புல்வெட்டிகளின் இடுக்குகளூடு பச்சையம் சாறு மணக்க மணக்க புழுங்கித் தவிக்கிறது கோடை பூ உதிர்க்கும் மரங்களினடியில் மரக்கதிரைகளிலும் மேசைகளிலும் உதிர்ந்து கிடக்கின்றன கடைசியாய் நாம் பேசிக் கொண்ட வார்த்தைகள் சிகரட் புகை; பிடிக்குமா பிடிக்காதா? உன்னவன் பிடிப்பானா பிடிக்க மாட்டானா? அபத்தமாய் நீண்டது பேச்சு தெருவைக் கடந்து பறித்த ரோஜாவும் பெயரறியாப் பூவும் பொறுக்கி பூச்சொண்டோன்றை தந்தேன் என் பேரால் தண்ணீர் தெளித்து வைத்திருந்தாய் நாம் மீண்டபின் உன் நடுங்கும் கைகளால் தடவி தவறி உடைத்த பின்னும் விம்பங்களாய் சிதறிக் கிடக்கிறது கண்ணாடி பதறி அள்ளிய என் கைகளுக்கு உன் கண்ணொன்றே கொள்ளக் கிடைத்தது; அதைச் சொல்லி முடிக்க முன் அவசரப்பட்டு அந்தப் பூவுக்கு என் பெயரையா வைத்து மீண்டாய்? - அவளுக்கே..!!
Saturday, July 23, 2011
ஒரே ஒரு தோழிக்கு..!!
Loading... |
0 comments:
Post a Comment