை மேசைக்கரண்டி
- கடுகு - சிறிது
- எண்ணெய் - தாளிக்க
- செய்முறை
- முதலில் சிக்கனை கழுவி மஞ்சள் தூள் மற்றும் உப்பு சிறிது சேர்த்து வைக்கவும். பெரிய வெங்காயத்தை நீளமாக நறுக்கவும். பூண்டு மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கவும். கறிவேப்பிலை மற்றும் வரமிளகாயை கிள்ளி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சோம்பு, கறிவேப்பிலை மற்றும் வரமிளகாயை போட்டு தாளிக்கவும்.
- பின் பூண்டு மற்றும் வெங்காயத்தை சிறிது உப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- வெங்காயம் வதங்கிய பின் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசம் போகும்படி வதக்கி தக்காளியை சேர்த்து குழையும் வரை வதக்கவும்.
- பின் ஊற வைத்துள்ள கோழிக் கறியை சேர்த்து நன்கு பிரட்டி 5 நிமிடம் வேக விடவும்.
- பின்பு மிளகுத் தூள் தவிர கொடுத்துள்ள மற்ற தூள் வகைகளை தேவையான உப்புடன் சேர்த்து நன்கு கிளறி மூடி வைக்கவும்.
- எண்ணெய் பிரிந்து வரும் நிலையில் மிளகு தூளை சேர்த்து மல்லித் தழையையும் போட்டு கிளறி 2 நிமிடம் வேக விடவும்.
- இப்போது சுவையான கோழி பொரியல் தயார். இறக்கிய பின் விரும்பினால் தேங்காய் துருவல் சிறிது சேர்க்கலாம்.
- அசைவம்
0 comments:
Post a Comment