Blogroll

Tuesday, November 8, 2011

மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்!




கணவன் மனைவி என்று இருந்தால் அங்கு பிரச்சனை இல்லாமலா இருக்கும். ஆனால் அவ்வப்போது எழும் பிரச்சனைகளை அப்பொழுதே மறந்துவிட்டால் இல்லறம் நல்லறமாக இருக்கும். இல்லை என்றால் திருமண வாழ்க்கை கசந்துவிடும்.

மனைவிகளிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்,

1. எப்பொழுது பார்த்தாலும் நை, நை என்று நச்சரிப்பது. என்னங்க வீட்டுக்கு ஒரு புது டிவி வாங்கலாம், புது டிசைன் நகை வாங்கலாம் என்று பெரிய பட்டியல் போடுவது. கணவன் வரவுக்கேற்ப செலவழித்தால் நல்லது.

2. கேள்வி கேட்டே கொல்வது. அலுவலக்ததில் இருந்து வீ்ட்டுக்கு வர நேரமாகிவிட்டது என்றால் அவ்வளவு தான். ஏன் லேட், எங்கே போனீங்க, யாரைப் பார்த்தீங்கன்னு பல கேள்விகள். ஏற்கனவே எரிச்சலில் வந்திருக்கும் கணவனை இந்த கேள்விகள் மேலும் எரிச்சலூட்டும்.

3. நான் செய்வது தான் சரி என்கிற எண்ணம் கணவன்மார்களை கடுப்பாக்கும்.

4. என்னை ஸ்போர்ட்ஸ் சேனல் பார்க்க விட மாட்டேன் என்கிறாள். ஆனால் அவள் மட்டும் எப்பொழுது பார்த்தாலும் சீரியல் பார்த்து என்னை வதைக்கிறாள் என்று கணவன்மார்கள் புலம்புகிறார்கள்.

5. நிம்மதியா கார் ஓட்ட விட மாட்டேன் என்கிறாள். அப்பொழுது கூட ஏதாவது பிரச்சனையைப் பற்றி பேசி இம்சிக்கிறாள்.

6. அவளுக்கு உதவலாமே என்று சமையல் அறைக்குள் சென்றால், நீங்க வேலைப் பார்த்து கிழிச்சீங்க. எனக்கு ஒன்னுக்கு இரண்டு வேலை வைக்காம போங்க என்று விரட்டுகிறாள்.

7. நான் அவளுக்கு மட்டுமே சொந்தம் என்று நினைக்கிறாள். என் பெற்றோரைக் கூட அண்டவிட மாட்டேன் என்கிறாள். என்னையே என் பெற்றோருக்கு எதிராகத் திருப்ப முயற்சி செய்கிறாள்.

8. உடன் பிறப்புகளுடன் பேசவிட மாட்டேங்கிறா. பேசினால் இட்டுகட்டி ஏதாவது குற்றம்குறை கூறுகிறாள்.

9. நண்பர்களுடன் வெளியே செல்ல முடியவில்லை. நான் முக்கியமா, இல்லை உங்களுக்கு நண்பர்கள் முக்கியமா என்கிறாள்.

10. திடீர், திடீர் என்று கோபப்படுகிறாள். காரணம் கேட்டால் திட்டித் தீர்த்து விடுகிறாள்.

என்ன பெண்களே, இந்த தவறுகளைத் திருத்திக் கொண்டு கணவன் மெச்சும் மனைவியாக நடக்க முயற்சி செய்வீர்களா?

0 comments:

Post a Comment

Loading...
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More